கவிதை: பெண்ணியம்

கவிதை: பெண்ணியம்

பெண்ணிற்கு
இலக்கணம் வகுத்தவன்
அழுது கொண்டிருக்கிறான் !

பெண்ணையே
தெய்வமென போற்றியவன்
துடித்துக் கொண்டிருக்கிறான் !

பெண்ணையும்
அவளின் அங்கங்களையும்
விழி தராசுகளில் எடைபோட்டு
களவாடப் பார்க்கும்
கள்வர்களின் கைகளில்
எப்போது தீப்பிடிக்கும்?

நடந்தால்
சிரித்தால்
குனிந்து எதையாவது
எடுத்தால் கூட
போக உணவு கிட்டிய மகிழ்ச்சியில்
ஓர் ஆணினம்.

இந்தியப் பெண்கள்
அறிவில் - அழகில்
வல்லவர்கள் தாம்!
ஆனால்...
நெறிதவறா சிற்பங்கள்!

ஒவ்வொரு பெற்றோரும்
பெண்ணைப் பிரசவித்து
கூடவே
ஒரு நெருப்பு வளையத்தையும்
இட்டே வளர்க்கின்றனர்...

பெண்ணினம்
அடிமை என்பது பழையது !
பெண்ணினம்
போர் வாள் என்பது புதியது !

ஓர் ஆணின்
வாழ்வை விடவும்
பெண்ணின் வாழ்வு
சுமை கூடியது
சுவையானது.

பெண்ணைப் பெறுவதனால்
இனிவரும் சந்ததி
விருத்தியடையும்
முக்தியடையும் என்பது உண்மை.

பெண்ணின்
வயிற்றிலிருந்து வந்து
பெண்ணையே குறிவைக்கும்
மானுடம் இனி சாகும்.

இது ஓர் ஆண் கருவுற்று
பிரசவித்தது போலுணர்ந்தால் மட்டுமே
பெண்ணின் மகத்துவம்
ஆண்மன அடியாழத்திற்குள்
செல்லும்.

பெண்ணின் கற்பு
சிதைக்கப்படுமாயின்
இனிவரும்
பூகம்பம் கூட அவனை
விழுங்கிவிடும் என்பது திண்ணம்.

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue