Posts

Showing posts from June, 2009
"பள்ளியும் பாயும் பசப்பு' இடைமருதூர் கி.மஞ்சுளா First Published : 28 Jun 2009 01:45:00 AM IST Last Updated : கதிரவன் மேற்றிசையில் மறையும் அந்தி மாலைப்பொழுது. காதல் ததும்பும் விழிகளை உடைய மகளிர் துன்பப்பட வேண்டும் என்பதற்காகவே வரும் மாலைப்பொழுது. அப்போது தெருவில் ஒரு பூக்காரி கூடை நிறைய முல்லைப் பூக்களைச் சுமந்து செல்கிறாள். அவளைக் கூப்பிட்ட புதுமணப் பெண் ஒருத்தி, அந்த மலர்களை விலைக்கு வாங்குகிறாள். வாங்கிய மலர்களை வீட்டின் முற்றத்தில் கிடந்த சிறுகட்டிலின் மேல் உள்ள மெத்தையில் தூவுகிறாள். ஆனால் அவளது விழிகள் கண்ணீர் சிந்துகின்றன. "இன்றாவது வருவாரா?' என்று அவளது செவ்விதழ் முணுமுணுமுத்தன.வீட்டு வாசலில் வந்து நிற்கிறாள். மெல்ல மெல்ல அந்திப் பொழுது தேய்ந்து இருள் சூழத் தொடங்குகிறது. அம் மாலைப் பொழுதைக் கண்டு வருந்துகிறாள். ""மாலைப் பொழுதே! நீ, முற்காலத்தே வந்த மாலைப் பொழுதா? இல்லை, இல்லை மணந்த மகளிர் பிரிவுக் காலத்தில் அவர் உயிர் உண்ணுகின்ற எமனாக இருக்கிறாய் நீ'' என்று பழிக்கும் அவள், ""ஐயோ, பாவம், மயங்கிய மாலைப் பொழ
இந்த வாரம் கலாரசிகன் கலாரசிகன் First Published : 28 Jun 2009 01:38:00 AM IST Last Updated : பாரதியாரைத் திருவாவடுதுறை ஆதினம் ஏன் கௌரவிக்கவில்லை என்கிற கேள்விக்கு, நான் ரயிலில் சந்தித்த தமிழ்ப் பேராசிரியரின் விளக்கம் தவறு என்பது நண்பர் ராஜ்கண்ணனின் கருத்து. யாரோ எதையோ சொல்வதை எல்லாமா பதிவு செய்வது என்கிற அவரது கேள்வியில் நியாயம் இருப்பதாக எனக்குப் படுகிறது. தவறுகள் திருத்தப்படுவதுதானே முறை? அவரது கடிதம்~ ""திருவாவடுதுறை ஆதீனம் தமிழ் வளர்க்கும் பண்ணை என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. எனினும் "சைவத்தின் மேற்சமயம் வேறில்லை' என்பதும் "சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை' என்பதும் அந்தத் திருமடத்தின் உயிர்நாடியான கொள்கைகள்.பாரதியாரோ கணபதி, முருகன், சிவன், சரஸ்வதி, லட்சுமி, கண்ணன், கோவிந்தன், முத்துமாரி என்று எல்லா கடவுளையும், ஏன், அல்லா, ஏசு கிறிஸ்து என்று பிற மதக் கடவுளர்களையும்கூட போற்றிப் பாடியிருக்கிறார். தம் கவிதையில் ஓரிடத்தில் அவர்,"உண்மையின் பேர் தெய்வம் என்போம் - அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்!' எ
இலக்கியங்களில் " அம்பலும் , அலரும் ' மா . உலகநாதன் First Published : 28 Jun 2009 01:32:47 AM IST Last Updated : சங்க இலக்கியம் தமிழின் , தமிழனின் தாய் இலக்கியம் ; உலக இலக்கியங்களின் சிகரம் ; உலகத்தாரின் வாழ்க்கை முறைகள் பற்றிப் பேசுவது . அதனால்தான் அது உலகப் பொது இலக்கியம் என்று கூறப்படுகிறது . அம்பலும் அலரும் இன்று நேற்று ஏற்பட்டதல்ல . அவை சங்க காலந்தொட்டே நிகழ்ந்து வந்திருக்கின்றன என்பதை பல இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன . அன்று நிகழ்ந்த ஊர்வம்பு பேசுதலை , " அம்பல் ' என்றும் " அலர் ' என்றும் அக்கால மக்கள் வழங்கி வந்தனர் . அம்பல் என்றால் தலைவனும் தலைவியும் கொண்ட களவுக் காதலை பலரும் அறிந்து , பழித்துக் கூறல் என்றும் , அலர் என்பது சிலர் மட்டுமே அறிந்து புறங்கூறுதல் என்றும் பேரகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது . அன்றைய அம்பலும் அலரும் இன்று பேசப்படும் கிசுகிசுக்களைப் போலன்றி , நன்மையின் நிமித்தமாகவே பேசப்பட்டிருக்கின்றன என்பதையும் அறிய முடிகிறது . ஊர்வம்பு என்றாலே ஆண்களைவிட பெண்களுக்கு
Image
நல்வழி தினமணி First Published : 21 Jun 2009 01:55:57 AM IST Last Updated : ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச் சாவாரை யாரே தவிர்ப்பர் - ஓவாமல் ஐயம்புகு வாரை யாரே விலக்குவார் மெய்அம் புவியதன் மேல். (பா-13)அழகிய இம்மண்ணுலகின் மீது உண்மையாக வாழ்கின்றவரை அழித்திட எவருமே இல்லை. அதைத் தவிர, இறக்கக் கூடியவரை இறவாமல் தடுத்து நிறுத்தக் கூடியவர் எவரும் இல்லை. ஓய்வின்றி பிச்சையெடுக்கச் செல்பவரை, பிச்சையெடுக்காமல் தடுப்பவரும் யாருமில்லை. எனவே, வினைப்பயனால் ஏற்படும் இன்ப, துன்பங்களை எவராலும் தடுக்க முடியாது.
Image
இணையற்ற காவியத்தில் இலக்கணத் தம்பி! மா. ஆறுமுக கண்ணன் தினமணி First Published : 21 Jun 2009 01:58:08 AM IST Last Updated : உலகில் உண்டான உறவுகள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவை. எனினும், உருவான உதரம் ஒன்று என்ற ஒரே காரணத்துக்காக ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் சகோதரப் பாசம் வியக்கத்தக்கதன்றோ! அதனால்தானோ என்னவோ காலத்தை வென்ற ராமாயணத்தில் சகோதரப் பாசத்தைப் பிரதானமாகக் காட்டுகிறார் கம்பர்.யாவரோடும் அன்பைக் கடைப்பிடிக்க வேண்டும் என போதிக்க வந்த ராமன் பிறந்ததோ மூவரோடு. அவர்கள் நால்வரும் ஆனதோ இரண்டு ஜோடிகளாக. ராம-லட்சுமணனாகவும், பரத-சத்ருகனனாகவும் அவர்கள் சேர்ந்தே வளர்கின்றனர். திருமண விழா ஒன்றைக் காட்டும் பாடலில் கம்பர் பாடிய "பருந்தொடு நிழல் சென்(று) அன்ன' என்ற வரிகள் இங்கு ராம-லட்சுமணனின் பாசத்தை விளக்க பொருத்தமானதாகிறது.விழாவில் சங்கீதக் கச்சேரி நடைபெறுகிறது. பாட்டுக்கு இசையாமல் இசை அதன் பாட்டுக்குச் சென்றால் செவிகளுக்கு நாராசம். பாட்டும் இசையும் பக்குவமாக இசைந்தால் பருகும் செவிகளுக்கு இன்ப விருந்து. இங்கு பாட்டோடு இசை பாலில் சுவையென கலந்த
Image
புரட்சிப் புலவரும் ஆற்றுப்படையும் வி.நாகசுந்தரம் தினமணி First Published : 21 Jun 2009 01:59:32 AM IST Last Updated : கடைச்சங்க காலத்து 473 புலவர்களுள், மிகச்சிறந்த புலவராக, தமிழ் மொழியின் பொருள் இலக்கணச் சிறப்பைக் காப்பதற்காக, இறையனார் யாத்த "கொங்கு தேர் வாழ்க்கை' (குறுந்தொகை) என்னும் பாடலில் பொருட்குற்றம் கண்டு, இறையனாரையே எதிர்த்து வாதம் செய்த மாபெரும் "புரட்சிப்புலவர்' மதுரை கணக்காயர் மகனார் நக்கீரர். நக்கீரர், பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடையும், எட்டுத்தொகை நூல்களுள் குறுந்தொகை (8), நற்றிணை(7), அகநானூறு(17), திருவள்ளுவமாலையில் முதல் பாடலும் இவர் இயற்றிய பாடல்களாகத் தெரியவருகிறது. மேலும் இவரது தனிப்பாடல்களும் உள்ளன. இவர் இயற்றியதாகக் கருதப்படும் "நாலடி நாற்பது' என்றொரு நூல் உண்டென்றும், அந்நூல் அவிநயர் யாப்புக்கு அங்கமாக உள்ள யாப்பிலக்கணநூல் என்றும் யாப்பருங்கல விருத்தி முதலிய நூல்களால் அறிய முடிகிறது."கீதவிசை கூட்டி வேதமொழி சூட்டு கீரர்' என்ற திருப்புகழ் அடிகளால் இவர் வடமொழியிலும் வல்லவர் என அறிகிறோ
நல்வழி First Published : 07 Jun 2009 12:24:00 AM IST Last Updated : ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும் என்நோவு அறியாய் இடும்பைகூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது. (பா-11) துன்பத்தை அதிகப்படுத்துகிற எனது வயிறே! ஒரு நாளுக்கு உணவை உண்ணாது இரு என்றால் இருக்க மாட்டாய். கிடைக்கும் போது, இரு நாளுக்குரிய உணவை ஏற்றுக்கொள் என்றால், ஏற்கமாட்டாய். ஒருநாளும் எனது துன்பத்தை அறியாமல் இருக்கின்ற உன்னோடு வாழ்வது பெரும்பாடாக இருக்கின்றது.
இந்த வாரம்: கலாரசிகன் தினமணி First Published : 07 Jun 2009 12:30:00 AM IST Last Updated : ரசனை உள்ளவர்கள்தான் கவிஞர்களாக முடியும். நல்ல கவிஞர்கள் நல்ல ஓவியர்களாகவும் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால், ஓவியத் திறமை பெற்ற கவிஞர்கள் ஒரு சிலரே. அந்த வரிசையில் கவிஞர் பெருமாள் ராசுவுக்குத் தனியிடம் நிச்சயமாக உண்டு. அவரது "பிரணவப் பிரவாகம்' என்கிற கவிதைத் தொகுப்பு ஓர் அற்புதமான படைப்பு என்பது மட்டுமல்ல, அரிய முயற்சியும் கூட. திருவேங்கடத்தில் தொடங்கி இந்தியாவிலுள்ள 150 திருத்தலங்களைச் சுற்றிவந்து 151-வதாகக் குமரிமுனை வரை உள்ள ஆலயங்களை அவர் தரிசித்தது மட்டுமன்றி, தனது தூரிகையில் தீட்டி மகிழ்ந்திருக்கிறார். ஒவ்வொரு திருத்தலத்தைப் பற்றியும் ஓர் அற்புதமான கவிதையும் எழுதி, பாண்டுரங்க தேவனுக்குப் பாமாலை சார்த்தி மகிழ்ந்திருக்கிறார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள திருத்தளிநாதர் கோயிலும் சரி, கேதார்நாத் ஜோதிர்லிங்கங்களும் சரி, கவிஞர் பெருமாள் ராசுவின் தூரிகையில் தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. பஞ்சபூத ஸ்தலங்கள், ஜோதிர்லிங்கம் என்று
Image
தேற்றுவார் இல்லையே தோழி! தினமணி இடைமருதூர் கி.மஞ்சுளா First Published : 07 Jun 2009 12:32:00 AM IST Last Updated : அழகான குளிர்காலத்து மாலைப்பொழுது. இல்லங்கள் தோறும் மைதீட்டிய கயல்விழியும், கனங்குழையும் கொண்ட பெண்டிர், மங்கல விளக்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். அந்த அருமையான மாலைப் பொழுதிலே ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் இரண்டு பெண்கள் அமர்ந்திருக்கிறார்கள். இருவரில் ஒருத்தியின் கண்களில் நீர் பெருக்கெடுத்து அருவியென ஓடுகிறது. அவள் துக்கத்தால் துவண்டிருக்கிறாள். அவளுடைய நினைவு பின்னோக்கிச் சென்று கடந்த காலத்திற்குள் பிரவேசிக்கிறது. அவள் இளம் வயதினளாக இருந்தபோது அவளின் அழகு கண்டு மயங்கினான் ஒரு வாலிபன். அவளும் அவன் பார்வை பட்டதுமே மனம் சரிந்துபோனாள். இருவரும் காதல் கைவரப்பெற்றனர். அந்தப் பழக்கமே நாளுக்கு நாள் அவர்கள் இருவரையும் தனிமையில் சந்திக்கும் வழக்கமாயிற்று. நேரம் வாய்க்கும் போதெல்லாம் காதல் பயிரை வளர்ந்து வந்தனர். அவள் பருவப் பெண்ணானதன் காரணமாக அவளது பெற்றோர் அவளை வீட்டில் "காவல்' வைத்தனர். என்றாலும் அவர்களது சந்திப்புகள் தொடர்ந்தன. காதல் வயப்பட்
Image
தமிழிலக்கியத்தில்-"உயிரி நேயம்' தினமணி மு.செல்லா First Published : 07 Jun 2009 12:33:00 AM IST Last Updated : சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும் தோன்றிய இலக்கிய மற்றும் நீதி நூல்கள் தமிழ் உலகிற்கு உணர்த்திய அறம் "உயிரி நேயம்' ஆகும். மனித நேயம் என்பது நாம் அறிந்துகொள்ளக் கூடியதுதான். ஆனால், அது என்ன உயிரி நேயம்? மனிதர் மற்றொரு மனிதரிடம் காட்டும் அன்பு மற்றும் இரக்க உணர்வை மனிதநேயம் என்கிறோம். ஆனால், அதனினும் மேலாக மனிதரல்லாத பிற உயிரினங்கள் ஒன்று மற்றொன்றிடம் காட்டும் அன்பை அல்லது மனிதர் பிற உயிர்களிடம் காட்டுகிற அன்பை உயிரி நேய ஒழுக்கலாறாகத் தமிழ்ச் சமுதாயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பதிவு செய்து வைத்துள்ளது. உயிரி நேயம், நம் முன்னோர்கள் உலகிற்கு அளித்துப் பின்னர் காலப்போக்கில் மறக்கப்பட்டு புதையுண்டு போன பண்பாட்டுப் புதையல் என்றால் அது மிகையன்று. அன்பு பாராட்டுதல், விட்டுக்கொடுத்தல் அருகிவர, எங்கும் எதிலும் சுயநலம், பொறுமையின்மை, தான் வாழப் பிறரை அழிக்கக் கிளம்பும் அரக்கத்தனம் எனத் தீமைகள் உச்சத்தில் இருக்கும் இன்றைய நாளில்,