Posts

Showing posts from August, 2013

தமிழ்கூறும் நல்லுலகம்

Image
தமிழ்கூறும் நல்லுலகம் By இ.கி.ம. First Published : 01 September 2013 02:38 AM IST புகைப்படங்கள் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் 1008-ஆவது வெளியீட்டு விழா மலரில் இடம்பெற்ற டாக்டர் தனிநாயக அடிகளின் "தமிழ்கூறும் நல்லுலகம்' கட்டுரையின் (மிக நீண்ட) சுருக்கம் இது. தமிழுக்குச் "செம்மொழி' அந்தஸ்தைப் பெற்றுத்தந்த அன்னாரின் நினைவு நாளான இன்று (1.9.1980), "தமிழ்கூறும் நல்லுலகம்' படைத்த அன்னாரைத் தமிழ்கூறும் நல்லுலகம் என்றென்றும் நினைவுகூரட்டும்! ளிநாடுகளில் தமிழ் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றுவதற்குத் தமிழறிஞர்களுக்குக் கணக்கற்ற வாய்ப்புக்கள் உள. கீழ்த்திசை நாடுகளில் தமிழ்ப் பண்பாடு மிகவும் பழைமையான காலத்திலேயே பரவியதும் சாவகம், சுமத்திரா போன்ற இடங்களுக்கு, இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னரேயே தமிழ்மக்கள் குடியேறி இருக்க வேண்டுமென்பது ஹைனே கெல்டேர்ன் போன்ற அறிஞர்களின் கருத்து. இந்தோனேசிய மொழியில் வழங்கும் சொற்கள் பல, அம்மக்கள் தமிழ்நாட்டுடன் கொண்ட வணிகத் தொடர்பைக் குறிப்பன. எடுத்துக்காட்டாக, கப்பலைக் "க

நீதிநெறி விளக்கம் - படைப்பாளியே உயர்ந்தவன்

Image
நீதிநெறி விளக்கம் By dn First Published : 01 September 2013 02:28 AM IST புகைப்படங்கள் மாயாத உடம்பு கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும் மலரவன் வண்டமிழோர்க்கு ஒவ்வான் - மலரவன்செய் வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா, புகழ்கொண்டு மற்றிவர் செய்யும் உடம்பு. (பாடல்-6) கலைமகளாகிய சரசுவதி வாழ்வது பிரமனின் நாவில் என்றாலும், அந்தப் பிரமன் வண்மையுடைய தமிழ்ப் புலவர்க்கு ஒப்பாகமாட்டான். ஏனெனில், பிரமன் படைக்கும் வெறும் உடம்புகள் மாய்ந்துவிடல் போல, புலமைச் சான்றோர் படைக்கும் நூல்கள் இறந்து போகாமல் (அழியாமல்) நிலைபெறும். இப்பாடல் வழி, "உயிர்களைப் படைப்பவனைக் காட்டிலும் இலக்கியம் படைப்பவனே உயர்ந்தவன்' என்கிறார் குமரகுருபரர்.

பன்முக நோக்கில் பாவேந்தர் - கவிஞர் தமிழேந்தி

Image
பன்முக நோக்கில் பாவேந்தர் பன்முக நோக்கில் பாவேந்தர் - கவிஞர் தமிழேந்தி பாவேந்தர் பரதிதாசன் மீது தீராத பற்று கொண்ட கவிஞர் தமிழேந்தி எழுதிய “பன்முக நோக்கில் பாவேந்தர்” எனும் இந்நூல், பாரதிதாசனின் கவிதைகளுக்கு மேலும் சுவையூட்டுவதாக அமைந்துள்ளது. கவிஞர் தமிழேந்தி எந்த அளவிற்கு பாரதிதாசனின் கவிதை வரிகளால் ஈர்க்கப்பட்டு, அக்கவிதையின் மூலம் பகுத்தறிவுச் சிந்தனைகளை வளர்த்துக் கொண்டார் என்பதை இந்நூலின் மூலம் அறியலாம். பாவேந்தர் பாரதிதாசனின் தமிழறிவு, தமிழுணர்வு, சாதியொழிப்பு எண்ணங்கள், பொதுவுடைமைச் சிந்தனைகள், பெண்ணியம், காதல் கவிதைகள், இயற்கை எழில், நகைச்சுவை, பகுத்தறிவு பகலவனுடன் கொண்ட பற்று என அவரது கவிதைகளில் ஒளிர்ந்த அனைத்துச் சிந்தனைகளையும், நிகழ்வுகளையும் நூலாசிரியர் தெளிவுற வெளிப்படுத்தியுள்ளார். பாவேந்தர் பாரதிதாசனின் தாசனாக விளங்கும் கவிஞர் தமிழேந்தியின் இந்நூல், தமிழ் ஆர்வமுள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய அரிய நூல் ஆகும். வெளியீடு: புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்றம், வள்ளுவர் இல்லம், 44 இராசாசி வீதி, அரக்கோணம் - 631 001 பக்கங்கள்: 160