Posts

Showing posts from October, 2020

முத்தமிழ் ஒன்றே மூவுலகின் எல்லை – ஆற்காடு க குமரன்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         27 October 2020         No Comment View Post முத்தமிழ் ஒன்றே மூவுலகின்  எல்லை!   என் அன்னையே எந்தன் முதல் அறிமுகம் என் அன்னைக்கு நான் புதுமுகம் எனக்கான ஒரே முகம் என் அன்னையின் திருமுகம்   தொப்புள் கொடி உறவு துண்டிக்க தொடங்கியது எந்தன் வரவு   என் அன்னையே என் முதல் ஆசான் கருவறையே நான் கற்கத் தொடங்கிய முதல் பள்ளி வாய் வழியவள் வாசித்த மொழி வசப்பட்டது எனக்குள்ளே வளரவளர வார்த்தைகள் புலப்பட்டன   அம்மா என்று நான் அழைத்த முதல் வார்த்தை கூட அகத்தில் அன்னை கற்றுத்தந்தது கற்றுத்தந்த அவளுக்கான  முதல் காணிக்கை அது   அப்பா என்று நான் அழைக்கவில்லை அந்த மாமனிதரை பார்த்ததால் விளைந்த பிரமிப்பு   உலகம் புரியும் முன்னே உறவுகள் புரிந்தது உலகம் புரிந்த பின்னே கலகம் விளைந்தது…… கலகம் விளைந்தாலும் கலங்காமல் என் தாய் தமிழ் மொழி   உள்ளுக்குள் உயிர்த் துளியாய் இருந்தபோதே உறைந்ததல்லவா எனக்குள்ளே என் மொழி   அரிதாரம் பூசப்பட்ட அவயமல்ல என் மொழி அழித்து மாற்ற அணுக்களில் நிறைந்து உயிரினில் கலந்து  உணர்வினில் வலம்வரும் உன்னத மொழி   பாலினம் தெரியாமலேயே பாடம் எடுத்தவள் என் தாய் அ

அறிவியல் தமிழில் ஆக்கிட வாரீர்! – முனைவர் மு.பொன்னவைக்கோ

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         27 October 2020         No Comment அறிவியல் தமிழில் ஆக்கிட வாரீர்!   பல்சான் றீரே!  பல்சான் றீரே! அறிவியல் தமிழில் ஆக்கிட வாரீர்! பொறியியல் தமிழில் புதுக்கிடப் புகுவீர்! மருத்துவம் தமிழில் மலரச் செய்வீர்! அருங்கலை பலவும் தமிழில் கொள்வீர்! மாத்தமி ழெங்கும் மணந்திடச் செய்வீர்! மலர்தலை யுலகின் மாந்தர் பலரும் மாத்தமி ழேதன் தாய்மொழி யென்று ஏத்திப் புகழுநாள் எய்திட வார்pர்! காத்திருப் போமெனில் காலம் இல்லை கண்ணிமைப் போழ்தும் கடவா துடனே வண்மை வன்மை வாய்க்கப் பெற்ற வல்லுநர் திரளே விரைகு வீரே! – முனைவர் மு.பொன்னவைக்கோ கிண்டி பொறியியல் கல்லூரித் தமிழ் மன்றம், 1969     

ஊரடங்கு : கா.ந.கல்யாணசுந்தரம்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         22 October 2020         No Comment * உதிர்ந்த சருகு மிதிபடவில்லை சாலையில் ஊரடங்கு உத்தரவு   * வாலாட்டியபடி தெருவில் நாய் உணவிடுவோர் காணவில்லை   * கரிக்கீல்சாலைகள் முழுக்க கானல் நீர் பாய்கிறது தண்ணீர் தேடும் ஏழை   * சாலையோரம் ஓய்வில் பாரம் சுமந்த வண்டிகள் சோகம் சுமக்கும் தொழிலாளி     * பீதியில் வெளுத்த முகம் பசித்த வயிறு சலவைத் தொழிலாளி  கவிச்சுடர்  கா.ந.கல்யாணசுந்தரம், 94432 59288  

கலைமகள் – ஒளைவயார் திருவிழா

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         22 October 2020         No Comment ஐப்பசி 09, 2051 ஞாயிறு 25.10.2020 கலைமகள் ஒளைவயார் திருவிழா அனைத்துலக 18ஆவது அறநெறித் தமிழ் ஆய்வுமாநாடடுக் கருத்தரங்கம்  இடம் – ஒளவையார் கோட்டம், திருவையாறு  

கீழ்ச்சாதியும் மேல்சாதியும் – ஆற்காடு க. குமரன்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         19 October 2020         No Comment கீழ்ச்சாதியும் மேல்சாதியும் எதையும் நீ தகுதியாக எடுத்துக் கொள்ளாதே உனக்கு அது தகுதியா என்று பார்! தகுதி என்பது நிலை இல்லை மிகுதி என்ற நிலையைக் கொள்! சாதி என்பது  சன்மானம்  அல்ல சமுதாயத்தின் அவமானம் சாதி என்பது  சக்தி  அல்ல அது  உன் தலைமுறையின்  பக்தி! சாதிப் பெருமையைச் சொல்லி வளர்க்காதீர்கள்! நீர் சாதித்த பெருமையைச் சொல்லி வளருங்கள்! வாழும் வழி வேறு ஆனாலும்  வந்த வழியும் செல்லும் வழியும்  ஒன்றேயாம் உயிர்களுக்கு! தோலின் நிறத்தைக் கொண்டும் தொழிலின் தரத்தை கொண்டும் பிரிக்கப்பட்டது சாதி அப்பன் பணத்தில் வாழ்பவன் எல்லாம் கீழ்ச்சாதி அடுத்த வேலை சோற்றுக்கு உழைப்பவன் மேல்சாதி உழைத்துப் பிழைப்பவன் மேல்சாதி ஊதாரியாய்த் திரிபவன் கீழ்ச்சாதி பணிந்து செல்பவன் மேல்சாதி பணத்தில் மிதப்பவன் கீழ்ச்சாதி குணத்தில் நல்லவன் மேல்சாதி குற்றத்தில் வல்லவன் கீழ்ச்சாதி பணத்தைக் கொண்டு வெல்பவன் கீழ்ச்சாதி குணத்தைக் கொண்டு வெல்பவன் மேல்சாதி தீண்டாமையால் எரியும் கீழ்ச்சாதியவன் தீண்டாவிட்டால் எரியாது போகும் மேல்சாதி பறை இல்லையேல் நிறை இல்லை  உ

தமிழ் தலைகுனிய விட்டதில்லை! – ஆற்காடு க குமரன்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         16 October 2020         No Comment தமிழ் தலைகுனிய விட்டதில்லை!               எழுத்துகளோடு உறவாடவும் எண்ணங்களோடு உரையாடவும் எனக்கு நேரமில்லை   பொழுது போகவில்லை என்பது பொய் பொழுது போதவில்லை என்பதே மெய்   எழுத்துகள்தான் என் நண்பர்கள் எண்ணங்கள் துணையோடு அவர்களைச் சேர்த்துத் கோத்து வரிசைப்படுத்தி வார்த்தையாக்கி வலம்வர விட்டு வாசித்துச் சீராக்கி நேராக்கி கவிதைத் தேராக்கி மகிழவே நேரம் போதவில்லை எனக்கு   காட்சிப் படுவதை எல்லாமே வார்த்தைகளை கொண்டுச் சான்றாய்  வடிக்கிறேன் நான் புண்படுத்தும்  மனிதரிடையே பண்பட்டு போய்க்கொண்டிருக்கிறது என் ஆயுள் காலம்…..   வாசகர்கள் எனக்கான வரங்கள் திறனுரைகள் எனக்கான உரங்கள் கைதட்டும் கரங்கள் இருப்பதால்தான் காற்றுகூட கத்துகிறது எழுத்துகளோடு வாழ்ந்து கொண்டிருப்பதால் எவரைப் பற்றியும் கவலை இல்லை எனக்கு இரவும் பகலும் நான்கு திசைகளிலும் ஏழு நாட்களும் எழுத்துகளோடே  நான் உணவுக்கும் ஏங்குவதில்லை உறவுக்கும் ஏங்குவதில்லை உண்மைகள் தூங்குவதில்லை உணர்வுகள் வரிகளில் வலிகளாய் எழுத்து எனக்கு ஒரு வடிகால் உணர்வுகளைக் கொண்டு வடிப்பதால் என் ஒவ