Posts

Showing posts from June, 2014

மாமூலனார் பாடல்கள் 24: சி.இலக்குவனார்

Image
மாமூலனார் பாடல்கள் 24: சி.இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன்      29 சூன் 2014       கருத்திற்காக.. (ஆனி 8, 2045 / சூன் 22, 2014 இதழின் தொடர்ச்சி) “கண்பனி நிறுத்தல் எளிதோ” - தலைவி – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் உச பாடல். அகநானூறு 97    பாலை கள்ளி அம்காட்ட புள்ளி அம் பொறிக்கலை வறன் உறல் அம் கோடு உதிர வலம் கடந்து புலவுப்புலி துறந்த கலவுக்குழி கடுமுடை இரவுக் குறும்பு அலற நூறி நிரைபகுத்து இருங்கல் முடுக்கர்த் திற்றிகொண்டும் கொலையில் ஆடவர் போலப் பலவுடன் பெருந்தலை எருவையொடு பருந்து வந்து இருக்கும் அரும் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும் இரும் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த நுணங்கு கண் சிறு கோல் வணங்கு இறைமகளிரொடு அகவுநர்ப் புரந்த அன்பின் கழல் தொடி நறவு மகிழ் இருக்கை நன்னன் வேண்மான்; வயலை வேலி வியலூர் அன்ன நின் அலர் மூலையாகம் புலம்பப் பல நினைந்து ஆழேல் என்றி தோழி! யாழ என்? கண்பனி நிறுத்தல் எளிதோ? குரவு மலர்ந்து அற்சிரம் நீங்கிய அரும்பத வேனில் அறல் அவிர் வெண் மணல் அகல்யாற்று அடைகரைத்

செஞ்சீனா சென்றுவந்தேன் 2 – பொறி.க.அருணபாரதி

Image
செஞ்சீனா சென்றுவந்தேன் 2 – பொறி.க.அருணபாரதி இலக்குவனார் திருவள்ளுவன்      29 சூன் 2014       கருத்திற்காக.. (ஆனி 8, 2045 / சூன் 22, 2014 இதழின் தொடர்ச்சி) 2. சியான் நகரம் பண்டைத் தமிழகத்தில், மதுரை, தஞ்சாவூர் முதலானஉள்ளிட்ட நகரங்கள் எப்படி முதன்மைத் தலைநகரங்களாக விளங்கினவோ, அதே போல சீனாவிற்கு 4 பண்டையத் தலைநகரங்கள் இருந்தன. அவை, பெய்சிங்(கு), நான்சிங்(கு), (தெற்கு சீனா), (உ)லோயங்(கு), சங்கன் ஆகிய நகரங்களாகும். மேலுள்ள நான்கு நகரங்களில் சங்கன் என வழங்கப்பட்ட அவ்விடம்தான் இன்று சியான் என அழைக்கப்படுகிறது. இன்றைக்கும் சீனத் தலைநகரமாக உள்ள பெய்சிங்(கு)/(பீகிங்கு) நகரம், நவீன சீனாவின் அடையாளமாக உள்ளதைப் போல், ஒரு காலத்தில் சீனாவின் முதுன்மைத் தலைநகரமாகப் போற்றப்பட்டு வந்த இடம் தான் சியான் நகரமாகும். வெப்பநிலை 1 முதல் 10 வரை நிலவும் குளிர்ப்பகுதி இது என்பதால், மக்கள் அனைவரும் குளிருக்குத் தேவையான ஆடைகளுடனே வலம் வந்தனர். நெடுஞ்சல்லடம்(Jeans),குறுஞ்சட்டை (T-Shirts) ஆகியனவே இங்கு அடிப்படை உடைகளாகக் காணப்படுகின்றன. வட அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு முதலா

உலகெங்கிலும் தூய தமிழ் பரவட்டும்! – யாழ்ப் பாவாணன்

Image
உலகெங்கிலும் தூய தமிழ் பரவட்டும்! – யாழ்ப் பாவாணன் இலக்குவனார் திருவள்ளுவன்      29 சூன் 2014       கருத்திற்காக..   வானில் இருந்து இறங்கிய மழையோடு வந்து வீழ்ந்தவன் நான் அல்லன் பெற்றவர்கள் ஈன்ற பின்னர் தெருவெளி அங்காடியில் விற்ற நூல்களை வேண்டிப் படித்துப் பொறுக்கிய அறிவைப் பிறருக்கு வழங்குவதே என் பணி! “பிறமொழிச் சொல் அகராதி” என்ற நூலைப் படித்துப் பொறுக்கியதில் இருந்து: ஆங்கிலத்தில் “சுகர்ட்” என்பது தமிழில் அரைப் பாவாடையே..!. இந்தியில் “சோடி” என்பது தமிழில் ‘இணை’ என்பதையே! பாரசீக மொழியில் “லுங்கி” என்பது தமிழில் மூட்டுவேட்டியே! உருது மொழியில் “தமாசு” என்பது தமிழில் வேடிக்கையே! அரபி மொழியில் “சாமீன்” என்பது தமிழில் ‘பிணை’ என்பதையே! மராத்தி மொழியில் “பால்கோவா” என்பது தமிழில் திரட்டுப்பாலையே! தெலுங்கு மொழியில் “சட்டி” என்பது தமிழில் கவ்வுரி(ஆண் உள்ளிடுப்பு ஆடை)யே! அடக் கடவுளே… நம்மவர் பேசும் தமிழிலே எத்தனை பிறமொழிகளப்பா? “நமது வழக்கிலுள்ள தமிழில் இருந்து பிற மொழிகளைக் களைந்து விட்டால் நமது புழக்கத்தில்