Posts

Showing posts from November, 2022

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 1 காட்சி : 4

Image
 அகரமுதல ஃஃஃ   இலக்குவனார் திருவள்ளுவன்         01 December 2022         No Comment (புதிய புரட்சிக்கவி- களம் : 1   காட்சி : 3 – தொடர்ச்சி ) புதிய புரட்சிக்கவி களம் : 1   காட்சி : 4 முச்சந்தியில் மோனைப் புலவன் நிற்க ; இளவரசியின் தோழி அல்லி வருகிறாள் அகவல் மோனை :   பாளைச் சிரிப்பிலே பாவிஎன் ஆவியைப்           பதைக்க வதைக்கும் பாவாய் அல்லி           பாதையில் மேதிபோல் பாவியேன் நிற்கவும்           பார்த்தும் பாராது பால்முகம் திருப்பிப்           பதைப்புடன் எங்கே பாய்கிறாய்? நின்று           முத்து  விளையாட் டொன்றுஎன் முகத்தில்           மெத்தென் றாடினால் மேனியா     குறையும்? அல்லி :        மொத்துவேன் முகத்தில் மூக்கிரண் டாகும்           கொத்துங் கழுகிற்குக் கொள்ளை விருந்தாவாய்           நாளை       வருகிற      நற்றமிழ்ப் புலவன்           சேலை   நிகர்க்கும் செவ்வரிக் கண்ணாள்           நாட்டின் இளவரசி நங்கை யவட்குச்           செந்தமிழ் யாப்பைச் செப்பிடத் தோதாய்           செங்கோல் வேந்தன் செப்பிய பாங்கில்           சோலை மேடை சொகுசா யமைத்திட           ஆவன    கொணர அங்காடி செல்கிறேன் மோனை :   நற்ற

தமிழ்நாடும் மொழியும் 16; பல்லவப் பேரரசு – பேரா.அ.திருமலைமுத்துசாமி

Image
  அகரமுதல ஃஃஃ  இலக்குவனார் திருவள்ளுவன்         29 November 2022         No Comment (தமிழ்நாடும் மொழியும் 15 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 16 பல்லவப்   பேரரசு  தொடர்ச்சி ‘ தந்தையை ஒப்பர் மக்கள் ‘ என்னும் மூதுரைப்படி, மகேந்திரனைப் போலவே அவன் மகனான நரசிம்மவர்மனும் சிறந்த கலைஞன்; கட்டடப் பிரியன்; கலைப்பித்து மிகக் கொண்டவன். அதன் பயனாகக் கடல்மல்லை எனப்படும் மாமல்லபுரம் சீர்திருத்தப்பட்டது. பல கற்கோவில்கள் அங்கு எழுந்தன. இன்று காண்போர் கண்ணைக் கவரும் வகையில் விளங்கும் பஞ்சபாண்டவர் இரதங்கள் இவன் காலத்தில் உண்டானவையே. சீனயாத்திரிகனான  யுவான்சுவாங்கு  இவன் காலத்தில் தான் தென்னாட்டுக்கு வந்தான். அவன் தென்னகத்தைத் திராவிடம் என்கிறான். மேலும் அவன் கூறியதாவது:- இங்குள்ள நிலம் வளமும் செழிப்பும் மிக்கது. இங்குள்ள மக்கள் உடலுரமும், கல்விப்பற்றும், உறுதியும் உடையவர்கள். தலை நகராகிய காஞ்சிபுரம் ஆறு கல் சுற்றளவு உடையது. இங்கு 100 புத்தப் பள்ளிகள் உள; 1000 புத்தத் துறவிகளும் உளர். வேறு சமயங்களும் உள. அவற்றுள்ளே திகம்பர சமயம் நன்கு வளர்ந்துள்ளது. நரசிம்மனுக்குப் பிறகு அவன் மகனான இரண்டாம் மகேந்திரவர்மன்

மாவீரன் பிரபாகரன் மலர்ந்தொளிர்வர் ! – புலவர் பழ.தமிழாளன்

Image
 அகரமுதல ஃஃஃ  இலக்குவனார் திருவள்ளுவன்         28 November 2022         No Comment மாவீரன்   பிரபாகரன்  மலர்ந்தொளிர்வர் ! 1. ஈழமண்ணில்  தமிழ்நாடு மலர்ந்து மணம்   வீச    வீறுமிகு  பிரபாகர் தலைமைதனை   ஏற்று  வாழவினம் உயிர்கொடுத்தோர் வரலாற்றில்  நிற்பர் /      வையகத்தில்  தமிழ்வீரம்  வான்கதிரே  ஒக்கும் மாழவுமே  வைத்தரச  பச்சையென்பான் ஈழ     மண்ணைவிட்டே  மறைந்தொழிவான்  மனம்மகிழ  மக்கள் வாழவந்த  சிங்களத்தை  வசைகூறி   என்றும்     வையகமே  தூற்றிநிற்கும்  வன்கொலைஞர்  என்றே ! 2. கொலைகார  அரசபச்சே  கொற்றமுமே  ஏறின்     கொற்றவறம்  அன்னவனைக்  குப்புறவே  வீழ்த்தும் மலையொக்கும்  பண்பாட்டில்  மலர்ந்து  மணம்  வீசும்     மாத்தமிழர்  வீழ்ந்தாலும்  மாண்பென்றும்   குன்றார் நிலைத்தபுகழ்  ஞாலமதில்  தமிழினத்தின்   மார்பில்     நித்திலப்பூ  மாலையென  ஒளிவீசித்   தோன்றும்  நிலமுதலாம்  தமிழினத்துப்  பகையெல் லாம்  தூளாய்     நெடுங்குன்றம்  இடிவீழ்ந்த  நிலையதனை  ஒக்கும் !                  புலவர் பழ.தமிழாளன்,        இயக்குநர்—பைந்தமிழியக்கம்,    திருச்சிராப்பள்ளி.

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 18

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         27 November 2022         No Comment ( இலக்குவனாரின்  ‘ பழந்தமிழ் ’ – 17  தொடர்ச்சி ) ‘ பழந்தமிழ் ’ 5. பழந்தமிழ்ப் புதல்விகள்  தொடர்ச்சி  ஆரியம் ஆங்காங்குச் செல்வாக்குப் பெற்றது. அதன் வழியில் பிற மொழிகள் எல்லாம் இயங்கத் தொடங்கின.  பழந்தமிழைக் கண்டு தன் எழுத்துகளை அமைத்துக்கொண்ட ஆரியத்தின்  புது அமைப்பு முறையைப் பின்பற்றித் தம் எழுத்து முறைகளை அமைத்துக் கொண்டன.  ஆரிய மொழிச் சொற்களை மிகுதியாகக் கடன் பெற்று ஆரிய மொழியின் துணையின்றித் தாம் வாழ முடியாத நிலைக்கு  ஆளாகிவிட்டன. ஆதலின் தம் தாயாம் தமிழிலிருந்து புதல்விகளாம் பிற திராவிட மொழிகள் வேறுபட்டன போல் மொழிநூற் பயிற்சியில்லார்க்குத் தென்பட்டன. அரசியல், பொருளியல், பதவி நிலை ஆகிய இவை காரணமாகத் தமிழ்மொழியாளர்க்கும் பிற திராவிட மொழியாளர்க்கும் போட்டியும் பூசலும் உருவாகி வளரத் தொடங்கின.    அறிஞர் காலுடுவல்  அவர்களும் ஏனைய கிருத்தவ சமயத் தொண்டர்களும் தமிழையும் பிற மொழிகளையும் கற்று, ஆராய்ந்து, நடுநிலை பிறழாத வகையில் தமிழைப் பற்றிய உண்மையான நிலையை உலகுக்கு அறிவித்தனர்.  அறிஞர் காலுடுவல் அவர்கள் இத்துறையில்

பழுநர் திருமடி சாய்ந்த வெம்புலியே! – தொல்லூர் கிழான்

Image
 அகரமுதல பழுநர் திருமடி சாய்ந்த வெம்புலியே! – தொல்லூர் கிழான் இலக்குவனார் திருவள்ளுவன்         27 November 2022         No Comment பழுநர் திருமடி சாய்ந்த வெம்புலியே! விரிகடல் கடந்து தண்புலம் ஒரீஇ உறுநிலம் உறைய புள்பறந்  தற்றே முதுவர் நீங்கிய ஒற்றை மகவாள் வதுவைப் பருவத்து  துடிஇடை முளையல் அரிப்படை நடுக்கிய பெரும்போ ருடற்றியான் வரிப்படை வேட்புற காந்த ளகத்து மகற்படை அன்ன மகட்படை மறவம் அகத்தே   உயிர்த்த அறநெறி தழீஇ விழுப்புண் ஏற்றனள் தெவ்வர் நூறி பழுநர் திருமடி சாய்ந்தவெம் புலியே தொல்லூர் கிழான் விரிகடல் கடந்து = எங்கும் புடைபரப்பி விரிந்திருக்கும் பெருங்கடல் கடந்து; தண்புலம் ஒரீஇ = குளிர்பொருந்திய நிலத்தை விட்டு நீங்கி; உறுநிலம் உறைய = உண்மையில் வாழ வேண்டிய உற்ற நிலம் நோக்கி; புள்பறந்  தற்றே = பறந்து  வந்த பறவையைப் போல; முதுவர் நீங்கிய  = தன்னை ஈன்றெடுத்த தாய் தந்தையரை விட்டு நீங்கிய; ஒற்றை மகவாள் = அவர்களுக்குப் பிறந்த ஒரே ஒரு பெண் குழந்தையாள்; வதுவைப் பருவத்து  = திருமணப் பருவம் எய்திய; துடிஇடை முளையல் = சிறுத்த இடை உடைய இளைய நங்கை; அரிப்படை நடுக்கிய = சிங்களப் படையை நடுக்கத்தில் ஆழ்த்த