Posts

Showing posts from October, 2019

நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்!- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         08 அட்டோபர் 2019         கருத்திற்காக.. நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்! கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப் பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் – மணங்கொண்டீண்டு உண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே டொண்டொண்டொ டென்னும் பறை.  ( நாலடியார் பாடல் 25 ) பொருள்:  உறவினர் கூட்டமாகக் கூடிநின்று கூவி அழ, பிணத்தைத் தூக்கிக்கொண்டு சுடுகாட்டில் இடுபவரைப் பார்த்தும், திருமணம் செய்துகொண்டு, இவ்வுலகில் உறுமுயதய் ‘இன்பம் உண்டு, இன்பம் உண்டு’ என்று மயங்குபவனுக்கு, ‘டொண் டொண் டொண்’ என ஒலிக்கும் சாப்பறையானது, இவ்வுலக வாழ்க்கையில் இத்தகைய இன்பம் இல்லை (யாக்கை நிலையில்லை) என்னும் உண்மையை உரைக்கும்! சொல் விளக்கம்:  கணம் கொண்டு = கூட்டமாகக் கூடிக்கொண்டு; சுற்றத்தார் = உறவினர்; கல்லென்று = கலீல் என்னும் ஒலி உண்டாக; அலற = புலம்பியழ; பிணம் = பிணத்தை; கொண்டு = எடுத்துக்கொண்டு; காடு = சுடுகாட்டில் அல்லது இடுகாட்டில்; உய்ப்பார் = வைப்பவரை; கண்டும் = பார்த்திருந்தும்; மணம்கொண்டு = திருமணம் செய்துகொண்டு; ஈண்டு = இவ்விடத்தில்; உ

நாலடி இன்பம்! -15 ஒரு பறை: ஈர் இசை! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         03 அட்டோபர் 2019         கருத்திற்காக.. நாலடி இன்பம்! -15 ஒரு பறை: ஈர் இசை! மன்றம் கறங்க மணப்பறை யாயின அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் – பின்றை யொலித்தலு முண்டாமென் றுய்ந்துபோ மாறே வலிக்குமாம் மாண்டார் மனம். (நாலடியார் பாடல் 23) பொருள்:  திருமண மன்றத்தில் முழங்கிய மணப்பறைகளே அன்றைக்கே மணமக்களில் ஒருவருக்குப் பிணப்பறையாய் ஒலிக்கவும் கூடும். இதனை உணர்ந்த பெரியோர்கள் மனம் தீமைகளில் இருந்து பிழைத்துப்போகும் வழியை எண்ணும். சொல் விளக்கம்: மன்றம்=பொதுவெளியில் அல்லது அவையில்; கறங்க=முழங்க; மணப்பறை ஆயின= மணக்கோலத்திற்கான பறைகள்; அன்று=அன்றைக்கே; அவர்க்கு=அம்மணமக்களுக்கு; ஆங்கே= அவ்விடத்திலேயே, பிணப்பறையாய்=பிணக்கோலத்திற்குக் கொட்டும்பறையாய்; பின்றை=பின்பு; ஒலித்தலும்=ஒலிஉண்டாக்கலும்; உண்டாம் என்று=உண்டாகுமென்று நினைத்து; உய்ந்துபோம்= பிழைத்துப் போகிற; ஆறு=வழியை; வலிக்கும்= துணிந்து நிற்கும்; மாண்டார்= பெரியோர்கள்; மனம்= உள்ளம். திரைப்படங்களில் நாட்டாண்மை செய்யும் இடமாக மரத்தடியைக் காட்டுகிறார்கள் அல்லவா? அத்தகைய  கூடும் இ