Posts

Showing posts from October, 2013

தாகூரின் காதலி (அன்றைய 'முதல் மரியாதை')

Image
தாகூரின் காதலி தமிழ் இந்து, சுகுமாரன் Comment   ·   print   ·   T+    சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் சுனில் கங்கோபாத்தியாய் மறைந்தார். 'நவீன வங்காள மொழியின் புதிய சுரணையுணர்வை முன் வைத்தவர் என்று பாராட்டப்பட்டவர் சுனில். அவரது வாழ்க்கையும் படைப்புகளும் எப்போதும் சர்ச்சைகளின் மையப் புள்ளிகளாக இருந்தன. உயிருடன் இருந்தபோது இருந்த சர்ச்சைகள் அவரது இறப்பிலும் தொடர்ந்தன. தனது இறப்புக்குப் பின்னர் எந்தச் சடங்குகளும் கூடாது என்று முன்னர் அறிவித்திருந்தபடியே அவரது உடல் எரியூட்டப்பட்டது. வெளித் தோற்றத்தில் புதுமை விரும்பிகளும் அடிமனத்தில் மரபுக் காவலர்களாகவும் இருக்கும் பெரும்பான்மை வங்காளிகள் நடுவே அதுவும் சர்ச்சைக்கிடமானது. சுனில் கங்கோபாத்தியாவைக் கடுமையாக விமர்சிக்கக் காரணமாக இருந்த நாவல் ' ரானு ஓ பானு'. கடவுளரை விமர்சனம் செய்யும் நாவலைப் பொறுத்துக்கொள்ளத் தயாராக இருந்த வங்காளிகள் கடவுளை விட மிகுந்த பக்தியுடன் ஆராதனை செய்யும் தங்கள் மகா கவியைப் பற்றிய நாவலுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார்கள். நாவலின் மையப் பாத்திரம

தமிழ்ச் செல்வங்கள்: அம்மா - 2

Image
தமிழ்ச் செல்வங்கள்: அம்மா - 2 By புலவர் இரா.இளங்குமரன் First Published : 13 October 2013 02:24 AM IST புகைப்படங்கள் ஓருவன் வயிறு முட்ட உண்கிறான்; உள்ளவற்றையெல்லாம் - வைத்தவற்றை எல்லாம் - பிறருக்கும் வேண்டுமே என்ற எண்ணமே இல்லாமல் உண்கிறான். அவன் உண்டு போனபின் "அமுக்கு அமுக்கு' என்று அமுக்கிவிட்டான்! பானை, சட்டி எல்லாம் காலி! அவனுக்கென்ன, வயிறு அண்டா குண்டாவா? தாழிப்பானையா?' எனப் பொறுமுகின்றனர். மூக்கில் விரல் வைத்து நோக்குகின்றனர்! அம்மில் இருந்து வயிறு முட்ட உண்ணல் அமுக்குதலுக்கு ஆகிவிட்டது. "அமுக்கு அமுக்கு' என அமுக்கி விட்டான் என்று கூறுகின்றனர். அமுக்குதல் விரிந்தது; ஓடு, தகரக் கூரைகளுக்கும், தாள், தட்டை வைக்கோல் போர்களுக்கும் அமுக்கு வைத்தல், அமுக்குப் போடுதல் உண்டு! கரவானவனை "அமுக்கடிக்காரன்' என்பதும் மக்கள் வழக்கு. சட்டையில் பொத்தல் இட்டு அதனைப் பொத்தி மூடப் "பொத்தான்' வைத்தல் தையல்கடை வேலை. பொத்தான் வகையுள் அமுக்குப் பொத்தான் என்பது ஒன்று. சட்டையைப் பொத்தல் இடாமல் சட்டைமேல் வைத்துத

நற்றிணையில் நட்புநெறி!

Image
நற்றிணையில் நட்புநெறி! By முனைவர் இரா.அன்பழகன் First Published : 13 October 2013 02:29 AM IST புகைப்படங்கள் சங்க காலத்தில் கணவன் - மனைவிக்கிடையே விளங்கிய உயர்வான காதலும் நட்பு எனச் சிறப்பித்துச் சொல்லப்பட்டது. ""உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு'' (1122) என வரும் இக்குறள் காதலை "நட்பு' என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது. இவ்வாறு குறிப்பிடுவதன் மூலம் காதலின் முதிர்ச்சியாக, காதலைவிட ஒருபடி உயர்ந்ததாக நட்பு விளங்குகிறது என்பதை அறியமுடிகிறது. நற்றிணைப் பாடல் ஒன்று, ஒரு நம்பியும், ஒரு நங்கையும் நன்னலம் வாய்ந்த இந்த உன்னத உறவால் இணையும் உயர்வை உணர்த்துகிறது. ஒரு பெண் மீது ஓர் இளைஞன் காதல் கொள்கிறான். தன் காதலை அப்பெண்ணின் தோழியின் மூலம் சொல்ல முயற்சி செய்கிறான். தோழி அப்பெண்ணிடம் சொல்கிறாள். "ஒரு மலை உள்ளது. அம்மலை கண்ணபிரான் போன்று தோன்றுகிறது. அம்மலைக்குப் பக்கத்தில் அருவி வீழ்கிற; அது பலராமன் போன்று தோன்றுகிறது. அம்மலைக்கு உரிய தலைவன் உன்னை நேசிக்கிறான். அவன் உன் அன்பை வே

சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்

Image
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள் By முனைவர் ந. அறிவரசன் First Published : 13 October 2013 02:30 AM IST புகைப்படங்கள்  உலகத்தில் உள்ள கண்டங்களும் அங்குள்ள மக்களும் குமரிக் கண்டத்திலிருந்து இடம்பெயர்ந்ததைக் கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கூற்று மெய்ப்பிக்கிறது. சீனாவில் கன்பூசியஸ் தொகுத்த 306 பாடல்களைக்கொண்ட "பழஞ்சீனக் கவித்தொகை' நூல்தான் முதல் நூலாகும். இத்தொகுப்பில் உள்ள பல பாடல்கள் சங்க மரபைப் பின்பற்றி அமைந்துள்ளன. அவற்றில் இரு பாடல்களைக் காண்போம். ""எந்தன் தலைவன் பெரும்தீரன் நாட்டின் படையில் ஒருவீரன் எந்தன் தலைவன் வேலேந்தி மன்னர் ரதத்தின் முன்தேரில் தலைவன் கிழக்கே போனது முதலே தலையும் புதரென ஆகிப்போனேன். கழுநீர் இல்லா நிலையா? இல்லை வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை'' (பயணி, வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை, ப.80) இப்பழஞ்சீனக் கவிதை தனித்திருக்கும் மனைவியைப் பற்றியது. கணவன் போர்க்களம் சென்றுவிட்டதால், மனைவி தன் கூந்தலுக்கு எண்ணெய் தடவாமலும், நீர

டோட்டோ பள்ளிக்குப் போனபோது

Image
டோட்டோ பள்ளிக்குப் போனபோது ... தொகுப்பு: ஆதி வள்ளியப்பன் தமிழ்இந்து Comment   ·   print   ·   T+    டோட்டோ - சானை உங்களுக்குத் தெரியுமா? தெரியாவிட்டாலும் பரவாயில்லை, டோட்டோவின் கதையைக் கேட்டால் நிச்சயம் உங்களுக்கு அவளைப் பிடிக்கும். ஏனென்றால், உங்களைப் போல என்னைப் போல நிறைய குறும்புகளைச் செய்த சேட்டைக்காரக் குழந்தை அவள். சுட்டிப்பெண் டோட்டோ - சான் ஒரு பள்ளியிலிருந்து விலக்கப்பட்டு சமீபத்தில்தான் புதிய பள்ளியில் சேர்ந்திருந்தாள், ஆனால் அந்த புதிய பள்ளியிலிருந்தும் அவளை வெளியேறச் சொல்லிவிட்டார்கள். இது அவள் அம்மாவுக்கு வருத்தம் தந்தது. முதல் வகுப்பிலேயே அவள் பல முறை வெளியேற்றப்பட்டுவிட்டாள். ஒரு வாரத்துக்கு முன் டோட்டோவின் கிளாஸ் டீச்சர், டோட்டோவின் அம்மாவை அழைத்திருந்தார். டோட்டோவின் அம்மாவிடம் டீச்சர் சொன்ன முதல் வாக்கியமே, "உங்கள் மகள் மொத்த கிளாஸையும் கெடுக்கிறாள். தயவுசெய்து அவளை வேறு பள்ளியில் சேர்த்துவிடுங்கள். இனிமேல் எதையும் பொறுத்துக்கொள்ள முடியாது" என்று டீச்சர் பெருமூச்சு விட்டுக்க

"சே''

"சே'' தமிழ்மணி, Byகோ. தமிழரசன் First Published : 06 October 2013 01:57 AM IST தனியொரு எழுத்தும் தகுதியான பொருள் தரும் தன்மை தமிழுக்கே உரிய தனி அடையாளம். "சே' என்பது தனித்த ஓர் உயிர்மெய் எழுத்து. இந்த எழுத்தைச் "ச்சே' என உச்சரிக்கக்கூடாது. சேய்மை, சேவல், சேமிப்பு என்னும் சொற்களின் முதலெழுத்தை ஒலிப்பதைப்போல ஒலிக்க வேண்டும். "சே' எனும் ஓரெழுத்து மொழியானது, அழிஞ்சின் மரம், இடபராசி, உயர்வு, எருது, ஒலிக்குறிப்பு எனப் பல்வேறு பொருள் தருகிறது. இவற்றுள் "சே' என்னும் எழுத்துக்குரிய "எருது' உழவுத் தொழிலோடு தொடர்புடையது. உழவுத் தொழிலுக்கான அனைத்துப் பணிகளிலும் "எருது' முதன்மை பெற்றுள்ளது. உழவர்கள் தம் நிலங்களில் கலப்பைப் பூட்டி எருதின் துணையோடு ஏர் உழுவார்கள். உழும்போது கலப்பையின் கொழு, நிலத்தை நேரே கிழித்துக்கொண்டு செல்ல வேண்டும். சில வேளைகளில் எருதின் கவனக்குறைவால் அக்கம் பக்கம் கொழுமுனையின் போக்கு மாறும். அதைச் சரிசெய்யும் உழவன், எருதினைச் சரி செய்வான். எருதினை ஒழுங்குபடுத்த எருதுகளை நோக்கி &quo

தமிழ்ப் புதையல்

Image
தமிழ்ப் புதையல்   தமிழ்மணி By தமிழண்ணல் First Published : 06 October 2013 01:55 AM IST புகைப்படங்கள் தமிழின் தொன்மை, வளம், சீர்மை, சிறப்பு எல்லாம் தோண்டத் தோண்ட, துருவி துருவி ஆராய ஆராயப் "புதையல் எடுத்ததுபோல' வெளிப்படுகின்றன. அரசர்கள் செல்வர்களிடம் செல்வம் குவிந்தால் அவற்றை எங்கே சேமித்து வைப்பது? அதனைப் பூமிக்கு அடியில் புதைத்து வைத்தார்கள். பெரும்பாலும் ஆற்றோரங்களில் புதைத்து வைப்பதுண்டு. புதைத்த இடத்தில் அடையாளத்திற்காக, ஒரு மரத்தை நட்டு வளர்ப்பார்கள். பெருஞ் செல்வரிடம் ஒரு பொலிவு காணப்படுவது போல, "நிதி'யில் மேல் நிற்கும் மரம்கூடப் பொலிவுடன் விளங்குமாம். "உடைமை' ஒரு மெய்ப்பாடு என்றார் தொல்காப்பியர். அதற்கு உரை எழுதிய பேராசிரியர் ""அஃதாவது நிதிமேல் நின்ற மரம்போலச் செல்வமுடைமையான் வரும் மெய்ப்பாடு'' என விளக்கினார். ஒüவையார், ""பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்து''எனப் பாடுவதால் 14, 15-ஆம் நூற்றாண்டு வரை இப்பழக்கம் இருந்தது எனலாம். சேரமன்னன் ஒருவன் இவ்வாறு பு

அடைமொழி இல்லாத பாடல்

Image
அடைமொழி இல்லாத பாடல் தமிழ்மணி By அ. கருப்பையா First Published : 06 October 2013 01:54 AM IST புகைப்படங்கள் சங்க இலக்கியங்கள் தொடங்கி, இக்கால இலக்கியங்கள் வரை ஒவ்வொரு பொருளையும், செயலையும் குறிக்கின்றபோது பெயர், வினைச் சொற்களுக்கு முன்னர் வினை, பயன், மெய், உரு எனும் உவம அடிப்படையில் "அடைமொழிகள்' கொடுத்துக் கூறுவது புலவர்களின் வழக்கம். இவ் அடைமொழிகள் உயர்விற்காகவோ, தாழ்விற்காவோ குறிக்கப்பெறலாம். இதன் மூலம் புலவர்கள் தாம் எண்ணிய கருத்தைப் பெறவைப்பதுடன், தம் புலமைத் திறத்தைக் காட்டுவதிலும் சிறந்து விளங்குகின்றனர். பேச்சு வழக்கிலும் அடைமொழிகளின் பயன்பாட்டைக் காணலாம். இத்தகு சிறப்பு வாய்ந்த அடைமொழிகளைப் பயன்படுத்தாமலும் தம்மால் பாட இயலும் என்று கூறும் தமிழ்ப் புலவர்களும் நம்மில் உண்டு. நிலம், பொழுது, கரு, உரி என எல்லாப் பொருள்களையும் வருணித்துப் பாடிய பாடல் நூலான அகநானூற்றில், 400 பாடல்களில் 200 பாடல்கள் பாலைநில வருணனையாகும். மற்ற சங்க இலக்கியங்களும் வருணையில் இவ்வாறே! ஒன்றுமே இல்லாத பாலை நிலத்தையே புலவர்களால்

காதல் நோய்க்கு மருந்து...

Image
காதல் நோய்க்கு மருந்து... தமிழ்மணி Byகவிஞர் இராணிதாசன் First Published : 06 October 2013 01:51 AM IST புகைப்படங்கள் காளமேகப் புலவர் ஒருமுறை வெளியூர் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, ஒரு பெண் ஓர் ஆட்டை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கொண்டிருந்தாள். ஆட்டின் பரிதாபக் குரல் காளமேகத்தின் மனதை உலுக்கியது. ""பாவம் இந்த அப்பாவி ஆடு... விட்டுவிடம்மா'' என்றார். ""ஆடு பாவம் என்று விட்டால், என் மகள் பாவத்தை யார் பார்ப்பது? ஆடு வெட்டி பூஜை செய்தால்தான் அவளது பித்து மாறும்'' என்றாள். ""பித்துப் பிடித்திருக்கிறது என்கிறாயே, அப்படி என்னதான் செய்கிறாள்?''? ""சரியாகச் சாப்பிடுவதில்லை; தூங்குவதில்லை; எதையோ பறிகொடுத்தவள் போல் வெறித்தபடியே இருக்கிறாள். யார் பெயரையோ சொல்லிப் புலம்புகிறாள்'' என்றாள். காளமேகத்துக்குப் புரிந்துவிட்டது. அது காதல் நோய்தான் என்று! அவளுக்கு அறிவுரை கூறும் வகையில் ஒரு பாடலைப் பாடினார். ""முந்நான்கில் ஒன்றுடையாள், முந்நான்கில

தமிழ்ச் செல்வங்கள்: அம்மா- 1

Image
தமிழ்ச் செல்வங்கள்: அம்மா- 1 தமிழ்மணி By புலவர் இரா.இளங்குமரன் First Published : 06 October 2013 01:50 AM IST ஒளிப்படங்கள் குழந்தைகளுக்குப் "பிறந்த நாள்' கொண்டாடுகிறோம். "பெயர்சூட்டு நாள்' என ஒரு விழாக் கொண்டாடுகிறோம். இவ்விரண்டு விழாக்களையும், குழந்தை பிறந்த சில நாள்களிலேயே, தன் தாய்க்குச் சூட்டிக் கொண்டாடிவிடுகிறது குழந்தை! பேசாக் குழந்தையா? பிறந்த சில நாள்களிலேயா? வியப்பின் மேல் வியப்பாக இருக்கிறது! ஆனால், உண்மைதான் என்பதைக் குழந்தைகள், தொடர் விழாவாகக் கொண்டாடிக்கொண்டே உள்ளன! நாம்தான் கண்டு கொள்ளவில்லை. குழந்தை தாயிடம் பால் பருகுகின்றது; பசித்த குழந்தை, பசி தாங்காக் குழந்தை, "அம்' "அம்' என்று பால் பருகுகின்றது. பால் பருகுங்கால் எழும் நுண்ணொலி "அம், அம்' என்று ஒலிப்பதை நாம் இன்றும் கேட்கலாம்! "அம்மம்' பால் ஆயது; பால் தருபவர் "அம்மா' ஆனார்! "அம்' இயல்பாக வாய் மூடியவுடன் உண்டாகும் ஒலி. "மா' மூடிய வாயை அகலத் திறந்ததும் உண்டாகிய ஒலி. இரண்டையும