Posts

Showing posts from October, 2009
செம்புலப் பெயல்நீர் முனைவர் க.வெள்ளிமலை First Published : 25 Oct 2009 01:26:00 AM IST Last Updated : அவனோ (தலைவன்), நாகரிகப் - பண்பாட்டின் இருப்பிடமாம் தமிழகத்தின் சிற்றூர் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன்; அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி ஆகிய பண்புகளால் உயர்ந்தவன்; அவற்றால் பிறர் போற்றும் புகழ் வாய்க்கப் பெற்றவன்; தன் முயற்சியால் பொருளீட்டி வாழ்வாங்கு வாழக் கருதுபவன்.அவளோ (தலைவி), வடபுலமான வேற்று மாநிலத்தில் சின்னஞ்சிறு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள்; அச்சம், மடம், நாணம் என்னும் பெண்மைக்குரிய பண்புகளில் உறுதியாக நின்றவள்; அவற்றால் நிமி
Image
பரிபாடலில் உவமைச் சிறப்புகள்! க.சிவமணி First Published : 25 Oct 2009 01:29:00 AM IST Last Updated : இயற்கை இன்பத்தில் மனதைப் பறிகொடுத்த பண்பட்ட மக்களின் வாழ்க்கை நிகழ்வுகளைப் படம்பிடித்துக் காட்டி நம்மையும் ஆற்றுப்படுத்தும் நோக்கில் அமைந்தவை சங்க இலக்கியங்கள். இயற்கை நிகழ்வுகளைப் பொருத்தமான உவமைகளைக் கொண்டு காட்சிப்படுத்துவதில் சங்கப் புலவர்கள் நிகரற்றவர்கள். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பரிபாடல் என்ற நூலில், வையை ஆறு பற்றிய உவமைச் சிறப்பு படித்து இன்புறத்தக்கது.பரிபாடல் தொகுப்பில் இன்று நமக்குக் கிடைத்துள்ள 22 பாடல்களில் வையை ஆறு
Image
நல்வழி First Published : 25 Oct 2009 01:33:00 AM IST Last Updated : தாம்தாம்முன் செய்தவினை தாமே அநுபவிப்பார்பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தேஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றாவெறுத்தாலும் போமோ விதி.(பா-30)அரசே! ஒவ்வொருவரும் முன் செய்த வினையின் பயன்களை, தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகன் விதித்த ஊழ்வழியே தாம் அனுபவிப்பார். தீமை செய்தவரை நம்மால் என்ன செய்ய முடியும்? ஊரார் அனைவரும் ஒன்று திரண்டு மறுத்தாலும் விதியின் பயனை விலக்க முடியாது.
Image
இந்த வார கலாரசிகன் First Published : 25 Oct 2009 01:34:00 AM IST Last Updated : தமிழ் வளர்ச்சிக்கு உகந்த படைப்புகள் வெளிவர நிதி ஒரு தடையாக இருக்கக் கூடாது. இதற்காக, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள எழுத்தாளர்களின் படைப்புகளை அச்சிட்டு வெளியிட தமிழ் வளர்ச்சித் துறை நிதி உதவி அளித்து வருகிறது. தமிழ் வளர்ச்சித் துறையின் தர விதிகளுக்கு உள்பட்டு தகுதியுடைய எழுத்தாளர்களின் படைப்புகள் நிதி உதவி பெறுவதற்குத் தேர்வு செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு சராசரியாக 25 எழுத்தாளர்களின் படைப்புகள் இதன் மூலம் வெளியிடப்படுகின்றன. அதேபோல, தமிழ் வளர்ச்சித்
நம்பிக்கைதான் வாழ்க்கையின் மூல நாடி .. நாம் தாயக விடுதலைக்கு ஆற்றியது என்ன என்பதை நாமே உணர்ந்து நம்பிக்கையுடன் துணை புரிந்தால் நிச்சயம் வெற்றி நமதாகும். தமிழீழம் உருவாகும்... நம்பிக்கைதான் வாழ்க்கையின் மூல நாடி இதை தற்போது வாழ்பவர்களும் செல்லியுள்ளார்கள் நன்றாக வாழ்ந்து முடிந்தவர்கள் மற்றும் வறுமையுடன் வாழ்க்கையைமுடித்தவர்கள் கூட அதிகம் அனுபவித்து சொல்லியுள்ளார்கள்.சிறியவர்கள் கூட பலர் நம்பிக்கைபற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார்கள். நம்பிக்கை என்பது என்ன அர்த்தத்தினை உள்ளடக்கியது என்னும் கேள்ளி பலரிடம் இன்று காணப்படுகின்றது.குறிப்பாக இன்று தமிழ் மக்கள் குறிப்பாக புலம் பெயர் உறவுகள் ஆகிய நாங்கள் நம்பிக்கை பற்றி நம்பிக்கை கொள்ள வேண்டிய காலம் பற்றி புரிந்துகொண்டுள்ளது எந்த அளவு என்னும் ஒரு விடைகாண முடியா வின ஒன்று தோன்றியுள்ளது.ஆனால் அதற்கு விடைகாண எம்மால் மாத்திரம் தான் முடியும் என்பதும் எம்மில் பலருக்கு தெரியாது. எம்மில் நம்பிக்கை அற்றவர்கள் எவரிலும் நம்பிக்கை கொண்டிருக்க மாட்டார்கள் என்பது பலஇடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள
ஈழ மண் ஈழ மண் எங்களின் சொந்த மண் அதை தன் சொந்தமென்று யார் சொன்னவன் நம் மண்ணின் உள்ளே வந்து பார் வந்தாலும் நிற்க முடியுமா உன்னால் எம் முன்னே காசுக்காய் காட்டியே கொடுத்தாலும் கடத்தித்தான் நடு காட்டில் விட்டாலும் எங்கள் வாழ் நாட்கள் சில நாளே ஆனாலும் எம் மண்ணின் விடுதலை காண்போம் கோடியாய் கொட்டி நீ கொடுத்தாலும் குண்டை மழையாக பொழிந்தாலும் நம்மை பெற்ற அன்னை மண்னை நாம் மறந்து போகமாட்டோம் அமைதியாய் பதுங்குது புலி அது பாய்ந்திடும் போது தெரியும் உனக்கு அதன் வீரம் பாமினி தமிழா தமிழன் என்ற அடை மொழியை அகற்ற நாம் என்ன இறைவனிடம் வரமா கேட்க முடியும் அதர்மத்தை அகற்ற அஸ்திரம்தான் வழியென நாம் கீதையில் கற்றதுண்டு நாம் வாழும் நரகத்தில் நமது இடம் அகதியின் உறைவிடம் அதை அஸ்தமனம் ஆக்க ஆண்டவா எம்மை ஆளவிடு என
"புதுக்கவிதை' ஒரு சொல் - ஓயாத விவாதம்! மா.ஆறுமுககண்ணன் First Published : 11 Oct 2009 12:33:00 AM IST Last Updated : "புதுக்கவிதை'-இச் சொல் சரிதானா என்றொரு விவாதம் அவ்வகைக் கவிதைகள் தோன்றத் தொடங்கிய காலந்தொட்டே இருந்துவருகிறது. மரபுக் கவிதைகளை பழைய கவிதைகள் என ஒரு சாரார் அழைத்ததன் விளைவுதான் சந்தங்கள் இன்றி எழுதப்பட்ட கவிதைகள் "புதுக்கவிதைகள்' என அழைக்கப்படலாயிற்றோ என எண்ணத் தோன்றுகிறது. புதுமையுடன் படைக்கப்படும் கவிதைகள் அனைத்துமே புதுக்கவிதைகள்தான். வடிவத்தைப் பொருத்த அளவில் குறுந்தொகையின் ஒவ்வொரு பாடலும்
Image
நல்வழி First Published : 11 Oct 2009 12:40:00 AM IST Last Updated : மரம் பழுத்தால் வெüவாலை வாவென்று கூவிஇரந்தழைப்பார் யாருமங் கில்லை - சுரந்தமுதம்கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்உற்றார் உலகத் தவர்.(பா-29)மரத்தில் பழம் பழுத்திருந்தால் வெüவாலை வாவென்று கூவியழைப்பவர் எவரும் அங்கில்லை. அவை, தாங்களாகவே வந்து சேரும். கன்றினையுடைய பசுவானது பாலினைத் தருவது போல, தம்மிடம் உள்ளதை பிறருக்குக் கொடுப்பாரானால், உலகினர் தாமாகவே வந்து உறவினராவர்.
இந்த வாரம் கலாரசிகன் First Published : 11 Oct 2009 12:47:00 AM IST Last Updated : கடந்த வாரம் எழுதும்போது, இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளராக இருந்த கவிஞர் திருமலைராஜனைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். தொடர்பு விட்டுப்போய்விட்ட அந்த நண்பரைப் பற்றிய தகவலை அன்பர் அ. நீலகண்டன் மதுரையிலிருந்து தெரிவிக்கிறார்.மதுபோதைக்கு அடிமையாகி, தான் யார் என்பதையே மறந்துவிட்ட நிலையில், மதுபோதை மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செயல்படும் ஒரு அறக்கட்டளையின் தொழிற்பயிற்சி மையத்தில் சிகிச்சை பெற்று வந்தாராம் திருமலைராஜன்."அவரிடம் நான் பேசினேன
Know the Etymology : 138 Place Name of the Day: Tuesday, 06 October 2009 Agncha'nath-thaazhvu/ Agncha'nanthaazhvu அஞ்சணத்தாழ்வு/ அஞ்சணந்தாழ்வு Añcaṇattāḻvu / Añcaṇantāḻvu Agncha’nam+thaazhvu Agnchuva’n’nam+thaazhvu The low-lying land of the Arab Muslim / West Asian trade guild Agnchuva’n’nam Agncha’nam Probably from Agnchuva’n’nam: A West Asian or Arab Muslim trade guild that was operating in South and Southeast Asia in the medieval centuries and was issuing inscriptions in Tamil and Telugu (9th-13th centuries CE, Glossary of Tamil Inscriptions); Agnchuva’n’nap-pea’ru: An honour associated with the said trade guild (Tamil inscription c.1000 CE, GTI); Hagnjamana, Hagnjuman, Agnjuman: Trade guild, chamber of commerce (Persian); Anjuna: A coastal settlement of Arab traders in Goa, dating back to 12th century CE (Today’s Anjuna Beach). Thaazhvu Also Thaazh, Thaa’l: A low-lying land, a common affix in Eezham Tamil place names; Thaazh: (adjective) low-lying (