Posts

Showing posts from April, 2014

அருட்பா திருக்குறட்பா - வெ.அரங்கராசன்

Image
அருட்பா திருக்குறட்பா இலக்குவனார் திருவள்ளுவன்      27 ஏப்பிரல் 2014       கருத்திற்காக..      பேராசிரியர் வெ.அரங்கராசன் முன்னாள் தமிழ்த்துறை தலைவர் கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி கோவிற்பட்டி- 628 502. கைப்பேசி: 98409 47998. குறும்பா, பெரும்பா, அரும்பா… அறம்பொருள் இன்பம், தரும்பா… விரும்பா தவரும், விரும்பும் நறும்பா, அருட்பா குறட்பா… எறும்பா உழைத்திட அரிவினைத் தரும்பா, பெரும்புகழ் பெரும்பா… இரும்பா இருப்போர் தமையும், கரும்பாக் கரைக்கும், குறட்பா… விருப்பா? வெறுப்பா? இரண்டையும் அறுப்பா, எனச்சொலும் திருப்பா… திறப்பா, படித்துப் பறப்பா… நெறிப்பா, குறிப்பா இருப்பா… அயிர்ப்பா, உரிப்பா, உயர்த்தும் உயிர்ப்பா, உரைப்பா, உணரப்பா… கோலப்பா, கொண்டு பாரப்பா… ஞாலப்பா, நாளும் ஓதப்பா… முன்பா பின்பா ஒப்பா நன்பா, இன்பா, மின்பா… அன்பா அறிவிக்கும் மன்பா… துன்பா? வன்பா? விடும்பா…  கனிப்பா, தனிப்பா, குறள்போல் இனிப்பா எப்பா? புனிதப்பா… மனிதப்பா, அமுத மொழிப்பா… மணிப்பா, ஆணிப்பா, பணிப்பா… “கற்பா இருப்பா” எனும்பா… பொற்பா, பொங்கும்

வள்ளுவரும் அரசியலும் 6 – முனைவர் பா.நடராசன்

Image
வள்ளுவரும் அரசியலும் 6 – முனைவர் பா.நடராசன் இலக்குவனார் திருவள்ளுவன்      27 ஏப்பிரல் 2014       கருத்திற்காக..   (சித்திரை 07, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 20, 2014 இதழின் தொடர்ச்சி)   பொருளும் இன்பமும் 2. இங்ஙனம் இன்பத்திற்கு வித்தாகப் பொருளுக்கு முதலிடம் கொடுத்து, அரசியலுக்குத் துணையிடம் வகுத்த முறையால் சில உண்மைகள் பெறப்படுகின்றன. அரசியல் உரிமை என்பதை விடப் பொருளாதார உரிமையே. தனி மனிதயின்பத்திற்கு வேண்டுவது. இதை குடிகட்காகச் சொல்லப்பெறும் ஒழிபியலில் விளக்க முயல்கிறார். ‘‘இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்’’ என்கிறார். அரச அமைப்பும் சிறப்பும் 3. மேலும் இன்பக் குறிக்கோளுக்குத் துணைக்காரணமாயமையும் அரசியல் உரிமைபற்றிப் பேசி என்ன பயன்? அது ஊழான் வருவதன்றோ? அதுபோலவே அரசியல் அமைப்புப் பற்றியும் முடியாட்சி, குடியாட்சி என்றெல்லாம் விரிப்பானேன்? எங்ஙனமாயினும் ஆட்சி நலன் ஒருவனிடம் செறிந்து படுவதே எல்லா அரசியல் அமைப்புகளுடையவும் இயல்பாக இருக்கிறது. அங்ஙனமாகவே, அமைப்பு எங்ஙனமாயினும், ஆட்சி நல்லாட்சியாக இருத்தல் வேண்டும். உருவமன்று க

வள்ளுவர் குலவினம் – பாவாணர்

Image
வள்ளுவர் குலவினம் – பேராசிரியர் ஞா.தேவநேயப்பாவாணர் இலக்குவனார் திருவள்ளுவன்      27 ஏப்பிரல் 2014       கருத்திற்காக..   இவ்வுலகத்தினர் எல்லாரும் இருமைப் பயனும் எய்தி இன்புறுமாறு. எக்காலத்திற்கும் எந்நாட்டிற்கும் ஏற்றவாறு. வாழ்க்கைக்கு வழி வகுத்து அதில் நடந்தும் காட்டிய வள்ளுவர் தமிழ்ப் புலவருள் தலையாயார் என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்த முடிவாம்.   இத்தகைய தலைமை சான்ற வள்ளுவரை, வேண்டுமென்றே ஆரிய வழியினராகக் காட்ட வேண்டி, பிராமணத் தந்தைக்குப் பிறந்தவராகக் கூறுவது ஒருசார் புறத் தமிழர் மரபு. இனி, இதற்கு எதிராக அவரை உயர்த்திக் காட்டுதற் பொருட்டு உண்மைக்கு மாறாய் உயர்வாகக் கருதப் பெறுகின்ற ஒரு குலத்தினராகக் கூறுவது, ஒருசார் அகத்தமிழர் மரபு. பிறப்பால் சிறப்பில்லையென்றும் ஒழுக்கத்தால்தான் உயர்வு என்றும் கூறிய வள்ளுவரை, அவர் கொள்கைக்கு மாறாகப் பிறப்பால் இழிந்தவராகக் கருதுவது எத்துணைப் பேதமை!   திருவள்ளுவர் தம் முதற் குறளில் ஆண்டுள்ள ‘ஆதி பகவன்’ என்னும் தொடரை, துரும்பைத் தூணாக்குவது போலும் பேனைப் பெருமாளாக்குவது போலும் மிகப் பெரிதாக்கி, அது அவரின் பெற்றோர

தமிழ் உணர்வு – காசி ஆனந்தன் poem by kasi ananthan

Image
தமிழ் உணர்வு – உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனார் இலக்குவனார் திருவள்ளுவன்      27 ஏப்பிரல் 2014       கருத்திற்காக.. தமிழென் அன்னை! தமிழென் தந்தை! தமிழென்றன் உடன் பிறப்பு! தமிழென் மனைவி! தமிழென் பிள்ளை! தமிழென் நட்புடைத் தோழன்! தமிழென் சுற்றம்! தமிழென் சிற்றூர்! தமிழென் மாமணித் தேசம்! தமிழ்யான் வாழும் எழில்மா ஞாலம்! தமிழே என்னுயிர் மூலம்! அகரமுதல இணைய இதழ் 24

பைந்தமிழ்ப் பெருந்தேவி திருப்பள்ளியெழுச்சி

Image
பைந்தமிழ்ப் பெருந்தேவி திருப்பள்ளியெழுச்சி இலக்குவனார் திருவள்ளுவன்      27 ஏப்பிரல் 2014       கருத்திற்காக.. இன்றெமை ஆட்கொளும் எந்தமிழ்ச் செல்வி                 எந்தமிழ்க் கன்னியே எம்முயிர்த் தேவி மன்னிடும் உயிருடல் மாண்பொருள் எல்லாம்                 மகிழ்வுடன் நின்பதம் வைத்துமே நிற்பம் நின்னரு வரவினை நினைத்துமே இந்நாள்                 நிற்கிறார் நந்தமிழ் அரசியல் மக்கள் உன்னரு நெடும்புகழ் உற்றிடு மாதே,                 உவப்புடன் பள்ளியெ ழுந்தரு ளாயே. – பைந்தமிழ்ப் பாவலர் அ.கி.பரந்தாமனார் அகரமுதல இணைய இதழ் 24