Posts

Showing posts from July, 2016

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.18 : புறஞ்சொல்லல் விலக்கல்

Image
அகரமுதல 144, ஆடி 0 9 , 2047 / சூலை 24 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன்      24 சூலை 2016       கருத்திற்காக.. (வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.17. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 18. புறஞ்சொல்லல் விலக்கல் புறஞ்சொலல் பிறரைப் புறத்திழித் துரைத்தல். புறஞ்சொல்லல் என்பது ஒருவரை அவர் இல்லாதபோது இழிவாகப் பேசுதல் ஆகும். அறங்கொலு மறத்திற் புறஞ்சொலல் கொடிது. புறஞ்சொல்லல் அறத்தைக் கொல்லும் தீய செயல்களில் மிகக் கொடியது ஆகும். புறஞ்சொலல் பொய்முதற் புரையெலாம் வளர்க்கும். புறஞ்சொல்லல் பொய் முதலான குற்றங்களை வளர்க்கும் தன்மை உடையது. புறஞ்சொலல் புறனெலாம் பொருபகை யாக்கும். புறஞ்சொல்லல் ஒருவனுக்கு விரோதிகள் ஏற்படக் காரணமாக அமையும். புன்மகார் செயல்களுட் புறஞ்சொல லொன்று. புறஞ்சொல்லல் கீழ்மக்களின் குணங்களுள் ஒன்று ஆகும். புறஞ்சொலு நாவின ரறஞ்சொலல் வஞ்சம். புறஞ்சொல்லுபவர்கள் அறத்தினைப் பேசுவது ஏமாற்று வேலை ஆகும். புறஞ்சொலு நாவினர்க் கறஞ்சொலன் மடமை. புறஞ்சொல்லும் இயல்பு உடையவர்களுக்கு அறத்தினைப்பற்றி எடுத்துக்கூறுவது அறிவற்ற செயல் ஆகும். புறஞ்சொலல்

விரல் நுனிகளில் தீ – இரவி கல்யாணராமன்

Image
அகரமுதல 144, ஆடி 0 9 , 2047 / சூலை 24 , 2016 விரல் நுனிகளில் தீ – இரவி கல்யாணராமன் இலக்குவனார் திருவள்ளுவன்      24 சூலை 2016       கருத்திற்காக.. விரல் நுனிகளில் தீ! தீ! – அவள் விரல் நுனிகளில் தீ! மிகஅழகிய முகமும் – ஒரு கொடியசைகிற உடலும் இளவயதினள் கனிமொழியினள் எழிலுருவினள் எனினும் – அவள் விரல் நுனிகளில் தீ கண்ணனைத் தொட்டவளோ – கவிதை எழுதுவதால் வெம்மை யுற்றவளோ கண்ணகி யாய்த்தன் காற்சிலம்பை – எறிந்து விட்டவளோ ஊரைச் சுட்டவளோ – அவள் விரல் நுனிகளில் தீ வீணை இசைப்பாளோ – ஓவியம் தீட்டி இழைப்பாளோ சின்ன குழந்தையைத்தன் – நெஞ்சில் வாரி அணைப்பாளோ தென்றலை ஒதுக்கிவிட்டுக் – கை வீசி நடப்பாளோ – செஞ் சாந்துக் குழம்பெடுத்து – வாசற் கோலம் வரைவாளோ – அவள் விரல் நுனிகளில் தீ நேச மனத்தினளோ – நேர்மைச் சீற்றம் உடையவளோ தேசு மிகுந்தவளோ – கையில் திகிறி எடுப்பவளோ மாயம் புரிபவளோ – இல்லை மாய்மாலம் செய்பவளோ – நகச் சாயம் பளபளக்க – என்னை வாட்டி வதைத்தனளே – அவள் விரல் நுனிகளில் தீ – இரவி கல்யாணராமன் விரல் நுனிகளில் தீ.m4a drive.google.com https://w

கவிஞன் – தமிழ்ஒளி

Image
அகரமுதல 144, ஆடி 0 9 , 2047 / சூலை 24 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன்      24 சூலை 2016       கருத்திற்காக.. கவிஞன் மோனக் கருக்கலிலே – விண் முத்தொளி தோன்றுகையில் வானக் கடல்கடந்தே – அதை வாங்கிவர விரைவேன்! முத்துப் பனித்துளியில் – கதிர் முத்த மளிக்கையிலே பித்துக் கவிபுனைந்தே – மணம் பேசி மகிழ்ந்திடுவேன்! சாயும் கதிர்களிலே – இருட் சாலம் புரிகையிலே காயும் நிலவெனவே – வழி காட்ட எழுந்திடுவேன்! நீலக் கடல்அலையில் – கதிர் நெய்த வலையிடையே கோலக் குளிர்மணிபோல் – கவி கொட்டிச் சிரித்திடுவேன்! ஊரை எழுப்பிடவே – துயர் ஒன்றை நொறுக்கிடவே தாரை முழக்கிடுவேன் – தமிழ்ச் சாதி விழித்திடவே! கத்தி முனைதனிலே – பயங் காட்டும் உலகினிலே சத்தியப் பேரிகையை – நான் தட்டி முழக்கிடுவேன்!   கவிஞர் தமிழ்ஒளி கலாவல்லி – 1955