Posts

Showing posts from 2010
Image
இந்த வாரம் கலாரசிகன் First Published : 31 Oct 2010 03:37:41 AM IST Last Updated : கடந்த நூற்றாண்டில் தமிழுக்கு அளப்பறிய பங்களிப்பு நல்கியோரில் முதல்வர் யார் என்று யாராவது என்னைக் கேட்டால், கிஞ்சித்தும் தயக்கமின்றி நான் பகரும் பெயர், "தமிழ்த் தென்றல்' திரு.வி.க. என்பதாகத்தான் இருக்கும். அவரது இதழியல் பங்களிப்பு ஒருபுறம் இருக்க, ஆன்மிகம், அரசியல், இலக்கியம் என்று எல்லா தளங்களிலும் பங்களிப்பு நிகழ்த்திய மகான் "மயிலை முனிவர்'. மேடைப்பேச்சுக்கு இலக்கணம் வகுத்த பெருமையும் திரு.வி.க.வையே சாரும்.  "முருகன் அல்லது அழகு' என்றொரு புத்தகம். காரைக்குடியிலிருந்து வெளிவந்த "குமரன்' என்கிற மாத இதழின் முதல் இதழில் திரு.வி.க. "முருகன்' என்க

முரண்சுவை-40: பாட்டுக் கோட்டை!

Image
முரண்சுவை-40: பாட்டுக் கோட்டை! ராஜேஷ் First Published : 31 Oct 2010 12:00:00 AM IST Last Updated : 1959ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி கல்யாண சுந்தரம் இறந்துவிட்டார் என்று தந்தி வந்தது. அப்பொழுது நான் என்னுடைய அத்தையின் வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய அத்தையின் கணவரான அணைக்காடு டேவிஸ் என்பவர்தான் (அந்தக் காலத்தில் திராவிடர் கழகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தார்)  கல்யாண சுந்தரத்தைப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவர். எனவே அவரது பெயருக்கு தந்தி வந்தது. "கல்யாணப் பரிசு' படம் பார்த்துவிட்டு அந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்த எனக்கு அந்தச் செய்தி ஓர் அதிர்ச்சியைத் தந்தது. தத்துவப் பாடலானாலும் தாலாட்டுப் பாடலானாலும் இயற்கையைப் பாடினாலும் காதல
Image
பிறவிக் கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன் First Published : 26 Sep 2010 12:29:00 AM IST Last Updated : கவிஞர் கம்பதாசனின் பெயரை இந்தத் தலைமுறையினர் அதிகம் அறிய வாய்ப்பில்லை. இன்று அவர் இருந்திருந்தால் இன்னும் ஆறு ஆண்டுகளில் நூற்றாண்டு விழா கண்டிருப்பார். ""காளிதாசன் (சம்ஸ்கிருத மொழிக்கவிஞர்-காளிதாசன் பாரதியாரின் புனைபெயர்), பாரதிதாசன் (சுப்புரத்தினம்), சுரதா (சுப்புரத்தின தாசன்), கம்பதாசன் இவர்கள் நம்நாட்டு முதல்தர கவிஞர்கள். இவர்கள் பிறவிக் கவிஞர்கள்'' என்று பாரதிதாசன் வரிசையில் கம்பதாசனையும் இணைத்து மூத்த எழுத்தாளர் வ.ரா., புகழ் மகுடம் சூட்டி மகிழ்ந்தது ஒன்றே போதும்.""கம்பதாசன் எழுதும் நூல்கள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. அவை அவராலேயே இய
"பாரதி பித்தர்' தொ.மு.சி. ரகுநாதன் கலைமாமணி விக்கிரமன் First Published : 02 Oct 2010 11:04:00 PM IST Last Updated : தொ.மு.சி. ரகுநாதன்' - எழுத்தும் பெயரும் அறியாதவர்கள் மிகக் குறைவே.1941-ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் தாக்கம், அடிமைப்பட்டிருந்த பாரதம் முழுவதும் எதிரொலித்தது. ரகுநாதன் போன்ற இளம் ரத்தம் ஓடுபவர்கள் துடித்தெழுந்தார்கள். அவர் துடிப்புக்கு வழிகாட்டியாக, திருநெல்வேலியில் முத்தையா தொண்டைமான் என்ற தேசியவாதி, அந்நியர் ஆட்சியை அகற்றும் விடுதலைப் போராட்டங்களில் இளைஞர்களை ஈடுபடச் செய்தார்.ரகுநாதன், திருநெல்வேலி மாவட்டத்தில், 1923-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி முத்தையா தொண்டைமான் - முத்தம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிப் படிப்புக் காலத்
இவளைச் சொல்லிக் குற்றமில்லை தெள்ளாறு ந.பானு First Published : 10 Oct 2010 12:00:00 AM IST Last Updated : 10 Oct 2010 10:29:53 AM IST யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்ற உயர்ந்த நோக்குடன் வாழ்வது தமிழர் மரபு. ஆனால், மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் வாழ்ந்த ஒரு தலைவன், தான் பெற்ற துன்பம் வேறு எவரும் பெறக்கூடாது என்ற எண்ணத்தில் கற்போர் மனதில் நிற்கும் வண்ணம் தன் கருத்தை வெளியிடும் பாங்கமைந்த பாடல் ஒன்றைப் பாடியுள்ளான். இத்தலைவன் நரபதி என்று எல்லோராலும் போற்றப்படும் நந்திவர்மனுக்குரிய மயிலாப்பூரில் வாழ்ந்து வருகிறான். ஒருநாள் வீதியில் வந்துகொண்டிருக்கிறான். எதிரே பேரழகி ஒருத்தி வரக்காண்கிறான். வள்ளுவர் காட்டும் தலைவன் வர்ணிப்பதுபோல,  முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேல் உண்கண் வேய்தோள் அவட்கு  அதாவது,
பொன்னியின் புதல்வர் எழுதிய சுந்தா கலைமாமணி விக்கிரமன் First Published : 10 Oct 2010 12:00:00 AM IST Last Updated : 10 Oct 2010 10:29:07 AM IST பொன்னியின் புதல்வர்' என்று பெயரிடப்பட்ட அமரர் "கல்கி'யின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்று 1976-ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த வரலாற்று நூலில் "இந்த வரலாறு தோன்றிய வரலாறு' என்று நூல் எழுதப்பட்ட வரலாற்றை, கல்கியின் புதல்வர் கி.ராஜேந்திரன் ஐந்து பக்கங்களில் சிறந்த, பயனுள்ள தகவல் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், ""தினமணி கதிரில், தம் புதுதில்லி வாசத்தின் அனுபவங்களை எழுதத் தொடங்கினார் ஒருவர். அதைப் படித்தவுடன் "அடடா! இவரன்றோ அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதச் சரியான ஆசாமி என்று தோன்றியது'' என்று எழுதியுள

மறைமலையடிகளார் மாண்பு!

Image
மறைமலையடிகளார் மாண்பு! - மா.க ஈழவேந்தன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் - இலங்கை நாடுகடந்த தமிழீழ அரசின் கனடாப்பேராளர் த னித்தமிழ் இயங்கங் கண்ட தந்தை மறைமலை அடிகள்... தமிழக மண்ணில் 15-07-1876; விண்ணில் - 15-09-1950.       15-09-1909ல் அறிஞர் அண்ணா தோன்றினார். 15-09-1950ல் மறைமலை அடிகள் மறைந்தார்.  இவ்விரு பெருமக்களின் தோற்றமும் மறைவும் செப்டம்பர் 15ல் நடைபெற்றுள்ளதால் இந்நாள் பெருமை பெற்ற நாளாக விளங்குகின்றது. எனவே மறைந்தமலை அடிகளைப்பற்றி இதே நாளில் பிறந்த அறிஞர் அண்ணா கூறுவதை முதலில் நினைத்துப்பார்த்து மகிழ்வு கூறுவோமாக: அறிஞர் அண்ணா வாழ்த்தும் மறைமலை அடிகள் "மறைமலைஅடிகளாரின் மாண்பினை எண்ணும்தோறும் வியக்கத்தக்க மாண்பினை அவரோடு நெருங்கிப்பழகிய பலரும் எடுத்துரைத்திருக்கின்றார்கள். நான் அவரோடு அதிகம் நெருங்கிப் பழகியவன் அல்ல. அவரோடு எங்களுக்கு ஏற்பட்ட தொடர்பெல்லாம் இந்நாட்டில் முதலில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போதுதான் மறைமலையடிகளாரது புலமை, இந்தி எதிர்ப்புப் போராட்ட்த்தில் ஈடுபட்ட எங்களுக்கெல்லாம் பெரும் அரணாக அமைந்திருந்தது. இந்தி, தமிழகத்துக்குத் தே
சோழர் கால வணிக நகரம்... First Published : 23 Sep 2010 01:35:11 PM IST Last Updated : தஞ்சாவூர் முத்தரையர் என்னும் சிற்றரசு மரபினரின் தலைநகரமாக விளங்கியது.​ இதை ஏறத்தாழ கி.பி.​ 850 ஆண்டுகளில் விஜயாலயச் சோழன் கைப்பற்றி சோழ அரசை நிறுவினான்.​ அது முதல் ராஜராஜன் காலம் வரை தஞ்சாவூர் சோழப் பேரரசின் தலைநகரமாகத் திகழ்ந்தது.​ ​ ​ ​ தஞ்சாவூர் அரசியல் தலைநகரமாக மட்டுமன்றி மிகப் பெரிய உள்நாட்டு வணிக நகரமாகவும்,​​ வளஞ்சியர்,​​ திசையாயிரத்து ஐந்நூற்றுவர் முதலிய பன்னாட்டு வணிகக் குழுக்களும் வந்து தங்கி வணிகம் செய்த சர்வதேச வணிக நகரமாகவும் விளங்கியது என்பதை முதலாம் ஆதித்த சோழன் காலத்திலிருந்து இரண்டாம் ராஜாதி ராஜன் காலம் வரை எழுதப் பெற்ற கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம்.​ ​ ​ முதலாம் ஆதித்தன் காலத்தில் மடிகை என்பது வணிகர்க
Image
மொழிப்பயிற்சி-6: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! கவிக்கோ ஞானச்செல்வன் First Published : 12 Sep 2010 07:46:00 PM IST Last Updated : அண்ணாமலை பல்கலை கழகம் என்று எழுதுகின்ற பத்திரிகைகள் உள்ளன. சட்ட படிப்பு, கல்வி துறை, வருகை பதிவேடு என்றெல்லாம் வருவனவற்றை ஏடுகளில் பார்க்கும்போது தமிழ் நெஞ்சம் கொதிக்கிறது. அதேநேரம், ஒற்று மிகக் கூடாத இடத்தில் ஒற்றெழுத்தைப் போட்டு எழுதி அந்தச் சொல் இன்று எங்கும் நீக்கமற நிறைந்துவிட்டது. அச்சொல்: சின்னத்திரை என்பதாம். வீட்டில் பார்க்கும் தொலைக்காட்சியைத்தான் இப்படிச் சுட்டுகிறோம். திரைப்பட அரங்கிலிருப்பது பெரிய திரை. ஆதலின் இது சிறிய திரை. சிறிய, பெரிய, சின்ன, பெரிய எனும் சொற்களுக்கு முன் வல்லினம் மிகாது. சிறிய திரை, சின்ன திரை,
Image
மொழிப்பயிற்சி - 4: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! கவிக்கோ ஞானச்செல்வன் First Published : 29 Aug 2010 12:43:46 PM IST Last Updated : 13.பண்டகசாலை பண்டங்கள் உடைய இடம் பண்டகம் அல்லது பண்டசாலை எனல் போதுமானது. ஆனால் கூட்டுறவுப் பண்டக சாலை என்னும் வழக்கு தமிழகத்தில் நிலைபெற்றுள்ளது. அகம் எனின் மனம், வீடு, இடம் எனப் பலபொருள் உண்டெனினும் ஈண்டு இடம் எனப் பொருள் கொள்க. நூல்கள் உடைய இடம் நூலகம்; பண்டங்கள் உடைய இடம் பண்டகம். பின் ஏன் சாலை என்று ஒரு சொல். உணவுச்சாலை என்பது போல் பண்ட சாலை எனலும் சரியாம். 14.பதட்டம் நம் மக்களின் பேச்சு வழக்கிலும் எழுத்திலும் பதட்டம் எனும் சொல் நிரம்பப் பயன்பாட்டில் உள்ளது. இச்சொல்லுக்குப் பொருள் இல்லை. இது பதற்றம் என்று இருத்தல் வேண்டும். பதறு, பதற்றம் எனும் சொற்கள் சரியானவை; பொருளுடையவை. இனி, பதட்டம் விட்டு பதற்றம் கொள்ளுவோம். 15.கண்றாவி இப்படி ஒரு சொல் எந்த அகர முதலியிலாவது (அகராதி) பார்த்ததுண்டா? இப்படி ஒரு சொல் இல்லவே இல்லை. ஆனால் பத்திரிகை, தொலைக
Image
மொழிப்பயிற்சி-7: பிழையின்றித் தமிழ் பேசுவோம்-எழுதுவோம்! கவிக்கோ ஞானச்செல்வன் First Published : 19 Sep 2010 12:09:25 PM IST Last Updated : வல்லெழுத்து மிகா இடங்கள்1.​ அது,​​ இது,​​ எது ​ முன் மிகாது.(எ-டு)​ அது பெரிது,​​ இது சிறிது,​​ எது கரும்பு?2.​ அவை,​​ இவை,​​ எவை ​ முன் மிகாது.(எ-டு)அவை சென்றன,​​ இவை கண்டன,​​ எவை தின்றன?3.​ அவ்வாறு,​​ இவ்வாறு,​​ எவ்வாறு?(எ-டு)​ அவ்வாறு சொன்னார்,​​ இவ்வாறு செப்பினார்,​​ எவ்வாறு கண்டார்?4.​ ஒரு,​​ இரு,​​ அறு,​​ எழு என்னும் எண்களின் முன் மிகாது.(எ-டு)​ ஒரு கோடி,​​ இரு தாமரை,​​ அறுபதம்,​​ எழுசிறப்பு.5.​ பல,​​ சில முன் மிகாது.(எ-டு)​ பல சொற்கள்,​​ சில பதர்கள்,​​ பல தடைகள்,​​ சில கனவுகள்.6.​ உகர ஈற்று ​ வினையெச்சங்கள் முன் மிகாது.(எ-டு)​ வந்து சென்றான்,​​ நின்று கண்டான்.7.​ அத்தனை,​​ இத
தொண்டியன்ன இவள் நலனே... சி.மகேஸ்வரி First Published : 12 Sep 2010 01:16:00 AM IST Last Updated : எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை. "நல்ல குறுந்தொகை' என்ற சிறப்பைப் பெற்ற நூல். குறுந்தொகையில் காணப்படும் நெய்தல் திணையில் அமைந்த புலவர் அம்மூவனார் இயற்றிய பாடல் ஒன்று, தலைவன், தலைவியோடு களவொழுக்கத்தில் ஈடுபட்டு அவளைப் பிரிய நினைக்கும்போது, தோழி தலைவனைப் பார்த்துக் கூறுவதாக அமைந்துள்ளது. இதற்கு, இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று தோழி கூறியதாக இதன் துறை அமைந்துள்ளது.கடலும் கடல் சார்ந்த நிலமுமாகிய நெய்தல் நிலத்தில், தலைவிக்கு மட்டுமல்லாது அங்குள்ள புன்னை மரத்துக்கும் "விண்மீனைக் கண்டது போன்று மென்மையான அரும்புகள் மலர்ந்துள்ள முடம்பட்டு முதிர்ந்த புன்னை மரத்தின் கரிய கிளையில் புட்கள் மிகுதியாகத் தங்கியிருக்கும் அத்தகைய மென்மையான நிலமாகிய கடற்கரைக்குத் தலைவனே'' என்று உவமை கூறப்பட்டுள்ளது.தலைவியைப் பிரிந்து செல்ல நினைக்கும் தலைவனைப் பார்த்து,
மன்றம் வேறு; மண்டபம் வேறு! மா.சின்னு First Published : 12 Sep 2010 01:17:00 AM IST Last Updated : மன்றம் - மண்டபம் ஆகிய இரண்டும் பல பொருள்தரும் இருவேறு சொற்களாகவே நூலாசிரியர்களாôலும் உரையாசிரியர்களாலும் கருதப்பட்டன. மன்று என்பது, அம் சாரியை பெற்று "மன்றம்' என வழங்கப்படுகிறது. சொற்களில் சிலவற்றுக்குத் தலைமைப் பொருள், துணைப்பொருள் என இருவகைப் பொருள் உண்டு. மன்றம் என்பதற்கு, அவை (சபை) என்பதே தலைமைப் பொருள். மன்றம் என்றாலும் மன்றகம் என்றாலும் ஒன்றுதான்.""மன்றகத்தே நம்பி மாடம் எடுத்தது'' (திருமந்திரம்.148) என்பார் திருமூலர். அவையோர் கூடும் இடத்தையே மன்றகம் என்றார். சிலப்பதிகாரத்தில், "கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியில்' (40) என வருமிட