Posts

Showing posts from October, 2018

அகநானூற்றில் ஊர்கள் 1/7 – தி. இராதா

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         28 அக்தோபர் 2018         ஒருவர் கருத்திட்டுள்ளார் அகநானூற்றில்    ஊர்கள்  (1/7)                                  ‘ யாதும்   ஊரே   யாவரும்   கேளிர் ’            சங்கக் காலத்தின் வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்வது சங்க இலக்கியங்கள். எந்த இலக்கியத்திற்கும் இல்லாத தனிச்சிறப்புகள் சங்க இலக்கியத்திற்கு உண்டு. சங்க இலக்கிய நூல்களில் பல ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் சில பெயர்கள் இன்றும் வழக்கில் மக்களால் வழங்கி வருகின்றன. அகநானூறு அகநானூறு சார்ந்த பாடல்களில் அகவாழ்க்கை மட்டும் அல்லாமல் அப்பாடல்களில் சங்கக்கால மக்கள் வாழ்ந்த ஊர்கள், தலைவன், மன்னன், மன்னனின் நாடு போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க செய்திகள் பல இடம் பெற்றுள்ளன. அகநானூற்றில் 40க்கு மேற்பட்ட ஊர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஊர்கள் பற்றிய செய்திகளை இவ்வாய்வுக் கட்டுரை ஆராய்கிறது.    மனிதர்கள் கூடிவாழ்ந்த சமூக நிலை ஊர்களின் தோற்றமாக திகழ்ந்தது. அவர்களது வாழ்க்கைக்கேற்ப சிற்றூர்களாகவும், பேரூர்களாகவும் தோன்றிப் பின் நகரங்கள், பெருநகரங்களாக உருவானது. மக்கள் தங்களை வேறுபடுத

காகம் பறந்தது – சந்தானம் சுதாகர்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         25 அக்தோபர் 2018         கருத்திற்காக.. காகம்  பறந்தது – சந்தானம் சுதாகர் கடன் கேட்பவர் கண்ணில் பட்டதும் உடன் நடைமாற்றும் ஓட்டம் எடுக்கும் பொருள் பார்த்துப் பொருந்தும் உறவுபோல் இருள்நிறம் இருக்கும் எண்ணம் பொன்னிறம் கொண்ட இனத்துடன் கூடியுண்ணும் காகம் என்றும் மதில்மேல் எனக்காக நிற்கும் இன்று பறந்தது என்வரவு பார்த்தே! சந்தானம்   சுதாகர்

காகம் பறந்தது – சந்தானம் சுதாகர்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         25 அக்தோபர் 2018         கருத்திற்காக.. காகம்  பறந்தது – சந்தானம் சுதாகர் கடன் கேட்பவர் கண்ணில் பட்டதும் உடன் நடைமாற்றும் ஓட்டம் எடுக்கும் பொருள் பார்த்துப் பொருந்தும் உறவுபோல் இருள்நிறம் இருக்கும் எண்ணம் பொன்னிறம் கொண்ட இனத்துடன் கூடியுண்ணும் காகம் என்றும் மதில்மேல் எனக்காக நிற்கும் இன்று பறந்தது என்வரவு பார்த்தே! சந்தானம்   சுதாகர்

மாற்றம் விரைவில் உண்டாகும் – மு. பொன்னவைக்கோ

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         24 அக்தோபர் 2018         கருத்திற்காக.. மாற்றம்   விரைவில்   உண்டாகும் தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு அவனே மாந்தன் முதலேடு அளித்தான் உலகப் பண்பாடு ஒன்றே குலமெனும் உயர்வோடு உரைத்தான் தெய்வம் ஒன்றென்று யாதும் ஊரே என்றுரைத்தான் யாவரும் கேளிர் என்றழைத்தான் அறமே வாழ்வின் நெறியென்றான் அருளே பொருளின் முதலென்றான் அன்பின் வழியது உலகென்றான் ஆசைப் பெருகின் அழிவென்றான் ஒழுக்க வாழ்வே உயர்வென்றான் அழுக்கா றின்றி வாழென்றான் ஒன்று பட்டால் வாழ்வென்றான் ஒற்றுமை இன்றேல் தாழ்வென்றான் பணிதல் யார்க்கும் நன்றென்றான் பகையே வாழ்வின் இருளென்றான் சினமே உயிர்க்குப் பகையென்றான் சீற்றம் தவிர்ப்பது சிறப்பென்றான் இன்சொல் யார்க்கும் அணியென்றான் இன்னா செய்தல் பழியென்றான் வாய்மை வாழ்வின் நெறியென்றான் தூய்மை வாழ்வின் விளக்கென்றான் அமிழ்தின் இனிய பண்பெல்லாம் அணியாய்க் கொண்ட தமிழன்தான் தன்னை இழந்து வாழ்கின்றான் தமிழை மறந்து அழிகின்றான் ஆங்கில மொழியின் தாக்கத்தால் ஆன்ற பெருமை இழக்கின்றான் க