Posts

Showing posts from February, 2019

சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 அ. அரவரசன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         28 பிப்பிரவரி 2019         கருத்திற்காக.. சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 மாந்த இனத்தின் வாழ்வியல் கூறுகளில் வனவியல் எவ்வாறு ஒன்றியும் இணைந்தும் ஊடுருவியும் உள்ளது என்பதை சங்கத் தமிழ் இலக்கியம் எவ்வகையில் எடுத்துரைக்கின்றது என்பதை பேராழியின் துளி நீரைச் சுவைத்துப் பார்க்கும் நோக்கில் நவில்வதே இக்கட்டுரை. மனித இனம் முதலில் தோன்றிய பகுதி கடல்கொண்ட தமிழகத்தின் தென்பகுதி என்றும் அதன் பெயர் ‘இலெமூரியா’ என்றும் அதன் வரலாற்றை நுணுகி ஆராய்ந்து வரையறுத்த வரலாற்று ஆய்வறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் லெமூரியா என்பது ‘இலெமூர்’ என்ற குரங்கின் பெயர்தான் என்பதை நோக்கும் போது பிற்காலத்தில் மனித இனத்தின் மூதாதையர் குரங்குதான் என்று  தார்வின் என்ற மேனாட்டு மாந்தவியல் அறிஞனின் கூற்று ஒத்துப் போவதை உணரலாம்.  வனவியல் என்பது தாவரவியல், விலங்கியல், பறவையியல், பூச்சியியல், நுண்ணுயிரியல். இயற்கையின் சூழலியல் சுற்றுப்புறவியல் எனப் பல்கிபெருகிய அனைத்தையும் உள்ளடக்கிய ‘பேரியல்’ என்பதே! இதை மனத்தில் நிறுத்தினால் அதில் உள்ளடங்கிய தாவரவியலையும் வ

பல விரிவுகளுக்கு வழிவகுக்கும் செந்தில் நாராயணனின் ‘தொல்காப்பிய உரைகள்’ – முனைவர் பா. இரா. சுப்பிரமணியன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         26 பிப்பிரவரி 2019         கருத்திற்காக.. பல விரிவுகளுக்கு வழிவகுக்கும் செந்தில் நாராயணனின் ‘தொல்காப்பிய உரைகள்’ முனைவர் பா.  இ ரா. சுப்பிரமணியன் அணிந்துரை முனைவர் அ.செந்தில்நாராயணன் சென்னைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்மொழித் துறையில் முனைவர்ப்பட்ட ஆய்வாளராக இருந்தபோதும், பின்னர் எங்கள் மொழி அறக்கட்டளையின் தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதித் திட்டத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியபோதும் தமிழ் இலக்கண ஆய்வில் அவர் காட்டிய ஆரவாரம் இல்லாத ஆர்வத்தின் அழுத்தத்தை உணர்ந்திருக்கிறேன். அழுத்தம் இல்லாத ஆர்வம் நீர்க்குமிழிபோல் கண நேரத்தில் காணாமல்போய்விடக் கூடியது.  செந்தில் நாராயணனின் நிலைத்த, அழுத்தமான ஆர்வத்தின் வெளிப்பாடாகத்தான்   தொல்காப்பிய உரைகள்  என்னும் இந்த நூலைக் காண்கிறேன். தொல்காப்பியத்திற்கு எழுந்த உரைகளுள் முதலாவது  இளம்பூரணரின் உரை . தொல்காப்பியத்திற்கும் இளம்பூரணரின் உரைக்கும் குறைந்தது 1200 ஆண்டு கால இடைவெளி இருக்கிறது. இந்த நீண்ட கால இடைவெளியில் இலக்கண ஆர்வலர்களிடையே அல்லது சமணத் தமிழ்த் துறவிகளிடையே தொல்காப்பியப் பயிற்சி

பாடுவேன் இவரை! – பேரறிஞர் அண்ணா

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         02 பிப்பிரவரி 2019         கருத்திற்காக.. பாடுவேன் இவரை! எவரைப் பாடமாட்டேன்? வாழ்வின் சுவை தன்னை வகையாய்ப் பல்லாண்டு உண்டு, உடல் பெருத்து ஊழியர் புடை சூழ தண்டு தளவாடமுடன் தார் அணிந்து தேர் ஏறும் அரசகுமாரர் அருளாலய அதிபர் தமைக் குறித்து அல்ல. பாடுவேன் இவரை குடிமகனாய் உள்ளோன் ஊர்சுற்றும் உழைப்பாளி தோள்குத்தும் முட்கள் நிறை மூட்டைதனைச் சுமப்போன் தாங்கொணாப் பாரந்தன்னைத் தூக்கித் தத்தளிப்போன் களத்தில் பணிபுரிவோன் உலைக் கூடத்து உழல்வோன் ஏரடிப்போன் தூக்கம் தொட்டிழுக்கும் துயர் கக்கும் கண் கொண்டோன் குளிர் கொட்ட மழை வாட்ட குமுறிக் கிடந்தோர் விழி இழந்தோர் முடமானோர் இவர்பற்றி என் கவிதை இஃதே என் காவியம் காண் – பேரறிஞர் அண்ணா பேரறிஞர் அண்ணா நினைவு நாள் (02/02)

உதவிய உள்ளங்கள் – பேரரசி முத்துக்குமார்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         01 பிப்பிரவரி 2019         கருத்திற்காக.. உதவிய உள்ளங்கள்  “மணியாகி விட்டது. நிகழ்ச்சி முடிவதற்குள் போகணும்பா…..சீக்கிரம் வண்டியை ஓட்டுங்கள்……இல்லை என்றால் இசையரசி ஆசிரியர் என்னைத்தான் திட்டுவார்கள்,” என்று தமிழரசன் கூறினான்.      “இரு…இரு…இது என்ன ‘ ஃபார்முலா  1’ வண்டியா? வேகமாக போவதற்கு?” என்றார் அவன் அப்பா அமுதன்.      திரு. அமுதன் ஊர்தி, சாலையில் போய்க் கொண்டிருந்தது. அப்போது…. யாரோ வயதான மூதாட்டி ஒருவர் அவர்களின் ஊர்தியின் முன் மயக்கமாகி ‘தொப்’ என்று விழுந்தார். இருவரும் பயந்து விட்டனர். வாகனத்தை விட்டு இறங்கி அந்த மூதாட்டியின் முகத்தில் தாங்கள் கொண்டு வந்த நீரைத் தெளித்தனர்.அவர்களைப் பார்த்து மீண்டும் மயக்கமடைந்தார். அவர் மீது சிராய்ப்புக் காயங்கள். அவரைப் பார்க்கவே பாவமாக இருந்தது…      ‘நேரமாகுதே! பாட்டியைப் பார்த்தாலும் பாவமா இருக்கு. என்ன செய்யலாம்?’ என்று சற்று  எண்ணினான்  தமிழரசன். இரக்கம் அவன் மனத்தில் வழிந்தோடியது.    உடனே, அந்த மூதாட்டியைத் தன் மகிழுந்தில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தார் தமி