Posts

Showing posts from September, 2016

பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 21-25 : தி.வே.விசயலட்சுமி

Image
அகரமுதல 153, புரட்டாசி 0 9 , 2047 / செப். 25 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன்      25 செப்தம்பர் 2016       கருத்திற்காக.. (பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 16.20 தொடர்ச்சி) பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 21-25 நல்லோர் நவிலும் நலம் பயக்கும் இன்குறளைக் கல்லார் அடையார் களிப்பு. அன்பும் அறிவும் ஆக்கமும் ஊக்கமும் பண்பும் குறளால் பெறு. 23.  வள்ளுவனார் வாய்ச்சொல் வகையுறக் கற்பவர். உள்ளுவர் நல்வினை ஓர்ந்து. 24. இன்பக் கடல்காண்பர் என்றும் குறள் கற்பவர். துன்பம்  தவிர்த்துவாழ் வார். 25. வையத்து வாழ்வாங்கு  வாழ்ந்திடக் கற்றிடுவோம் தெய்வத் திருக்குறளைத் தேர்ந்து. தி.வே.விசயலட்சுமி   பேசி – 98415 93517

மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 5/5 – கருமலைத்தமிழாழன்

Image
அகரமுதல 153, புரட்டாசி 0 9 , 2047 / செப். 25 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன்      25 செப்தம்பர் 2016       கருத்திற்காக.. (மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 4/5  தொடர்ச்சி) மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 5/5 இந்தியாவில்   மட்டுமன்றி  பிரான்சு  நாட்டில் இயங்குகின்ற   பேரவைதான்   அசாம்  தன்னில் சந்தமிகு   துவக்கவிழா   காணு   கின்றோம் சார்ந்திருக்கும்   மேகாலய   மாநி  லத்தில் நந்தமுடன்   நாளையங்கே   துவக்கு  கின்றோம் நன்றாகப்   பேரவைதான்   வளர்வ   தாலே சிந்தனைகள்   ஒன்றாகி   உலக  மெல்லாம் சிறப்பாக   நட்புறவோ   ஓங்கும்  நன்றாய் ! வெற்றுரைகள்   அமர்ந்துபேசி   கலைவ  தன்று வேதனைகள்  தீர்க்கின்ற   செயல்கள்  செய்து நற்றொண்டாய்   கல்விகற்க   இயலா   ஏழை நலிந்தோர்க்குக்   கற்கபணம்   அள்ளித்   தந்தும் உற்றநோயைத்   தீர்க்கதொகை   அள்ளித்   தந்தும் உயர்வான  தொண்டுதனை   நாளும்   செய்து மற்றபல   சங்கங்கள்   போல   வன்றி மனிதநேயச்   சங்கமிந்த   பேனா   சங்கம் ! காழ்ப்பில்லா   நட்பிந்த   பேனா  நட்பு கருணையுள்ள  நட்பிந்த

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.27. ஒழுக்க முடைமை

Image
அகரமுதல 153, புரட்டாசி 0 9 , 2047 / செப். 25 , 2016 வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம்  – 1.27. ஒழுக்க முடைமை இலக்குவனார் திருவள்ளுவன்      25 செப்தம்பர் 2016       கருத்திற்காக.. (வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.26.தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 27. ஒழுக்க முடைமை ஒழுக்க மென்ப துயர்ந்தோர் நடையே. ஒழுக்கம் என்பது உயர்ந்த மனிதர்களின் குணநலன் ஆகும். அருளறி வமைந்தவை யாள்பவ ருயர்ந்தோர். அன்பும் அறிவும் அமைந்து அவற்றைச் செயலிலும் காட்டுபவர்கள் உயர்ந்த மனிதர்கள் ஆவர். அவர்நடை பெரியோர்க் கடங்கி யொழுகல். பெரியவர்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பது அவர்களது நல்லியல்பு ஆகும். இருக்கை யெழுத லெதிர்பின் செல்லல். பெரியவர்களைக் கண்டதும் இருக்கை விட்டெழுதலும் அவர்கள்பின் சென்று வழியனுப்புதலும் நல்லொழுக்கம் ஆகும். நினைவுஞ் சொல்லும் வினையுமொன் றாக்கல். அவர்களது எண்ணம், சொல், செயல் இம்மூன்றும் ஒன்றாக விளங்கும். மறநெறி விலக்கி யறநெறி செல்லல். அவர்கள் தீயொழுக்கத்தை விலக்கி நல்லொழுக்கத்தைக் கடைபிடிப்பார்கள். தானுற வேண்டுவ வேனோர்க் களித்தல்.