Skip to main content

பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 21-25 : தி.வே.விசயலட்சுமி

தலைப்பு-பொய்தீர்ஒழுக்கம்-தி.வே.விசயலட்சுமி ; thalaippu_neritrhandhaay_vahzi_thi.ve.visayalatchumi

பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 21-25


  1. நல்லோர் நவிலும் நலம் பயக்கும் இன்குறளைக்
கல்லார் அடையார் களிப்பு.

  1. அன்பும் அறிவும் ஆக்கமும் ஊக்கமும்
பண்பும் குறளால் பெறு.

23.  வள்ளுவனார் வாய்ச்சொல் வகையுறக் கற்பவர்.
உள்ளுவர் நல்வினை ஓர்ந்து.

24. இன்பக் கடல்காண்பர் என்றும் குறள் கற்பவர்.
துன்பம்  தவிர்த்துவாழ் வார்.

25. வையத்து வாழ்வாங்கு  வாழ்ந்திடக் கற்றிடுவோம்
தெய்வத் திருக்குறளைத் தேர்ந்து.
தி.வே.விசயலட்சுமி : thi.ve.visayalatchumi
தி.வே.விசயலட்சுமி  
பேசி – 98415 93517

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue