Posts

Showing posts from June, 2017

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 6/8 – கருமலைத்தமிழாழன்

Image
அகரமுதல 192, ஆனி 11 , 2048 / சூன் 25 , 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      25 சூன் 2017       கருத்திற்காக.. (பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 5/8 – தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 6/8 கொல்லையிலே   பூத்துளது    என்ற  போதும் கொஞ்சுமெழில்    நறுமணத்தை   அறிவ   தற்கே முல்லைக்கும்   விளம்பரங்கள்   செய்யும்   காலம் முத்தமிழில்    உள்ளதென   நமக்கு   நாமே சொல்லுவதால்   யாறறிந்தார்   உலக   மெல்லாம் சொல்லுகின்ற   வகையினுக்கே   வழியென்   செய்தோம் வெல்லுகின்ற   இலக்கியத்துக்   கருத்தை   யெல்லாம் வெளிச்சத்தில்   கடைவிரித்தே   கூவ  வேண்டும் ! கணியனவன்   யாதும்ஊர்   என்று   ரைத்த கருத்தின்று   கணினிவழி   வந்த  திங்கே தனித்தீவாய்    வாழ்ந்துவந்த   மக்க   ளெல்லாம் தமராக   இணைகின்றார்   இணையத்   தாலே இனிநம்மின்   வீட்டிற்குள்   இருந்த  வாறே இத்தரையின்   நிகழ்ச்சிகளைப்   பார்ப்ப  தோடு தனித்தனியாய்    தம்மொழியில்   பேசு  தற்கும் தகவல்கள்   பெறுதற்கும்   வாய்ப்பைப்   பெற்றோம் ! ( தொடரும்) பாவலர் கருமலைத்தமிழாழன்

தமிழர் என்பதாலே இந்தச் சோதனை! – சந்திரசேகரன் சுப்பிரமணியம்

Image
அகரமுதல 192, ஆனி 11 , 2048 / சூன் 25 , 2017   இலக்குவனார் திருவள்ளுவன்      25 சூன் 2017       கருத்திற்காக.. தமிழர் என்பதாலே இந்தச் சோதனை! யாதுமாகி நின்றே நம்தமிழை எங்கு நிறையச் செய்வோம் சூது அலட்சிமாய், இந்து அரசு செய்யும் சூழ்ச்சி அன்றோ? மோதும் பகைமை எல்லாம் நாம் தமிழர் என்பதால் அன்றோ ? நீதி நேர்மை எல்லாம் இந்தியர் கீதை ஏட்டில் மட்டும்தானே !! இந்தி புகுத்தி விட்டார் – இவர் சூதுநிறை மதஆட்சியாலே ; மந்திகள் ஆடவிட்டார் அவரை மந்திரி என்ற பெயராலே குந்தி மைந்தர் என்பார்; இவர் கோசலை குமரென்பார் ; விந்தியமலைக்கீழேஇருக்கு நமை வேற்றுகிரக மக்களென்பார் ; இராம பூமியென்பார்- நம்மை இராவணக் கூட்டமென்பார் பிராமண வகுப்பினரை உயர் இருக்கையில் அமர்த்திவிட்டுப் போனபிறவி முன்னோர்செய்த புண்ணியமென நம்பவைத்து இன்னும் நம்இல்ல நிகழ்வுகளில் நாம்இழிகுலம் எனவே வருவார் தில்லியில் உழவர்காணமாட்டார் தனிவானூர்தி உலகு காணுவார் கொல்லையில் அசிங்கப் பட்டினி ஆயிரமிருக்க அடையாளமில்லா ஏழை நாடுகளுக்கு அள்ளித்தரும் வள்ளலென யாரப்பன் காசதோ ? எம்முழவர் ஆடையில்லாமல் ஓட

வேண்டல் ஒருநாள் கூடிவரும்! – கெருசோம் செல்லையா

Image
அகரமுதல 192, ஆனி 11 , 2048 / சூன் 25 , 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      25 சூன் 2017       கருத்திற்காக.. வேண்டல் ஒருநாள் கூடிவரும் ! நீண்ட நாளின் விண்ணப்பம், நிறைவேறாது இருந்தாலும், ஆண்டவரின் நன்மக்கள், அண்டிக் கொள்வது அறமாகும். வேண்டல் ஒருநாள் கூடிவரும்; விரும்பும் நன்மை தேடிவரும். தோண்டத் தோண்ட அருளூற்று, தூயோர் வாழ்வில் உறவாகும்! – கெருசோம் செல்லையா