Posts

Showing posts from June, 2019

தந்தை பெரியார் சிந்தனைகள் 5 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         29 சூன் 2019         கருத்திற்காக.. ( தந்தை   பெரியார்   சிந்தனைகள்  4  இன்   தொடர்ச்சி) (இ)  தடத்தநிலையில்   சிவற்றைக்   காட்டுதல்  பொருத்தமாகும். சொரூப நிலையில் பதி ‘ பரசிவம் ‘  என நிற்குங்கால் அதன்  சக்தி  ‘ பராசக்தி ‘  என வழங்கப்பெறும். அஃது உயிர்களின் அறிவை நோக்கி நிற்கும் அறிவு வடிவமானது. அந்த அறிவே சக்தியின் சொரூபம். பாரதியாரின் சக்தி வழிபாடெல்லாம் இந்தச் சக்தியை நோக்கியேயாகும் என்று கருதுவதில் தவறில்லை. மேலும், சித்தத்தி லேநின்று சேர்வ துணரும்  ⁠சிவசக்தி தன்புகழ் செப்பு கின்றோம்;  இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும்  ⁠எமக்குத் தெரிந்திடல் வேண்டுமென்றே . 1 என்ற தாழிசையிலும் இந்த நிலையினைக் காணலாம். பதி உலகத்தை நோக்குங்கால் மேற்குறிப்பிட்ட பராசக்தியின் ஒரு சிறு கூறு உலகத்தைத் தொழிபட முற்படும். அதனை ‘ ஆதி   சக்தி ‘  என வழங்குவர்  2   இது, சிவம் தோன்றாது உலகமே தோன்றுமாறு பிறப்பு இறப்புகளில் செலுத்தி நிற்றலால் ‘ திரோதான   சக்தி ‘ (திரோதானம்-மறைப்பது) என்ற திருப்பெயரையும் பெறுகின்றனது. இந்தச் சக்தியையே பாரதியார், பரிதி யென்ன

எங்கு மறைந்தீர்? ஏன் பிரிந்தீர்? – மறைமலை இலக்குவனார்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         12 சூன் 2019         கருத்திற்காக.. எங்கு மறைந்தீர்? ஏன் பிரிந்தீர்? பைந்தமிழின் பலதுறையும் ஆய்ந்தறிந்த அறிஞரே! கண்ணீரைப் பெருக்கிக் கலங்கிக் கரைந்து சிந்தை எல்லாம் நைந்திடவே எம்மைநீர் பிரிந்ததுவும்  முறையா? சொல்லாண்டு பொருளாண்டு எழிலார்ந்த காப்பியத்தின் சுவையாண்டு  திறனாய்ந்து நூல்பலவும் தந்தீரே! பல்லாண்டு பல்லாண்டு பாடவொரு வழியின்றி நில்லாமை நெறியெமக்குச் சொல்லாமல் சொன்னீரே! நவையெதுவும் இரா மோகன் புகழ்கொண்ட பேராசான்   முகம்கண்டு மகிழ்ந்திடவே வழியினிமேல் இல்லையா? கூற்றுவன் தொல்லையா? நவையற்ற நறுந்தமிழால் நலம்விளைக்கப் பல்காலும் திறனாய்வுத் துறைமேவித் தரமான நூலியற்றி அறிவார்ந்த பொருள்பலவும் செறிவாகப் புலப்படுத்தும் அரியகலை கற்றவர்யார்? முறையான புலமையால் தெரியாத பொருள்யாவும் விரிவாக உரைப்பவர்யார்? அன்பான உரையாடல் அகங்கனிந்த நட்பாடல் பண்பார்ந்த உறவாடல் பரிவுமிகு கண்ணோட்டம் அத்தனையுமே தம்சொத்தெனவே கொண்டிங்கேஅனைவரையும் பித்தாக்கி ஈர்ப்பவர்யார்? பகையறியாப் பாங்கி

தந்தை பெரியார் சிந்தனைகள்- 4. முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

Image
அகரமுதல  திருவள்ளுவன்         10 சூன் 2019         கருத்திற்காக.. ( தந்தை   பெரியார்   சிந்தனைகள்  3  இன்   தொடர்ச்சி) தந்தை   பெரியார்   சிந்தனைகள் – 4 கடவுள்  –  பொது ஒவ்வொரு சமயமும் கடவுளைப் பற்றிக் கருதுகின்றது. எல்லாச் சமயங்களும் உருவழிப்பாட்டைச் சார்ந்தவையாயினும் இதில் சைவமும் வைணவமும் தனித்தன்மை வாய்ந்தவை. (1)  சைவம் :  சைவம் சிவபெருமானையும் சிவக்குமாரர்களையும் கடவுளர்களாகக் கொண்டது. இந்திரியங்களின் துணைக் கொண்டு அறியப்பெறுவது உலகம். இவ்வுலகை உள்ளபடி காண்பவன் கடவுளையே காண்கின்றான். கடவுள் எத்தகையவர் என்று இயம்புவதன் மூலம் இவ்வுலக நடைமுறையே விளக்கப் பெறுகின்றது. குடும்பிகளுள் சிவபெருமான் ஒரு சிறந்த குடும்பி. உலகெலாம் அவர் குடும்பம். அது தன் முறை பிறழாது நடைபெறுகின்றது. அதன் முறை பிறழாத நடப்பே அவரது ஆட்சி. சிதறடையும் உலகம் அவர் ஆட்சிக்குட்பட்டு ஒன்று சேர்ந்துள்ளது. முரண்பாடுகளெல்லாம் அவரது ஆணையால் ஒழுங்குபாடு பெறுகின்றன. அவரது குடும்பத்தை ஓர் எல்லையில் அடக்கி வைத்துப் பார்த்தால் இவ்வுண்மைகள் விளங்கும். இங்கு நாம் அனைத்தையும் உருவகங்களாகக் காண்கின்றோம்.