Posts

Showing posts with the label லமையார்: அன்றும் இன்றும்

௬. புலமையார்: அன்றும் இன்றும் – திருத்துறைக்கிழார்

Image
  இலக்குவனார் திருவள்ளுவன்         29 August 2025         No Comment ( ரு. பெரியார் கூற்றும் தமிழர் நிலையும் – திருத்துறைக்கிழார் – தொடர்ச் சி) திருத்துறைக்கிழார்   கட்டுரைகள் புலவர்   வி . பொ . பழனிவேலனார் ஆ.தமிழர் ௬. புலமையார்: அன்றும் இன்றும் ‘புலம்’ என்றால், ‘அறிவு’  எனப்பொருள். அது பல்துறை அறிவையும் குறிக்கும். ஆனால் ஈண்டு யாம் எடுத்துக் கொண்டது தமிழ்ப் புலமை பற்றியதேயாம். பண்டு தமிழ்ப் புலமை தமிழறிவைப் பெருக்கிக் கொள்வதற்கென்றே பெறப்பட்டது. பிறமொழிக் கலப்பே தமிழில் உண்டாகாத காலம் அது. தமிழ்ப் புலமையாளரும் அன்று மிகக் குறைவு. இன்று போல் அச்சிட்ட நூல்கள் அன்று இல்லை. எழுத்தாணியால் ஓலையில் எழுதப்பட்ட சுவடிகளே இருந்தன. ஓர் ஊரில் படித்தவர் ஒருவர் அல்லது இருவர் இருப்பர், அவரிடம்தாம் தமிழ்ச்சுவடிகள் சில இருக்கும். பல ஊர்களுக்கு ஒரு தமிழ்ப் புலமையர் இருப்பர். அன்று –  படித்தல், எழுதுதல், கணிதம் ஆகிய மூன்றும் தமிழில்தான் இருந்தன. வேற்றுமொழி கலவாத இருந்தமிழே பெருவழக்காய் இருந்தது.  கரும்பு இருக்குமிடம...