Posts

Showing posts from September, 2014

செஞ்சீனா சென்றுவந்தேன் 14 –பொறி.க.அருணபாரதி

Image
செஞ்சீனா சென்றுவந்தேன் 14 –பொறி.க.அருணபாரதி இலக்குவனார் திருவள்ளுவன்      28 செப்தம்பர் 2014       கருத்திற்காக..          (புரட்டாசி 5, 2045 / 21 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி) 14. போக்குவரத்துத் தீரச்யெல்கள்   சீன வாடகைஊர்திகளைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். நம்முடைய ஊரில் உள்ள அழைப்பூர்தி(கால் டாக்சி)களைப் போலவே அவை இயங்குகின்றன. எனினும், நடுவழியில் பலரையும் ஏற்றிச் சென்று இறக்குகின்றனர். சீன அரசு, மிதிவண்டிப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், முதன்மைச் சாலைகளில் மிதிவண்டிகளை நிறுத்தி வைத்திருக்கிறது. அதனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள், அதற்குப் பதிவு செய்ய வேண்டும். பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவ்வாறு பதிவு செய்து மிதிவண்டிகளில் செல்கின்றனர்.   புவிவெப்பமயமாகிக் கொண்டுள்ள இக்காலகட்டத்தில், பொதுப் போக்குவரத்தை ஊக்குவித்து வளர்க்க வேண்டியது ஒவ்வோர் அரசின் கடமை. ஆனால், மகிழுந்துகள், இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்து விற்கும் பெரும் பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இது எரிச்சலூட்டக்கூடிய நடவடிக்கை அல்லவா?

செஞ்சீனா சென்றுவந்தேன் 13 –பொறி.க.அருணபாரதி

Image
செஞ்சீனா சென்றுவந்தேன் 13 –பொறி.க.அருணபாரதி இலக்குவனார் திருவள்ளுவன்      21 செப்தம்பர் 2014       கருத்திற்காக.. (ஆவணி 22, 2045 / செப்.07, 2014 இதழின் தொடர்ச்சி) 13. சியான் நகரத்துச் சுடுமண் வீரர்கள்  சியான் நகரின் முதன்மைக் கடைகளிலும், உணவகங்களிலும் வாயிலில் ஒரு சுடுமண்படிம(terracotta or Terra-cotta) வீரர் நிற்பதை நாம் இன்றைக்கும் காண முடியும். சியான் நகருக்குப் பெருமை சேர்க்கும் ஓர் இன்றியமையாத இடம் சுடுமண்படிம வீரர்கள் அமைந்துள்ள பகுதிதான். ஐ.நா.வின் கல்விஅறிவியல்-பண்பாட்டு(UNESCO) அமைப்பு, இவ்விடத்தை 8ஆம் உலக விந்தை என அறிவித்துள்ளது என்பதால், உலகெங்கிலுமிருந்து பார்வையாளர்கள் அங்கு வருகிறார்கள். அப்படி என்ன விந்தைம் இங்கு இருக்கிறதென்று கேட்கிறீர்களா?   சற்றொப்ப 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கி.மு. 209-210 காலக்கட்டத்தில், சியான் நகரம் சீனாவின் பண்டையத் தலைநகரமாக விளங்கிக் கொண்டிருந்த போது, குவின் சி ஃகுவாங்கு(Qin Shi Huang) என்னும் பேரரசன், தான் இறந்தவுடன் தனது உடலுடன், தன்னுடைய படையினரின் உருவம் கொண்ட வீரர்களின் சிலைகளும் புதைக்கப்பட வேண்டுமென விரு

மறச்செயல்களிலும் அற நெறி பேணிய முன்னோர்! – சொ.வினைதீர்த்தான்

Image
மறச்செயல்களிலும் அற நெறி பேணிய முன்னோர்! – சொ.வினைதீர்த்தான் இலக்குவனார் திருவள்ளுவன்      21 செப்தம்பர் 2014       கருத்திற்காக..   ஒரு பதிவுக்காகப் பெரியபுராணத்தில் கண்ணப்ப நாயனார் சரித்திரத்திலுள்ள பாடல்களைப் படித்தேன். கீழ் வரும் பாடல் கவர்ந்தது; நம் முன்னோர் அறம் வியக்கவைத்தது.   திண்ணன் என்று பெயரிடப்பட்ட வேடனாகிய கண்ணப்பர் தக்க பருவம் வந்ததும் வேடர்களுடன் முதல்முதலாக வேட்டைக்குச் செல்கிறார். மிருகங்களை வேட்டையாடுகிறார்கள். கொடிய மிருகங்களை எதிராக ஓடிச் சென்று எதிர்த்துக் கொலைசெய்கின்ற வேடர்கள் (கொடியனவெதிர் முடிகியுறு கொலைபுரி சிலை மறவோர்) வேட்டை நெறி முறைகளைக் கடைப்பிடிதனராம். 1.உடுக்கை போன்ற கால்களையும் மடிந்த மெல்லிய காதுகளையும் உடைய யானைக் கன்றுகள் மேல் வேட்டையைத் தொடர மாட்டார்களாம். 2.ஓசைபட ஓடிக் குதிதோடும் சிறு விலங்குக் குட்டிகளைக் கொல்லமாட்டார்களாம். 3.கருவுற்றதால் வயிறு பெருத்து ஓடமுடியாமல் தள்ளாடிவரும் பெண் விலங்குகளுக்குத் துன்பம் செய்யமாட்டார்களாம். துடியடியன மடிசெவியன துறுகயமுனி தொடரார்; வெடிபடவிரி சிறுகுருளைகண் மிசைபடுகொலை