Posts

Showing posts from August, 2019

நாலடி இன்பம்- 1 வானவில் அறிவியல்!, -இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         31 ஆகத்து 2019         கருத்திற்காக.. நாலடி   இன்பம் – 1  வானவில்   அறிவியல் ! சங்கஇலக்கிய நூல்களிலும் அதற்குப் பிற்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு எனப் பெறும் நீதி நூல்களிலும் நூலாசிரியர்களால்  கடவுள் வாழ்த்து  பாடப் பெறவில்லை. அவற்றுக்குப் பின்னர்த் தோன்றிய புலவர்கள்தாம் கடவுள்வாழ்த்துப் பாடல்களைப் பாடிச் சேர்த்துள்ளனர். ‘அபியுத்தர்’ அல்லது பதுமனார்  இக்கடவுள் வாழ்த்துச் செய்யுளை இயற்றிச் சேர்த்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. வான்  இடு  வில்லின்  வரவு  அறியா  வாய்மையால், கால்  நிலம்  தோயாக்  கடவுளை  யாம்  நிலம் சென்னி  உற  வணங்கிச்  சேர்தும்- ‘ எம்உள்ளத்து முன்னியவை  முடிக!’  என்று. பொருள்:  வான்முகிலால் தோன்றும் வானவில்லின் தோற்றம், மறைவு குறித்து நம்மால் தெளிவாகத் தெரிந்துகொள்ள இயலவில்லை. எனவே, திருவடிகள் நிலத்தில் பதியாத கோலம் கொண்ட கடவுளை யாம் தரையில் தலைமுடிபடியும் வகையில் தொழுது உள்ளத்தில் எண்ணியவற்றை நிறைவேற்றுமாறு வேண்டுவோம். சொல் விளக்கம்:  வான்=வான் முகிலில்; இடு=இடப்பட்ட; வில்லின்= வானவில்லினது; வரவு=தே

நாலடியார் காட்டும் நல்வழித் தொடர்! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         29 ஆகத்து 2019         கருத்திற்காக.. நாலடியார் காட்டும் நல்வழித் தொடர்! – முன்னுரை ‘நாலு பேர் நாலு விதமாகப் பேசுவான் அதுதான் வாழ்க்கை’ என்று எல்லாரும் ஒரே மாதிரியாகத்தான் பேசுகிறார்கள். தமிழர்களின் வாழ்வில் நான்கு என்பதற்கு அப்படிப்பட்ட முதன்மையாக இடம் உண்டு. வாழ்க்கையை நகர்த்தும்போதும் நான்கு பேர் உதவி தேவை. வாழ்வை முடித்த பின்னும் நான்கு பேர் உதவி தேவை. வாழ்வை நகர்த்த உதவும் நான்காய், நமக்கு வாய்த்திருக்கிறது நாலடியார். சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நான்கு அடி வெண்பாக்களால் ஆன 400 பாடல்களின் தொகுப்பு நாலடியார் எனப் பெறுகிறது. நாலடி நானூறு எனவும் அழைக்கப்பெறும். ‘ வேளாண் வேதம் ’ என்றும் குறிப்பிடுவர். “ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”, “சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது”, “பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்” என்று கூறப்படுவனவற்றால் திருக்குறளுக்கு இணையாக மதித்துப் போற்றப்படும் நூல் நாலடியார் என அறியலாம். நாலடியார்ப் படிகள் சிலவற்றில் “வளம் கெழு திருவொடு வையகம் முழுவதும்” எனத் தொடங்கும் தனிப்

வாழ்க்கை வாழ்வதற்கே! – ஃபாத்திமா அமீது

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         14 ஆகத்து 2019         கருத்திற்காக.. வாழ்க்கை வாழ்வதற்கே! துளைக்கப் பட்டோமென்று துவளவில்லை மூங்கில்கள்! மாலையில் வீழ்வோமென்று மலராமல் இல்லைமலர்கள்! வீழ்ந்து விட்டோமென்று விருட்சம் ஆகாமலில்லை விதைகள்! சிதைக்கப் பட்டோமென்று சிலைகள் ஆகாமலில்லை பாறைகள்! சேகரிக்கும்தேன் தனக்கில்லையானாலும் சேர்க்காமல் இருப்பதில்லை தேனீக்கள்! விளைந்ததும் வெட்டப்படுவோம் என்றாலும் விளையாமல் இருப்பதில்லை பயிர்கள்! தோல்விகள், சோதனைகள், ஏமாற்றங்கள், தடங்கல்கள், எதுவாகிலும் தன்னம்பிக்கை கொள்! மாற்றம்வரும்  மகிழ்ச்சி தரும்,  வழிகள்பல திறக்கும், வாழ்வோம் சிறப்போடு, வாழ்க்கை வாழ்வதற்கே! காரைக்குடி ஃபாத்திமா அமீது  சார்சா.  த ரவு:   முதுவை   இதாயத்து