Posts

Showing posts from May, 2016

க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 4/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை

Image
அகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன்      29 மே 2016       கருத்திற்காக.. (க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 3/5 தொடர்ச்சி)     தனித்தமிழைப் பேணச்சொல்லும் அண்ணலின் அறிவுரைக்கு ஈனர்கள் எதிருரை பகர்கின்றார்கள். தனித்தமிழ் நமக்குத் தேவையில்லை, அதனால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்ற தங்களது மறுப்பை முரட்டுத்தனமாக எடுத்துவைக்கின்றார்கள். சீற்றத்தில் கொந்தளிக்கின்றார் அண்ணல். அவரின் சொற்கள் ஒவ்வொன்றும் எறியப்பட்ட ஈட்டிகளாகப் பாய்கின்றன. நெஞ்சம் திறக்கின்றது. சொற்களின் வன்மையைப் பாருங்கள்:         எண்ணங்கள் ஏதுமின்றி எதிர்ப்புக் கொள்கை            ஏந்திமட்டும் முருட்டாகப் பேசி விட்டாய்.        கண்மூடித் தனமாகச் சொல்லி விட்டால்            கால்முளைத்து நடந்திடுமா உன்றன் ஆற்றல். ——-   ——–   ———-   ——–   —— உருட்டான கட்டைகளும் , உடல்த டித்த  உருவாளும் கருத்துக்கு வலிமை ஆமோ ? திருட்டையே தொழிலாகக் கொண்டோர் நீங்கள்.  தெருச்சுற்றி ஏமாற்றிப் பிழைப்போர் நீங்கள். குருட்டான மயக்கத்தில் உடலை நம்பிக்  கு

கேட்டல் முறை – பவணந்தி முனிவர்

Image
அகரமுதல 135, வைகாசி 0 9, 2047 மே 22 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன்      22 மே 2016       கருத்திற்காக.. கேட்டல் முறை ஒருமுறை கேட்போன் இருகால் கேட்பின் பெருக நூலில் பிழைபாடு இலனே முக்கால் கேட்பின் முறையறிந்து உரைக்கும். ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும் கால்கூறு அல்லது பற்றலன் ஆகும். அவ் வினையாளரொடு பயில்வகை ஒரு கால் செவ்விதின் உரைப்ப அவ்இரு காலும் மை அறு புலமை மாண்பு உடைத்தது ஆகும். பவணந்தி முனிவர் : நன்னூல்   பாடங்கேட்பவன் ஒரு முறையுடன் நில்லாது இரண்டாம் முறையும் கேட்டானாயின்,  மிகுதியும் பிழையின்றிக் கற்றவனாவான். மூன்றாம் முறையும் கேட்டனாயின், ஆசிரியர் கற்பித்ததை உணர்ந்து பிறர்க்குச் சொல்லும்திறன்பெற்றவனாவான்.  ஆசிரியர் கற்பித்தவற்றை நிறைய கற்றாலும், அப்புலமைத்திறத்தில் கால்பங்கிற்குமேல் மிகுதியாகக் கற்றவனாகான். கற்கும் தொழிலாளரோடு பழகுவதன் மூலம்காற்பகுதியும் பிறருக்கு விரித்து உரைப்பதன்மூலம் அரைப்பகுதியுமாகக் குற்றமற்ற புலமை  நிரம்பும் சிறப்பாகும்.

பாடம் சொல்லும் முறை – நன்னூல்

Image
அகரமுதல 135, வைகாசி 0 9, 2047 மே 22 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன்      22 மே 2016       கருத்திற்காக.. பாடம் சொல்லும் முறை ஈதல் இயல்பே இயம்பும் காலை காலமும் இடமும் வாலிதின் நோக்கி சிறந்துழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளங் கொளக் கோட்டமில் மனத்தில் நூல் கொடுத்தல் என்ப நன்னூல்  பாடம் சொல்லும்பொழுது உரிய காலத்தையும் உரிய இடத்தையும் தூயதாகத் தெரிவுசெய்து சிறந்த இடத்திலமர்க; தான் வழிபடும் கடவுளை வணங்கிப், பாடம் சொல்ல வேண்டிய பொருளை உள்ளத்தில் இருத்துக; விரைந்து சொல்லாமலும் சினந்து சொல்லாமலும் விருப்பமுடன் முகமலர்ச்சியாகக் கேட்கப்படுபவன் அறிவின் திறம் அறிந்து அவன் மனம் ஏற்றுக்கொள்ளும் வகையில் மாறுபாடு இல்லாத மனத்துடன் நூலறிவை வழங்குக.