Posts

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 92 : வஞ்சியின் வஞ்சினம்

Image
ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         23 April 2025         அ கரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 91 : பருவம் பாழ்படுவதா? -தொடர்ச்சி) பூங்கொடி 19.  கோமகன்   மீண்டும்   தோன்றிய   காதை வஞ்சியின் வஞ்சினம்           பிணைவிழி மாதின் பெறலரும் இளமை அணையிலாப் புனலென ஆகிட ஒவ்வேன்; இவள்நலம் விழையும் இளவல் கோமகன்        தவள மாளிகை சார்ந்தவற் கொண்டு 95           குறளகம் நீக்கிக் கொணர்வேன் அவளை; பெருமகன் தன்பால் பேதையைப் படுத்தல் அறமெனக் கொண்டேன், அதுமுடித் தமைவேன்; படுத்தே னாயின் பாழுயிர்ச் சுமையை            விடுத்தே அமைவேன் வெற்றுரை அன்’றெனத்         100 —————————————————————           திறம்பினள் – மாறினள், உண – உண்ண, பிணை – பெண்மான், தவளம் –...

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 25 : புலவர் கா.கோவிந்தன்: காத்தியாயனரும் பதஞ்சலியும்

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         18 April 2025         அ கரமுதல (ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 24 : புலவர் கா.கோவிந்தன்: சீனா வுடன் கொண்டிருந்த வாணிகம் – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு    8. வடக்கும் தெற்கும் கி.மு. 500 முதல் கி.மு.1 வரை காத்தியாயனரும் பதஞ்சலியும் பாணினியின் “அட்டாத்தியாயீ’ குறையுடையது எனக் கண்டு,  பாணினியின் விதிமுறைகளுக்குத் துணையாக வாத்திகம் அஃதாவது உரைவிளக்கம் எழுதிய காத்தியாயனர்,  பாணினிக்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பெரும்பாலும் கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தார். தமிழ்ப்பேரகராதி துணை ஆசிரியர் திருவாளர்.  பி.எசு. சுப்பிரமணிய சாத்திரியார்  அவர்கள் தந்த ஒரு குறிப்பின்படி  காத்தியாயனார், ஒரு தென்னிந்தியர்  ஆவர். அக்குறிப்பு பின்வருமாறு. ‘பாணினி அவர்களின் அட்டாத்தியாயின் வார்த்திக ஆசிரியரான வரருசி காத்தியாயனரின் இயற்பெயர்), ஒரு தென்னாட்டவர் என்ற உண்மை, தென்னாட்டவர், வியாகரண பாசுயகாரர் ஆகி...

௩. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்? – புலவர் வி.பொ.பழனிவேலனார்

Image
ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         17 April 2025         அ கரமதல (உ. உயர்தனிச் செம்மொழி : வி.பொ.பழனிவேலனார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ் ௩. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்? முன்னுரை உலக மொழிகளுள் முதன்மையானதும், பண்பட்டதும் தமிழ்மொழி ஒன்றே . எழுத்துகள் செப்பமாயமைந்தது; மென்மை, வன்மை, இடைமை ஒலிகளையுடைய எளிய இனிய மொழி; ஒரு சொற்கு ஒரு பலுக்கல் உடையது; ஒரு சொல்லில் உள்ள எல்லா எழுத்துகளும், ஒலிக்கும் இயல்புடையது. எழுத்து மாற்றம் வீரமாமுனிவரால் செய்யப் பெற்றபின், பெரியார் வழி பற்றி, தற்போது தமிழக அரசு ஓரளவு எழுத்துச் சீர்திருத்தம் செய்துளது. இதற்குமேல் எழுத்துச் சீர்திருத்தம் தேவையில்லை என்றாலும் தற்காலத் தேவை கருதி நிலையான சீர்திருத்தம் வேண்டற்பாலதே. பிறர் கருத்து எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பலரும் பலவகையான திருத்தங்களைத் தந்தம் மனத்தில் தோன்றியவாறு தெரிவித்துள்ளனர். அவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து இனி என்றுமே மாற்றம் வேண்டாத வகையில் செய்யப்பெறல் இன்றியமையாததாகும். ஏனெனில், அடிக்கடி...

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 91 : பருவம் பாழ்படுவதா?

Image
ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         16 April 2025         அ கரமுதல (கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 90 : 19. கோமகன் மீண்டும் தோ ன்றிய காதை-தாெடர்ச்சி) பூங்கொடி 19.  கோமகன்   மீண்டும்   தோன்றிய   காதை பருவம் பாழ்படுவதா?           சிறியவள் இல்லறச் செந்நெறிப் படாஅது                  பருவமும் உருவமும் பாழ்படப் புறநெறி 55           கருதின ளாகிக் கழிவது முறையோ? தேடருங் குறிஞ்சித் தேனினைப் பாழ்செயும் மூடரும் உளரோ? முக்கனி யாகிய தேமாங் கனியும், தீஞ்சுவைப் பலவும்,              கொழுங்குலை வாழைச் செழுங்கனி யதுவும் 60           அழுங்கல் எய்திட விழுந்து புழுதியில் நைந்து சிதைவதில் நன்மையும் உளதோ? ஐந்து பொறியிவள் அடக்கவும் வல்லளோ?...

உ.வே.சா.வின் என் சரித்திரம் : 126 : அத்தியாயம்-86 : விடுமுறை நிகழ்ச்சிகள்

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         14 April 2025         அ கரமுதல (உ.வே.சா.வின் என் சரித்திரம்  125 : அத்தியாயம்-85 : கோபால ராவின் கருணை-தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-86 விடுமுறை நிகழ்ச்சிகள் திருவாவடுதுறையில் நான் இருந்த காலங்களில் அருகிலுள்ள ஊர்களில் இருந்த செல்வர்கள் வீட்டுக் கலியாணங்களுக்கு மடத்தின் பிரதிநிதியாகச் சென்று வருவேன். கலியாண தம்பதி களுக்கு வழங்கும்படி ஆதீன கர்த்தர் ஆடை முதலியன அளிப்பார். நான் அவற்றைப் பெற்றுக் கொண்டு போய்ச் சேர்ப்பித்து விட்டு வருவேன். கல்லூரிக் கோடை விடுமுறைக் காலத்தில் திருவாவடுதுறையில் நான் தங்கியிருந்தபோது இத்தகைய சந்தர்ப்பம் ஒன்று நேர்ந்தது. அந்த வருடம் மே மாதத்தில் கும்பகோணம் கல்லூரி ஆசிரியர் சிரீ சாது சேசையருடைய மூத்த குமாரிக்குக் கலியாணம் நடைபெற்றது. அதை மிக விமரிசையாக அவர் திருப்பாதிரிப்புலியூரில் நடத்தினார். சேசையர் மிக்க செல்வாக்குடையவராதலால் நீதிபதிகள், மாவட்ட  முன்சீபுகள், தாசில்தார்கள்  முதலிய பிரபல உத்தியோகத்தர்களும், பிரபுக்களும...