Posts

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 7 : கடலாண்ட காவலர்

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         16 March 2024        அகரமுதல (இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 6 : வடதிசை வணங்கிய வீரம்-தொடர்ச்சி ) தமிழர் வீரம் 7 கடலாண்ட காவலர் சேரன் காலாட்படை தமிழ் நாட்டு மூவேந்தரும் நிலப்படையோடு கப்பற் படையும் உடையராய் இருந்தனர். சேரநாட்டை யாண்ட  செங்குட்டுவன்  கப்பற்படையின் வலிமையால் பகைவரை வென்று “கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்” 1  என்று புகழ் பெற்றான். அவன் தந்தையாகிய நெடுஞ்சேரலாதன் கலப்படையெடுத்துக் கடம்பர் என்ற கடற்பகைவரை வென்றான். கடற் கடம்பர் இப்பேரரசர் இருவரும் தமிழ் நாட்டு வாணிக வளத்தைப் பாதுகாக்கக் கருதியே கடற்போர் புரிந்தனர் என்று தோற்றுகின்றது. அவர் காலத்தில் கடல் வழியாக நிகழ்ந்த வருத்தகத்தால் சேரநாடு சாலவும் வளமுற்றிருந்தது. அந் நாட்டில் அமைந்த  முசிறி  என்னும் துறைமுகம் உலகறிந்த நகரமாய் விளங்கிற்று.  யவன நாட்டிலிருந்தும், அரேபியாவிலிருந்தும், எகிப்து நாட்டிலிருந்தும்  வருத்தகக் கப்பல்கள் வந்த வண்ணமாயிருந்தமையால், அத் துறை, “ வளங்கெழு முசிறி “ 2  யாக விளங்கிற்று. ஆயினும், கடற்கொள்ளை அங்கு அடிக்கடி நிகழ்ந்துவந்தது. மேல் கடலின் இட

வள்ளுவர் சொல்லமுதம் 11 : அ. க. நவநீத கிருட்டிணன் : அ. கொடைநலமும் படைவலமும்

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         15 March 2024        அகரமுதல ( வள்ளுவர் சொல்லமுதம் 10 : அ. க. நவநீத கிருட்டிணன் : சொல்லும் செயலும் 2- தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் அ. கொடைநலமும் படைவலமும் ஈகையும் வீரமும் தமிழரின் இணையற்ற பண்புகள்  ஆகும். பழந்தமிழ்நாட்டு மன்னர் பலரும் கொடை கலத்திலும் படை வலத்தினும் சிறந்து விளங்கினர். இவ் உண்மையைச் சங்க இலக்கியங்கள் பல பாடல்களில் இனிது விளக்கும். பண்டைப் புலவரெல்லாம் மன்னர் கொடைநலத்தையும் படை வீரத்தையுமே கொண்டாடித் தண்டமிழ்ப்பாக்கள் பாடினர். திருவள்ளுவரும் தம் நூலுள் இத்திறங்களை நயம்பட உரைக்கிறார், தமிழ்நாட்டுக் கொடையின் பெருமையைக் குறிக்கத் திருவள்ளுவர் ஈகை, ஒப்புரவறிதல், அருள் முதலாய பல அதிகாரங்களை வகுத்துள்ளார். இல்லறத்தார் இனிது போற்றவேண்டிய அறம் ஈகையே. இவ் ஈகையின் இலக்கணமாக வள்ளுவர், “வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை” என்று வரையறுத்துக் கூறினார். வறியர் அல்லாதவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்ப தெல்லாம் குறியெதிர்ப்பைக் கைம்மாறு கருதலே ஆகும். அளவு குறித்து ஒரு பொருளை மற்றவர்க்குக் கொடுத்து அவ்வளவே மீண்டும் அவர்பால் பெறுவது குறியெதிர்ப்பை ஆகும்; இங

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 40 : சொற்போர் புரிக

Image
  ஃஃஃ          இலக்குவனார் திருவள்ளுவன்         13 March 2024        அகரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 39 : சிறியர் செய்கை- தொடர்ச்சி) பூங்கொடி சொற்போர் புரிக பிழைஎனப் படுமேல் பேசுக அரங்கில் கழைஇனி தென்றேன் கசக்குமென் பீரேல் சான்றுடன் நிறுவுக, சால்பது வாகும்; 120 நான்தரு கருத்தினை மறுத்துறை நவிலுதல் அறிவோர் கொள்கை; அதனை விடுத்துச் சிறியோர் செயல்செய முனைதல் நன்றோ? திறமிலார் செயலெதும் திருந்திய கொள்கை உரமுளார் போக்கினை ஒதுக்குதல் இல்லை; 125 ஞாலத்து இயற்கை நல்லன செய்வோர்க்கு நலிவே தருதல் மல்லன்மா ஞாலத் தியற்கையே யாகும்; உலகுக் குழைக்கும் உத்தமர் தம்மைச் சிலுவையில் அறைந்தும் சிறையினில் அடைத்தும் கொலைத்தொழில் புரிந்தும் குண்டுகள் பாய்ச்சியும் 130 நஞ்சுணச் செய்தும் நலிவுகள் தந்தும் நன்றி கொன்றிடும் நல்லதோர் உயர்குணம் இன்றுநம் மிடையே இறுகப் பிணைந்தது; ஆதலின் இச்செயல் ஆற்றத் துணிந்தீர்! பூங்கொடி துணிபு சாதல் உறுதி, சதைபடு இவ்வுடல் 135 கழுகு பருந்துகட் குணவாய்க் காட்டில் அழுகிக் கிடக்கும், அத்தகு நிலையுடல் என்னின மக்கள் எறிகல் பட்டுச் செந்நீர் சிந்திச் செந்தமிழ் காக்க மாய்தல் பெறி

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 6 : வடதிசை வணங்கிய வீரம்

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         09 March 2024        அகரமுதல ( இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 5 : மான வீரம்-தொடர்ச்சி ) தமிழர் வீரம் 6 : வடதிசை வணங்கிய வீரம் புலிகேசன் வடநாட்டில் உள்ளது  வாதாபி  நகரம் 1.  அந்நகரில் நெடுங்காலம் ஆட்சி புரிந்தனர்  சளுக்கர் குல வேந்தர் . அக் குலத்திலே தோன்றினான்  புலிகேசன்  என்னும் வீரன். அவனது படைத்திறங்கண்டு நடுங்கினர் பகைவரெல்லாம். மண்ணாசை பிடித்த புலிகேசன்  கங்கரையும் கதம்பரையும் வென்றான்;  அவர் ஆண்ட நாடுகளைக் கவர்ந்தான். மாளுவநாட்டு மன்னனும் அவனடி பணிந்தான். புலிகேசன் பெற்ற வெற்றிகளால் வாதாபி நகரம் ஏற்றமும் தோற்றமும் அடைந்தது. நரசிம்மனும் புலிகேசனும் அக்காலத்தில் நரசிம்மன் என்னும் பல்லவ மன்னன்  காஞ்சி மாநகரில்  அரசு புரிந்தான். அவனையும் வெல்லக் கருதிப் படையெடுத்தான் புலிகேசன். அப்போது பல்லவன் சேனை விரைந்து எழுந்தது; சாளுக்கியப் படையை மணி  மங்கலத்திலே  தாக்கிற்று. பல்லவப் படையின் வேகத்தைக் கண்ட புலிகேசன் பின்வாங்கினான்; வாதாபியை நோக்கித் திரும்பினான். படைத்தலைவர்-பரஞ்சோதியார் மண்ணாசை பிடித்த புலிகேசனை நொறுக்கி, அவன் படைச் செருக்

வள்ளுவர் சொல்லமுதம் 10 : அ. க. நவநீத கிருட்டிணன் : சொல்லும் செயலும் 2

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         08 March 2024        அகரமுதல ( வள்ளுவர் சொல்லமுதம் 9 : அ. க. நவநீத கிருட்டிணன் : சொல்லும் செயலும்-தொடர்ச்சி ) வள்ளுவர் சொல்லமுதம் அத்தியாயம் 5. சொல்லும் செயலும் பின் பகுதி இங்ஙனம் நால்வகை வன்சொற்களைக் கடிந்து பேசிய கவிஞர்பெருமானாகிய திருவள்ளுவர், எவரிடத்தும் இன்பத்தைப் பெருக்கும் இன்சொல்லையே பேசுக என்று வேண்டுவார். அதுவே துன்பத்தை மிகுவிக்கும் வறுமையைத் தொலைப்பதாகும். இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் தருவதாகும்.  இன்சொல் கூறுவானின் பாவங்கள் குறைந்து தேயும். புண்ணியங்கள் வளர்ந்து பெருகும் . இவ்வாறு பன்னலம் விளக்கும் இன்சொல்லே தனக்கும் இன்பம் தருவதை அறிந்த ஒருவன் என்ன கருதி வன்சொல்லை வழங்குகின்றானோ ? என்று வள்ளுவர் வன்சொல் கூறுவானை நினைந்து உள்ளம் குழைகின்றார், கேட்பவர் உள்ளம் வேட்கை கொள்ளுமாறு இன்சொல் பேசுபவனே சிறந்த சொல்வல்லான் என்பது வள்ளுவர் கருத்து. சொல்லுக்கு இலக்கணம் இயம்பவந்த அப் புலவர், – ” கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்.’ என்று அறுதியிட்டு உரைத்தருளுவார். இப் பாட லுக்குப் பரிமேலழகர் காணும் பொருள் அவர்தம