Posts

Showing posts from May, 2015

என்றும் நமக்கு நன்னாளே! – இலக்குவனார் திருவள்ளுவன்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      24 May 2015       No Comment ஒவ்வொரு நாளும் பிறக்கின்றோம் எல்லா நாளும் சிறந்திடுவோம்! வாழ்க்கை என்பது வாழ்ந்திடவே வாழும் முறைப்படி வாழ்ந்திடுவோம்! வாழ்க்கை என்பது போராட்ட மானால் போரில் கலந்து வென்றிடுவோம்! வாழ்க்கை என்பது விளையாட் டெனில் ஆடி வாகை சூடிடுவோம்! வாழ்க்கை என்பது பயண மாயின் இனிதே இலக்கை அடைந்திடுவோம்! வாழ்க்கை என்பது கேளிக்கை என்றால் பார்த்து நாமே மகிழ்ந்திடுவோம்! வாழ்க்கை என்பது கணக்கு எனவே கணித்துப் பார்த்துத் தேர்ந்திடுவோம்! வாழ்க்கை என்பது வரலா றாகச் செம்மைச் செயலால் செதுக்கிடுவோம்! வாழ நாமும் பிறந்து விட்டோம் வாழ்ந்தேதான் காட்டிடுவோம்! எத்தனைத் தடைகள் வந்தாலும் அத்தனைப் படிகளாய் மாற்றிடுவோம்! மெல்ல மெல்ல நாம் உயர்ந்தே நல்ல வாழ்வை அடைந்திடுவோம்! நாம் வாழ்வோம் பிறர் வாழ நாமும் நலமாய் வாழ்ந்திடுவோம்! நாம் உயர வீடு உயரும் வீடு உயர நாடு உயரும்! நாடு உயர உலகு உயரும் உலக உயர்வில் நாம் மகிழ்வோம்! எல்லா நாளும் நம் நாளே என்றும் நமக்கு நன்னாளே! - வாழ்த்துகளுடன் இலக்குவனார் திர

போதை – மரு.பாலசுப்பிரமணியன்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      24 May 2015       No Comment பாதையிலே கால் நடந்தால் ஊர் போய்ச் சேரும் போதையிலே கால் நடந்தால் காடு போய் சேரும் பிணியாலும் நோயாலும் மாண்டவர் சில கோடி புகையாலும் மதுவாலும் மாண்டவர் பல கோடி புகழின் பாதை கோபுரத்துக்கு வழி காட்டும் மதுவின் போதை புதை குழிக்கு வழி காட்டும் போதை என்பது நமக்கு நாமே வைக்கும் கொள்ளி நெருப்பு சோம்பல் என்பது நமக்கு நாமே கட்டும் கல்லறை நெஞ்சினிலே துயரம் வந்ததென்று போதையில் மயங்காதே நெஞ்சினிலே துணிவு வந்த பின்னே பாதையில் தயங்காதே பாதையில் தள்ளாடும் படகுகள் ஒழுங்காக வீடு போய்ச் சேர்வதில்லை போதையில் தள்ளாடும் தலைகள் புகழுடன் காடு போய்ச் சேர்வதில்லை தாயார் வெறுத்திடவும் ஊரார் ஒதுக்கிடவும் வீழ்த்திடுமே கள் போதை மாதர் துரத்திடவும் மாந்தர் தூற்றிடவும் தாழ்த்திடுமே காமப் போதை கலையில்லாது கல்லும் உளியும் இருந்தால் மட்டும் சிலைவராது கவலைதீராது களியும் கள்ளும் உண்டால் மட்டும் துயர் மாறாது கள் கொண்ட போதை மயக்கத்திலே காமம் தலைக்கேறும் புகழ் கொண்ட போதை மயக்கத்திலே கருவம் தலைக்கேறும் நல்ல பழக்கங்

இறைவனை எங்கும் கண்டிலனே – கவிமணி

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      24 May 2015       No Comment தெப்பக் குளங் கண்டேன் – சுற்றித் தேரோடும் வீதி கண்டேன் எய்ப்பில் வைப்பா மவனைத் – தோழி ஏழை நான் கண்டிலனே சிற்பச் சிலைகள் கண்டேன் – நல்ல சித்திர வேலை கண்டேன் அற்புத மூர்த்தி யினைத் – தோழி அங்கெங்குங் கண்டிலனே பொன்னும் மணியுங் கண்டேன் – வாசம் பொங்கு பூ மாலை கண்டேன் என்னப்பன் எம்பி ரானைத் – தோழி இன்னும் யான் கண்டிலனே தூப மிடுதல் கண்டேன் – தீபம் சுற்றி எடுத்தல் கண்டேன் ஆபத்தில் காப்பவனைத் – தோழி அங்கே நான் கண்டிலனே தில்லைப் பதியுங் கண்டேன் – அங்கு சிற்றம்பலமுங் கண்டேன் கல்லைக் கனி செய்வோனைத் – தோழி கண்களாற் கண்டிலனே கண்ணுக் கினிய கண்டு – மனதைக் காட்டில் அலைய விட்டுப் பண்ணிடும் பூசை யாலே – தோழி பயனொன் றில்லையடி. உள்ளத்தி லுள்ளானடி – அது நீ உணர வேண்டு மடி உள்ளத்தில் காண்பாய் எனில் – கோவில் உள்ளேயும் காண்பாயடி. கோவில் முழுதுங் கண்டேன் – உயர் கோபுரமேறிக் கண்டேன் தேவாதி தேவனை யான் – தோழி - கவிமணி தேசிக விநாயகம் (பிள்ளை) - அகரமுதல 80 வைகாசி 10 2046, மே 24, 2015

சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ : ஓரங்க நாடகத்தின் பின்னுரை

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      24 May 2015       No Comment (வைகாசி 3, 2015 / மே 17, 2015 தொடர்ச்சி) பின்னுரை: பன்முகமுடைய, பல இனங்கள் கொண்ட, பல சமயங்கள் உடைய, பல மொழிகள் பேசும், பல மாநிலங்கள் ஒட்டிய பாரத நாட்டில் விடுதலைக்குப் பிறகு சமயச் சண்டைகளும், இனச் சண்டைகளும், குழுச் சண்டைகளும், கட்சிச் சண்டைகளும் பெருகிக் கட்டுப்படுத்த முடியாமல் நிலைத்துப் போவது வருந்தத்தக்க வரலாற்றுக் கற்களாகும். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியப் பிரிவினைக்குப் பிறகு சமயப்போரை மறுபடியும் தொடக்கி மும்மரமாக நடத்தி வருவது, அவதாரத் தேவனாகத் தவறாகக் கருதப்படும் இராமன் பெயரால் அயோத்தியில் கட்டப் போகும் புதுக்கோயில் என்பதை யாவரும் அறிவோம்! இராமன் பிறந்த புனித பூமியான அயோத்தியாவில் பாப்ரி மசூதி யிடிப்பும், அதே இடத்தில் ஓரடி பிசகாமல் கோயில் எடுக்கும் யுத்தமும் ஆயிர வருடப் போராக ஆகும் போக்கு தென்படுகிறது! அரசியல் மேதைகளும், ஆன்மீக ஞானிகளும், ஆட்சி வருக்கமும் இராமன் அவதார தேவன் அல்லன் என்று பலமுறைகள் பறைசாற்றி, உரையாற்றி, எழுதியும் வந்தால், இந்தத் தலைமுறையில் முடியா விட்டாலும்,

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 25 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      24 May 2015       No Comment   (வைகாசி 3, 2015 / மே 17, 2015 தொடர்ச்சி) காட்சி – 25 அங்கம்    :    ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்        :    மரக்கிளை நிலைமை    :    (காட்சியைக் கண்டு சிட்டுகளோ! நகை                     ஆட்சியைக் கண்டு வியக்கின்றது) பெண்  :    பெண்களுக்கென்ன நகையின்மேல் இத்தனை ஆசை உள்ளது சொல்? ஆண்  :    கண்ணே! பெண்ணுக்கு நகைதானே! என்ன அதில்தான் உள்ளதுவோ? பெண்  :    மேலைநாட்டுப் பெண்களுக்கு இத்தனை விருப்பம் இதில் உண்டோ? ஆண்  :    வேலை செய்யவே பொழுதில்லை! நினைக்கவும் நேரம் அங்கேது! பெண்  :    நமது நாட்டுமகளிரைத் தவறாய் எண்ணமாட்டாரோ? ஆண்  :    உமது எண்ணம் உயர்வென்று எண்ணிடும் அறிவும் இங்கில்லையே! பெண்  :    இதெல்லாம் உனக்குத் தெரிகிறதே! எவரும் இதனை உரைத்தாரா? ஆண்  :    இதென்ன? இன்னும் கேட்டுவிடு? எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்! பெண்  :    நகைகளைப் பெண்கள் விரும்புவதால் எவருக்கு என்ன பேரிழப்பு? பெண்  :    வகையாய்க் கேட்டாய்! ஓர் கேள்வி! நீயும் பேடே அதனாலே! அசடே! கொஞ்சம் கேட்டு விடு! அழகாய் உனக

சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் : காட்சி 6

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      17 May 2015       No Comment ( சித்திரை 27, 2046 / மே 10, 2015 தொடர்ச்சி) காட்சி ஆறு முடிவை நோக்கிச் சீதை இடம்: வால்மீகியின் ஆசிரமத்துக்கு அருகில் பெரிய மலைகள் சூழ்ந்துள்ள காடு. நேரம்:  மாலை வேளை பங்குகொள்வோர்: வால்மீகி, இராமன், சீதை, இலட்சுமணன், பரதன்,  சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், இலவா, குசா, துறவகச் சீடர்கள். மலை  மேட்டுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அசுவமேத யாகத்தின் வெள்ளைக் குதிரை  கட்டப்பட்டுள்ளது. (இராமன் மரத்தில் கட்டுண்ட குதிரையை அவிழ்க்கச் சென்றபோது,  இலவா, குசா இருவரும் குதித்தோடிச் சென்று மறிக்கின்றனர்) இலவா, குசா: [தரையில்  கிடந்த வில்லைக் கையில் எடுத்து] நிறுத்துங்கள் கோசல மன்னரே! முதலில் எடுங்கள்  உங்கள் வில்லை! குதிரையைக் கட்டியவர் நாங்கள்! முதலில் எங்களுடன் போரிட்டு  வென்ற பின்தான் நீங்கள் குதிரையை விடுவிக்கலாம். இராமன்: [கனிவுடன்] அருமைப்  பாலர்களே! உங்களுடன் நான் போரிடப் போவதில்லை! நீங்களும் என்னுடன் போரிடத்  தேவை யில்லை! இந்தக் குதிரை எப்படி