தமிழ்மக்கள் ஒன்றித்து நின்றால் உயர்வுண்டாம்! – கவிமணி தேசிகவிநாயகம்


kavimani_thesikavinayakam01
என்றும் தமிழ்மக்கள் யாவரும் ஒத்திணங்கி,
ஒன்றித்து நின்றால் உயர்வுண்டாம்; – அன்றெனில்,
மானம்போம், செல்வம்போம், மானிட வாழ்விற்குரிய
தானம்போம், யாவும்போம், தாழ்ந்து.
பண்டைத் தமிழர் பழம்பெருமை பாடிஇன்னும்
மண்டை யுடைத்து வருந்துவதேன்? – அண்டும்இக்
காலத்திற் கேற்றகல்வி கற்றுக் கடைப்பிடித்து
ஞாலத்தில் வாழ்ந்திடுவோம் நன்கு.
 வாணிகம் செய்வோம்; வயலிற் பயிர்செய்வோம்;
காணரிய கைத்தொழிலும் கண்டு செய்வோம் – பேணிநம்
சந்தத் தமிழ்வளர்ப்போம்; தாய்நாட்டுக்கே உழைப்போம்;
சிந்தை மகிழ்ந்து தினம்.
 தெய்வம் தொழுவோம்; திருந்தத் தமிழ்கற்போம்;
செய்வினையும் நன்றாகச் செய்திடுவோம் – ஐயமின்றி
எவ்வெவ் வறமும் இனிது வளர்த்திங்குச்
செவ்வையுற வாழ்வோம் தினம்.
-  கவிமணி தேசிகவிநாயகம் (பிள்ளை


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue