இறைவனை எங்கும் கண்டிலனே – கவிமணி

kopuram
தெப்பக் குளங் கண்டேன் – சுற்றித்
தேரோடும் வீதி கண்டேன்
எய்ப்பில் வைப்பா மவனைத் – தோழி
ஏழை நான் கண்டிலனே
சிற்பச் சிலைகள் கண்டேன் – நல்ல
சித்திர வேலை கண்டேன்
அற்புத மூர்த்தி யினைத் – தோழி
அங்கெங்குங் கண்டிலனே
பொன்னும் மணியுங் கண்டேன் – வாசம்
பொங்கு பூ மாலை கண்டேன்
என்னப்பன் எம்பி ரானைத் – தோழி
இன்னும் யான் கண்டிலனே
தூப மிடுதல் கண்டேன் – தீபம்
சுற்றி எடுத்தல் கண்டேன்
ஆபத்தில் காப்பவனைத் – தோழி
அங்கே நான் கண்டிலனே
தில்லைப் பதியுங் கண்டேன் – அங்கு
சிற்றம்பலமுங் கண்டேன்
கல்லைக் கனி செய்வோனைத் – தோழி
கண்களாற் கண்டிலனே
கண்ணுக் கினிய கண்டு – மனதைக்
காட்டில் அலைய விட்டுப்
பண்ணிடும் பூசை யாலே – தோழி
பயனொன் றில்லையடி.
உள்ளத்தி லுள்ளானடி – அது நீ
உணர வேண்டு மடி
உள்ளத்தில் காண்பாய் எனில் – கோவில்
உள்ளேயும் காண்பாயடி.
கோவில் முழுதுங் கண்டேன் – உயர்
கோபுரமேறிக் கண்டேன்
தேவாதி தேவனை யான் – தோழி
- கவிமணி தேசிக விநாயகம் (பிள்ளை)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue