Posts

Showing posts from December, 2019

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! -இலக்குவனார் திருவள்ளுவன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         30 திசம்பர் 2019         கருத்திற்காக.. ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!   திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் முப்பால் எனப்பெறும் திருக்குறளின் மூன்றாவது பால் காமத்துப்பால். காமம் என்றால் நிறைந்த அன்பு என்று பொருள். எனவே, இஃது இன்பத்துப்பால் என்றும் அழைக்கப் பெறுகிறது. திருக்குறளில் 109 ஆவது அதிகாரம் முதல் 133 ஆவது இறுதி அதிகாரம் முடிய 25 அதிகாரங்கள் – 250 பாக்கள் – இன்பத்துப்பாலில் உள்ளன. திருக்குறளை மொழிபெயர்க்க முயன்ற பொழுது  அறிஞர் போப்பு , துறவியான தாம், இன்பத்துப்பாலைப் படித்து மொழி பெயர்ப்பதா எனப் பன்முறை தயங்கினாராம். பின்னர்த் துணிந்து படிக்கத் தொடங்கிய பொழுதுதான் இப்பிரிவும் ஒப்புயர்வற்ற இலக்கியச் சுவை உடையது என்பதை உணர்ந்தாராம். அதன் பின்னரே அவர் முழுமையும் மொழிபெயர்த்தார். குறள்நெறி அறிஞர் பேராசிரியர்  சி.இலக்குவனார் , “திருக்குறள் இன்பத்துப்பால் பால்(Sex) பற்றிய நூலாயினும் ஆணும் பெண்ணும் ஒன்றாகக் கூடியுள்ள  அவையில் கூறுவதற்குக் கூசும் ஒரு சொல் கூட அதில் இடம் பெறவில்லை ” எனச் சிறப்பித்துக் கூறு

நான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         29 திசம்பர் 2019         கருத்திற்காக.. நான் என்பது  செருக்கல்ல; எனது நம்பிக்கை! வானந் தொடுந் தூரம் அது நாளும் வசமாகும், பாடல் அது போதும் உடல் யாவும் உரமேறும்; பாதம் அது நோகும் பாதை மிக நீளும், காலம் ஒரு கீற்றாய்க் காற்றில் நமைப் பேசும்; கானல் எனும் நீராய் உள் ளாசை வனப்பூறும், மூளும் நெருப் பாளும் நிலமெல்லாம் நமதாகும்; கனவே கொடை யாகும் கடுகளவும் மலை யாகும், முயன்றால் உனதாகும் உழைப்பால் அது பலவாகும்; நேசம் முதலாகும்’நொடி தேசம் உனதாகும், அன்பில் பிரிவில்லை’ உயி ரெல்லாம் அமுதூறும் வெற்றி நிலை யாகும் மனம்போல அது மாறும், கடல் மூடும் அலைபோல நினைப் பொன்றே  வரமாகும்; நானென்று கொண்டாய் இனி நாமென்று காணேன் உடல் தீதொன்று மில்லை உள் உள்ளே நான் நீயே! * வித்தியாசாக

நல்லக்கண்ணு…நல் மேய்ப்பன் நீடுவாழி! – துரைவசந்தராசன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         28 திசம்பர் 2019         கருத்திற்காக.. நல்லக்கண்ணு…நல் மேய்ப்பன் நீடுவாழி! நூல்பிடித்தாற் போல்நடத்தும் வாழ்க்கை ! நெஞ்சில் நெருப்புக்கும் சூடளிக்கும் நேர்மை !பேசும் நூல்நிலையம் !பல்கலையின் கழகம்! என்றும் நுரைத்தாலும் நிறுத்தாத உழைப்பு !அன்பால் பால்மடிபோல் கனத்திருக்கும் தாய்மை ! கேட்டுப் பாருங்கள் அவர்பெயர்தான் நல்லக்கண்ணு ! பால்மனத்தார் நேர்முகத்தார் நலமாய் நூறு பனைபூக்கும் நாள்தாண்டி வாழ வேண்டும் ! எளிமைக்கும் எளிமைதரும் வலிமை யாளர் ! எதிர்ப்பஞ்சாப் போர்வீரர் !போராட் டத்தில் துளிர்ப்பதுதான் வாழ்வென்ற கொள்கைக் குன்று ! துளியேனும் நெளியாத நெம்பு கோலர் ! வளிபரப்பை வியர்வையினால் நிரப்பி வைத்து வழிமணக்க பயிர்விளைக்கும் தோட்டக் காரர் ! நெளியாத ஒன்றாமிவர் நல்லக் கண்ணு நீர்நிலம்வான் காற்றுளவரை வாழ வேண்டும் ! விரிவானப் பரப்புதனை விஞ்சும் நெஞ்சம் ! விழுமழைக்கே தூய்மைதரும் வெள்ளைப் பேச்சு ! பெரியாரை வள்ளலாரைப் புத்தம் தம்மைப் பேசல்போல் செயலாற்றும் தலைமைத் தொண்டர் ! நரிக்காட்டில் நமைக்காக்க வந்த மேய்ப

தமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் ! – துரை வசந்தராசன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         19 திசம்பர் 2019         கருத்திற்காக.. தமிழ்வளர்ச்சி   நலம்பெறவே   முயல   வேண்டும்  ! தமிழ்வாழ்க என்றுவெறும் கூச்சல் போட்டால் தமிழ்வாழ்ந்து விடுவதில்லை !உதட்ட சைந்து அமிழ்தென்று சொல்லுவதால் மட்டும் யார்க்கும் அங்கங்கள் நிறைவதில்லை !இயங்க வேண்டும் ! தமிழில்தான் திருமணங்கள், வடவர் தம்மைத் தள்ளிவைத்தே மனைவிழாக்கள் எல்லாம் செய்து தமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் ! தமிழாக வாழ்ந்தாலே உயரம் கூடும் ! உத்திரத்தை ஒட்டடைகள் தாங்குமென்று ஒருபோதும் அறிவுள்ளோர் ஏற்ப தில்லை ! சித்திரத்து விளக்கொளிதான் பகலே என்று சிந்திக்க எவர்க்கேனும் துணிவு மில்லை ! நத்தைகள் நீர்சுமந்தே அணைநி ரப்ப நம்பிக்கை கொண்டெவரும் முயல்வ தில்லை ! முத்தமிழை வளர்க்கின்ற முயற்சி யில்நாம் மூங்கைகளாய் முடங்கிவிட்டோம் !மறுப்பும் இல்லை ! புத்தகத்தை அச்சேற்றி விற்று விட்டால் பொன்னுலகு பிறக்குமென்று கனவு கண்டோம் ! தத்துவங்கள் தினம்பேசிக் களைத்து விட்டோம் ! தமிழ்வளர்க்க இயலாமல் இளைத்து விட்டோம் ! மொத்தமாய்க் கவியரங்கம் பட்டி மன்றம் குத்தகைக்கு எடுத்துநாமும் அலசி விட்டு மத