Posts

Showing posts from November, 2023

தமிழ் வளர்த்த நகரங்கள் 17 – அ. க. நவநீத கிருட்டிணன்: தில்லையின் சிறப்பு

Image
  இலக்குவனார் திருவள்ளுவன்         01 December 2023         No Comment ( தமிழ் வளர்த்த நகரங்கள் 16 – அ. க. நவநீத கிருட்டிணன்: தமிழ் வளர்த்த நெல்லை-தொடர்ச்சி ) தில்லை மாநகரம் 11. தில்லையின் சிறப்பு தில்லைச் சிதம்பரம் சைவ சமயத்தைச் சார்ந்த மக்களுக்குச் சிறப்பு வாய்ந்த தெய்வத்தலம் தில்லையாகும். அதனால் சைவர்கள் இத் தலத்தினைக் ‘கோயில்’ என்றே குறிப்பிடுவர்.   மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புற்ற தலம் இதுவாகும்.  ஆதலின் இத் தலத்தைப் ‘ பூலோகக் கயிலாயம் ’ என்றும் போற்றுவர். ஐம்பெரும் பூதங்களின் வடிவாக இறைவன் விளங்குகிறான் என்ற உண்மையை விளக்கும் தலங்களுள் இது வான் வடிவாக விளங்கும் உண்மையை விளக்குவது. அதனாலயே இத் தலத்திற்குச் ‘சிதம்பரம்’ என்னும் பெயர் வழங்கலாயிற்று.   சிதம்பரம் என்ற சொல்லுக்கு ஞானவெளி என்பது பொருளாகும். தலத்தின் பிற பெயர்கள் இத் தலம் அமைந்துள்ள நிலப்பகுதி, ஒரு காலத்தில்   தில்லை மரங்கள் நிறைந்த பெருங்காடாக இருந்தமையால் தில்லையெனப் பெயர்பெற்றது . புலிக் கால் முனிவராகிய   வியாக்கிரபாதர்   தவங்கிடந்து இறைவன் திருக்கூத்தைக் கண்டு மகிழ்ந்த தலமாதலின்   புலியூர் என்றும்

பூங்கொடி 25 : அல்லியின் மறுமொழி

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         29 November 2023        அகரமுதல ( பூங்கொடி 24 : தாமரைக்கண்ணி தோன்றிய காதை – தொடர்ச்சி) பூங்கொடி அல்லியின் மறுமொழி ‘எத்தனை முறைநினக் கியம்புவென் பெரும! வித்தக! விண்மீன் வலையினிற் சிக்குமோ? தத்தை கொடுஞ்சிறைக் கூண்டுள் தங்கிட விழைதல் உண்டோ? விடுவிடு காமம்!      மழைமுகில் தொடுதர வானுயர் கோவில் அழுக்கும் இழுக்கும் பெருகி ஆங்குப் புழுக்கள் நெளிதரல் போலச் செல்வர் நெஞ்சில் தீக்குணம் நெறிந்தன போலும்; வெஞ்சினங் கொள்வாள் நின்முகம் நோக்காள்    25 வஞ்சி குறிக்கோள் வாழ்வினள் ஆதலின் விஞ்சுங் காமம் விடுவிடு’ என்றனள்;  30 அல்லியின் வரலாறு வினவல் `புயலைத் தடுக்கஓர் பொறியும் உளதோ? மயலை விடுக்க மதியுரை புகன்றனை! கயல்விழி! நன்’றெனக் காமுகன் நகைத்து,  `மடம்படு மாதே! மற்றொன்று வினவுவல் 35 வடபுலந் திருப்போன் வளநிதி மிக்கோன் வெருகன் எனும்பெயர் மருவிய ஒருவன் பெறுமனை நீயெனப் பேசிடும் இவ்வூர் அவனை நீங்கி ஆயிழை யிவளொடு  சிவணிய தென்னை? செப்புக’ எனலும், 40 ( தொடரும் ) கவிஞர்   முடியரசன் ,   பூங்கொடி

ஊரும் பேரும் 57 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – வைப்புத் தலங்கள்

Image
  ஃஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்         25 November 2023        அகரமுதல (ஊரும் பேரும் 57 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – சிரீ அடை மொழி ஊர்ப்பெயர்கள்-தொடர்ச்சி) வைப்புத் தலங்கள் தேவாரப் பாமாலை பெற்ற தலங்கள் பாடல் பெற்ற தலங்கள் என்றும், அப் பாசுரங்களில் பெயர் குறிக்கப் பெற்ற தலங்கள் வைப்புத் தலங்கள் என்றும் கூறப்படும்.  எனவே, திருப்பாசுரத் தொடர்களையும், சாசனங்களையும் துணைக் கொண்டு வைப்புத் தலங்களுள் சிலவற்றை அறிந்து கொள்ளலாம். பேரூர் பேரூர் என்னும் பெயருடைய சில ஊர்கள் சிறந்த சிவத்தலங்களாய் விளங்குகின்றன. “ பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான், பிறவா நெறியானே” என்று சுந்தரர்  பேரூர் இறைவனைக் குறித்தருளினார்.  கொங்கு நாட்டில் ஒரு பேரூர்  உண்டு. தேவாரத்தில், “ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீகொங்கில் அணிகாஞ்சிவாய்ப் பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாமன்றே” என்று  சுந்தரர்  அப்பேரூரைப் பாடியருளினார். அவர் திருப் பாட்டால் கொங்கு நாட்டில் காஞ்சி நதிக் கரையில் அவ்வூர் அமைந்துள்ள தென்பது அறியப்படும்  காஞ்சி நதி இப்பொழுது நொய்யலாறு  என்று அழைக்கப்படுகின்றது. சைவ உலகத்தில்  பேரூர் மேலைச் சிதம்ப

தமிழ் வளர்த்த நகரங்கள் 16 – அ. க. நவநீத கிருட்டிணன்: தமிழ் வளர்த்த நெல்லை

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         24 November 2023        அகரமுதல ( தமிழ் வளர்த்த நகரங்கள் 15 – அ. க. நவநீத கிருட்டிணன்: நெல்லைக் கோவிந்தர் – தொடர்ச்சி) தமிழ் வளர்த்த நெல்லை மதுரை மாநகரில் பாண்டியர்கள் தமிழை வளர்த்தற்கு அமைத்த கடைச்சங்கம் மறைந்த பிறகு தமிழகத்திலுள்ள பல நகரங்களிலும் வாழ்ந்த வள்ளல்களும் குறுநில மன்னர்களும் தமிழைப் பேணி வளர்த்தனர். ஆங்காங்குத் தோன்றிய தமிழ்ப்புலவர்களை ஆதரித்துப் போற்றினர். சமயத்தைக் காத்தற்கென்று முன்னேர்களால் நிறுவப்பெற்ற அறநிலையங்களாகிய மடாலயங்களும் சமயத் தொடர்புடைய தமிழ்ப் பணியை ஆற்றின. அவ்வகையில் திருவாவடுதுறை ஆதீனமும் தருமபுர ஆதீனமும் திருப்பனந்தாள் ஆதீனமும் தலைசிறந்து நிற்பனவாகும். ஈசான தேசிகர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சார்ந்த கிளை மடம் ஒன்று நெல்லைமாககரில் உண்டு. அது மேலைத் தேர் வீதியில் அமைந்துள்ளது. அத் திருமடத்தை  ஈசான மடம்  என்றும் இயம்புவர். அதில்  சுவாமிநாத பண்டிதர்  என்னும் தமிழ் முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவரை  ஈசான தேசிகர்  என்றும் கூறுவர். அதனாலேயே இவர் தங்கியிருந்த திருமடம் ஈசான மடம் எனப்பட்டது. இவர் இலக்கண இலக்கியப் பு