Posts

Showing posts from 2017

“தமிழரசனின் காலத்தின் குறள் பெரியார்” குறித்து மின்னூர் சீனிவாசன்

Image
அகரமுதல 219, மார்கழி 16 - மார்கழி 22,  2048 /   திசம்பர் 31  – சனவரி 06, 2018  இலக்குவனார் திருவள்ளுவன்         31 திசம்பர் 2017         கருத்திற்காக.. குளறுபடி நீங்கக்           குறள்படிக்க வாங்க!    குறள் வெண்பாவின் நடையே – நமக்குக் கொடுக்கும் கருத்துப் படையே! அறமும் புதிதாய்க் கொண்டு – வேல் அரசு உரைத்தார் விண்டு! ஆழ்ந்து படிப்போம் நூலை – நம் அறிவுக் கூர்மை “வேலை” சூழ்ந்த தோழர் எடுப்பார் – மடமைத் தொல்லை தீரத் தடுப்பார்! சாதிச் சழக்கும் இன்றி – மதம் சார்ந்த வழக்கும் இன்றி நீதி மனித நேயம் – தோன்றின் நிகழும் மனத்தில் மாயம்! நேர்மை நெருப்புப் பெரியார் – எளியோர் நீடு போற்றர்க் குரியார்! கூர்மை யாய்நற் கருத்தும் – மொழியில் கொழிக்கும் மதியை நிறுத்தும்! கூரிதான எண்ணம் – இனி, கொள்கை முழக்கம் பண்ணும்! நேரிதான முரசு – அடித்தார் நிகரிலா வேலரசு! மின்னூர் சீனிவாசன்

வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 5.

Image
இலக்குவனார் திருவள்ளுவன்         24 திசம்பர் 2017         கருத்திற்காக.. ( வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 4. தொடர்ச்சி ) வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல்  ( வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ ங ’ கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.) வாழ்க்கைத் துணைநலம்                 இல்லற வாழ்க்கை ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கணவனும் மனைவியுமாகக் கூடி வாழும் வாழ்க்கையாகும். இருவருள் ஒருவர் இல்லையானாலும் இல்லறம் சிறப்புறாது. இல்வாழ்வு அமையப் பெறுவதற்கே இருவரும் ஒன்று கூட வேண்டும்.  இல்லற வாழ்வில் இருவருமே தலைவர்கள்.  கணவன் தலைவன்; மனைவி தலைவி. கணவன் தலைவி என்றால் மனைவி அடிமையல்லள்; மனைவி தலைவி என்றால் கணவன் அடிமையல்லன்; இருவருமே தலைமைப் பொறுப்புக்கும் பெருமைக்கும் உரியவர்கள். இல்லற வாழ்வு இனிமை பொருந்த நடை பெற வேண்டுமென்றால் இருவர் துணையும் வேண்டும். ஆயினும், இல்லறத்தில் தலைவனைவிடத் தலைவிக்கே பொறுப்பும் கடமையும் மிகுதி. அவளே இல்லில் தங்கி இல்லறம் ஓம்புதலில் இடையறாது ஈடுபடும் நிலைக்குரியவளாகிவிட்டாள். ஆகவே “இல்லாள்’    (=வீட்டிற்குரிவள்) என்றும், “

தமிழ் வளர்கிறது! 7-9 : நாரா.நாச்சியப்பன்

Image
அகரமுதல 218, மார்கழி 09 - மார்கழி 15,  2048 /   திசம்பர் 24  – திசம்பர் 30,  2017 இலக்குவனார் திருவள்ளுவன்         24 திசம்பர் 2017         கருத்திற்காக.. (தமிழ் வளர்கிறது! 4-6 : நாரா.நாச்சியப்பன் தொடர்ச்சி) தமிழ் வளர்கிறது! 7-9 : நாரா.நாச்சியப்பன் பொய்யான கருத்தெல்லாம் தமிழர் நாட்டில் புகுத்துகின்ற கதைகளையே வெறுத்தொ துக்கச் செய்யாரோ எனநினைத்தால் கலைந யத்தைச் செந்தமிழில் இறக்கிவைத்த கவிதை யென்று மெய்யாக விழாக்கள்பல நடத்தி வைத்து மேன்மேலும் அக்கதையே பெருக்கு வார்கள் செய்யாதே என்பதனைச் செய்வ தற்கே திரண்டோடி வருவாரிம் முரண்டர் கண்டீர் !    (7) தென்றமிழில், வடமொழியின் சொற்கள் வந்து திரிந்ததென ஆராய்ச்சி நடத்திக் காட்டி அன்றிருந்த தமிழ்ச்சொல்லும் வடசொல் லென்றே அழிவழக்குப் பேசிடுமோர் கூட்டத் தாரும் இன்றமிழை வளர்க்கின்றோம் யாங்க ளென்றே ஏமாந்த தமிழ்நாட்டார் முன்னே வந்து நின்றிருப்பார் பூமாலை கைச்செண் டோடே நிகழ்த்திடுவார் வரவேற்புத் தமிழர் தாமே  (8) பெண் கல்வி வேண்டுமென்றே ஒருவர் சொன்னால் பெரியவளாய் ஆகும்வரை படிப்ப தென்று தண்டமிழ்க்க

காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 4/4 – கி.சிவா

Image
அகரமுதல 218, மார்கழி 09 - மார்கழி 15,  2048 /   திசம்பர் 24  – திசம்பர் 30,  2017 இலக்குவனார் திருவள்ளுவன்         24 திசம்பர் 2017         கருத்திற்காக.. (காக்கைவிடு   தூது   பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப்   போராட்ட அரசியல்   4 /4  –  தொடர்ச்சி) காக்கைவிடு   தூது   பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப்   போராட்ட   அரசியல்   4 /4  காக்கைக்கு   வழிகாட்டல்  முதலமைச்சரைச் சந்திக்கப் பலரை அனுப்பியும் பலனில்லை. அதனால், திருச்சிராப்பள்ளியிலிருந்து கிளம்பிய சினங்கொண்ட தமிழர்படை 5 போர்க்கொடி உயர்த்திப் போராடி வாகை சூடியது. ஆயினும், யாவரும் முதலமைச்சரிடம் தூதுவிடுக்க முடிவுசெய்தனர். ஆகையால், காக்கையே! நீ அவரிடம் சென்று ‘ஆங்கில ஆட்சியின் அடிமையிலிருந்து மக்களை விடுவிக்கவே பிறந்தேன்; உழைத்தேன் என்று மக்களிடம் திறமையாகப்பேசி, தந்திரத்தால் முதலமைச்சர் ஆனவரே! மறையவரே!  நானும்   ஒரு   தமிழனென்று   தேனாகப்பேசிப்   பெரும்   பதவியைப் பெற்றவரே ! பதவி வந்தபிறகு ஆசை அறிவை மறைக்க,  சாதியைப் போற்றி   வளர்த்து,  பழந்தமிழைக்   குட்டிச்   சுவராக்கி,  கூறுகூறாக வெட்டி,  வெட்டவெளியில