Posts

Showing posts from January, 2020

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – பேராசிரியர் வெ.அரங்கராசன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         28 சனவரி 2020         கருத்திற்காக.. திருக்குறளும் மாறாத விழுமியங்களும் — அமைதி                                          எல்லோரும் அமைதிஉற்று நல்வாழ்வு                     வாழ்ந்திடல் வேண்டும் என்னும்          நல்லெண்ணம் அல்லால் வே[று]ஒன்[று]                          அறியேன் வள்ளுவப் பெருமானே….! 1.0.0.நுழைவாயில்                    இன்று உலகம் முழுவதும் அமைதியும் நல்லிணக்கமும் பழுதற அமைய வேண்டும் என ஐ.நா.அவையின் ‘ யுனெசுகோ’  அறிவுறுத்துகின்றது; வலியுறுத்துகின்றது.                   உலக மக்களின் வாழ்க்கையின் ஆழத்தையும் உயரத்தையும் நீளத்தையும் அகலத்தையும் அணுகி, நுணுகி, ஆழ்ந்து, கூர்ந்து, அலசி ஆராய்ந்தவர்  திருவள்ளுவர். அவர் தனிமனிதர்களிடம்  குடும்பங்களில் சமுதாயங்களில் நாடுகளுக்குள் உலக நாடுகளுக் கு இடையில் அமைதியும் நல்லிணக்கமும் அரும்பி, மலர்ந்து, மணக்க வேண்டும் எனப் பெரிதும் விழைந்தவர்.                   அவற்றிற்கு உரிய விழுமியங்களை எல்லாம் திருவள்ளுவர் அழகுறத் திருக்குறளில் பதிவு செய்துள்ளார்.   2.0.0. அமைத

தந்தை பெரியார் சிந்தனைகள் 6 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         28 சனவரி 2020         கருத்திற்காக.. (தந்தை பெரியார் சிந்தனைகள் 5 இன் தொடர்ச்சி (ஆ) முருகன்:  விநாயகனுக்குத் தம்பி இவன். இவனுக்குச் ‘சிவகுமாரன், சரவணன், கார்த்திகேயன், சேனாபதி, குகன், ஞானபண்டிதன், சுவாமிநாதன், சுப்பிரமணியன்’ என்று பல திருநாமங்கள் உண்டு. இவன் பிறப்பைப் பற்றியும் பலகதைகள் உண்டு. பாமரமக்கள் உணர்வதற்காகப் புனையப்பெற்றவையே இக்கதைகள்.  தந்தை பெரியார் அவர்கள் இக்கதைகளை ஆதாரமாகக் கொண்டு அனைத்தையும் சாடுகிறார்கள்.  அறிஞர்கள் இக்கதைகளில் அடங்கியுள்ள தத்துவத்தை மட்டிலும் எடுத்துக் கொள்கின்றார்கள். அண்டமெங்குமுள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனிடத்திருந்து வந்தவை. ஆகவே அவை யாவுக்கும் அவன் அப்பனாகவும், பராசக்தி அன்னையாகவும் இருக்கின்றனர். தோன்றிய உயிர்களுள் உயர்வுதாழ்வு உண்டு, விலங்குக்கும் மனிதனுக்கும் எவ்வளவு வேற்றுமை? இதற்கெல்லாம் மேலாக மக்களுக்கும் அமைந்துள்ள தராதரமோ அளப்பரியது. கல்நிலையிலிருந்து கடவுள் நிலைவரை மக்களைக் காணலாம். மனிதன் எவ்வளவு மேலோன் ஆகமுடியும் எனபது ஒரு பெரிய வினா. இவ்வினாவுக்கு விடையாக அமைந்திருப்பவன்