Posts

Showing posts from April, 2012

Iniyavanukku 70; ilakkiya veedthikku 34

Image
கவின் இல்லம் இலக்கிய வீதிக்கு 34 தமிழ்முனி இனியவனுக்கு 70 Apr 21, 2012 by தமிழ்வேல் in விருந்தினர் அறை 0 comments 50 ஆண்டுகளுக்குமேலாக எழுத்தாளராகப் பணி, 33 ஆண்டுகள் இடையறாத அமைப்புப் பணி எனத் தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றிவரும் ‘இலக்கிய வீதி’ அமைப்பாளர் இனியவனின் 70ம் ஆண்டு விழா கடந்த 16ஆம் தேதி கோலாகலமாக சென்னையில் நடைபெற்றது. விழாவில் தமிழகம் மற்றும் பிற இடங்களிலிருந்து முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள். அதை முன்னிட்டு அவரிடம் ஒரு நேர்காணல்... இனியவன் பெயரில் மட்டுமல்ல, நேரிலும் இனியவராகவே இருக்கிறார். இனியவன் ஒரு சிறந்த எழுத்தாளர், கவிஞர் மட்டுமல்ல, பல அமைப்புகளின் பொறுப்புகளில் இருந்து இன்றுவரை செயல்பட்டுவருபவர். அதோடு தமிழின் தற்கால இலக்கியத்துக்கு வளம் சேர்க்க பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. • இளமைக்காலம் பற்றிச் சொல்லுங்கள்.. “9ஆம் வகுப்பு படிக்கும்போதே ‘மாணவர் குரல்’ என்ற இதழில் முதல் சிறுகதையை எழுதினேன். அது பரிசும் பெற்றது. அந்த ஊக்க

To forget good turns is not good: நன்றி மறப்பது நன்றன்று

Image
                      நன்றி மறப்பது நன்றன்று எங்களைப் படைத்தவன் நாட்டம் - ஓர்       இணையிலா நன்றியின் தேட்டம் ; இங்கொரு நன்மையும் எட்டும் - வரும்       எழில்மிகு மறுமையும் கிட்டும் !                              வாய்ப்புகள்   வழங்கியோன் இறைவன் - இந்த       வாயால் மறுத்தலும் முறையோ? , தேய்ந்திடும் பூமியில் வாழ்வு - நீயும்         தொழுதலும் நன்றியின் பதிவு அமுதினை   வழங்கிடும் இறையை -   அவனும்      அருளியத் தேன்மொழி மறையை நமதெனப் போற்றிடும் மனமும் - இனி      நன்றியைக் நவின்றிடு தினமும் காலமும் கரைவதைக் காண்பாய் - நம்      காசுகள் குறைவதைக் காண்பாய் , ஞாலமும் வேண்டுதல் நன்றி - இறை      ஞானிகள் வேண்டிய வழியில் !                               அற்புதப் படைப்பெனும் உடலாம் - அதனுள்    அளவிலா என்புகள் உண்டாம் கற்பனை செய்திட முடியா   - இறையின்    கருணையை நன்றியால் நிரப்பு!       உதவிகள் செய்திடும் உன்றன் – எல்லா     உறவுகள் நட்புகளை இன்றே கதவினத் தட்டியே நன்றி- கூற    கலக்கமும் தயக்கமும் இன்றி!       விடைபெறும் நாளினை எண்ணி- நீயும்      விதைத்திடு நனறியெனும