Posts

Showing posts from September, 2015

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 060. ஊக்கம் உடைமை

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      27 September 2015       No Comment (அதிகாரம் 059. ஒற்று ஆடல் தொடர்ச்சி) 02.  பொருள் பால் 05.  அரசு இயல் அதிகாரம் 060. ஊக்கம் உடைமை எவ்வகைச் சூழலையும் கலங்காது, எதிர்கொண்டு சமாளிக்கும் மனஉறுதி ‘உடையர்’ எனப்படுவ(து) ஊக்கம்; அஃ(து)இல்லார்,       உடைய(து) உடையரோ மற்று?       ஊக்கம் உடையாரே, ‘உடையார்’;         மற்றையார், உடையார் ஆகார். உள்ளம் உடைமை, உடைமை; பொருள்உடைமை,       நில்லாது; நீங்கி விடும்.        ஊக்கமே, நிலைக்கும் பெரும்செல்வம்;         பொருள்செல்வமோ நில்லாது; நீங்கும். ”ஆக்கம் இழந்தேம்” என்(று), அல்லாவார், ஊக்கம்,       ஒருவந்தம் கைத்(து)உடை யார்.  வளநலங்களை இழப்பினும், ஊக்கத்தார்,        “இழந்தோம்” என்று கலங்கார். ஆக்கம், அதர்வினாய்ச் செல்லும், அசை(வு)இலா       ஊக்கம், உடையான் உழை.       வளநலங்கள், வழிகேட்டுத், தளராத         ஊக்கத்தான் இடத்திற்கே செல்லும். வெள்ளத்(து) அனைய மலர்நீட்டம்; மந்தர்தம்,       உள்ளத்(து) அனைய(து), உயர்வு.      

இனிதே இலக்கியம்! 4 – முத்தொழில் ஆற்றுநரே தலைவர் : – இலக்குவனார் திருவள்ளுவன்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      27 September 2015       No Comment   4   முத்தொழில் ஆற்றுநரே தலைவர் உலகம் யாவையும் தாமுளவாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா, அலகி லா விளை யாட்டுடை யார், அவர் தலைவர்! அன்னவர்க் கேசரண் நாங்களே !   கவிப்பேரரசர் கம்பர் தம்முடைய இராமகாவியத்தில் எழுதிய தற்சிறப்புப்பாயிரம்.   “உலகங்கள் யாவற்றையும் தாம் உள்ளவாறு படைத்தலும் அவ்வுலகங்களில் உள்ள அனைத்து வகை உயிர்களையும் நிலைபெறச்செய்து காத்தலும் அவற்றை நீக்க வேண்டிய நேரத்தில் நீக்கி அழித்தலும் ஆகிய மூன்று தொழில்களையும் இடைவிடாமல்(நீங்கலா) அளவற்ற(அலகுஇலா) திருவிளை யாடல்களாகப் புரிபவர் யாரோ, அவரே எங்கள் தலைவர்! அவரிடமே நாங்கள் அடைக்கலமாகிறோம்! “ என்கிறார் கம்பர்.   குறிப்பிட்ட கடவுள் எனக் குறிக்காமையால் கடவுள் நம்பிக்கை உள்ளவர் யாவருமே தத்தம் கடவுளை வணங்கும் வகையில் பொதுவாக அமைந்த பாடல்களுள் இதுவும் ஒன்று.   உலகம் முதலான பொதுவான சொற்களால் முதல் பாடலைத் தொடங்குதல் தமிழ் மரபு. அதற்கிணங்கக் கம்பர் உலகம் என்னும் சொல்லுடன் தம் படைப்பைத் தொடங்கி உள்ளார்.  உல

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 059. ஒற்று ஆடல்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      27 September 2015       No Comment (அதிகாரம் 058. கண்ணோட்டம் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 059. ஒற்று ஆடல் உள் ,வெளி நாடுகளில், எல்லா நடப்புக்களையும் , உளவு பார்த்தல் ஒற்றும், உரைசான்ற நூலும், இவைஇரண்டும்,       தெற்(று)என்க, மன்னவன் கண்.        உளவும், உளவியல் நூல்தெளிவும்         ஆட்சியரிடம் அமைதல் வேண்டும். எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை, எஞ்ஞான்றும்       வல்அறிதல், வேந்தன் தொழில்.       எல்லார்க்கும் எல்லாமும் கிடைப்பவற்றை,         ஆட்சியான் உளவால் ஆராய்க. ஒற்றினான் ஒற்றிப், பொருள்தெரியா மன்னவன்       கொற்றம், செயக்கிடந்த(து), இல்.        நிகழ்வனவற்றை, உளவால் உணரா         ஆட்சியால் ஏதும் ஆகாது. வினைசெய்வார், தம்சுற்றம், வேண்டதார், என்(று),ஆங்(கு)       அனைவரையும், ஆராய்வ(து) ஒற்று.        பணியார், உறவார், பகையார்என,         எல்லாரையும் உளவு பார்க்க. கடாஅ உருவொடு, கண்அஞ்சா(து), யாண்டும்       உகாஅமை வல்லதே, ஒற்று.        மாறுவேடம், அ