Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 053. சுற்றம் தழால்



attai_kuralarusolurai97

02. பொருள் பால்
05. அரசு இயல்
அதிகாரம் 053. சுற்றம் தழால்


உறவினர்க்கு வேண்டியன கொடுத்து,
அரவணைத்துக் காப்பாற்றும் உயர்பண்பு.

  1. பற்(று)அற்ற கண்ணும், பழைமை பாராட்டுதல்,
       சுற்றத்தார் கண்ணே, உள.

     ஏழ்மையிலும் பழைய உறவைக்
       கொண்டாடல், உறவாரிடமே உண்டு.

  1. விருப்(பு)அறாச் சுற்றம் இயையின், அருப்(பு)அறா
     ஆக்கம் பலவும், தரும்.

     விருப்பம் குறையா உறவாரால்
       அறுபடா வளநலம் அமையும்.

  1. அள(வு)அளா(வு) இல்லாதான், வாழ்க்கை, குளவளாக்,
     கோ(டு)இன்றி, நீர்நிறைந்(து) அற்று.

     மனம்கலந்து, உறவாரோடு பழகாதான்    
       வாழ்வில் உறவார் இரார்.

  1. சுற்றத்தால் சுற்றப் படஒழுகல், செல்வம்தான்,
     பெற்றத்தால்  பெற்ற பயன்.

 சுற்றத்தார் சுற்றும்படி உதவுவதே,
       செல்வத்தைப் பெற்றதன் பயன்.

  1. கொடுத்தலும், இன்சொலும், ஆற்றின், அடுக்கிய
      சுற்றத்தால், சுற்றப் படும்.

 இன்சொல் சொல்லிக் கொடுப்பாரை,
        அளவுஇலாச் சுற்றத்தார் சுற்றுவார்.

  1. பெரும்கொடையான், பேணான் வெகுளி, அவனின்
      மருங்(கு)உடையார், மாநிலத்(து) இல். 

      சினவாத கொடையான் அருகில்
        சுற்றத்தார் நிரம்பவே இருப்பார்.

0527. காக்கை கரவா, கரைந்(து)உண்ணும்; ஆக்கமும்,
     அன்னநீ ரார்க்கே உள.

 மறைக்காது பகுத்துஉண்ணும், காக்கை
       போல்வார்க்கே, வளநலம் ஆகும்.

  1. பொதுநோக்கான் வேந்தன், வரிசையா நோக்கின்,
      அதுநோக்கி, வாழ்வார் பலர்.

 பொதுவாய்ப் பார்க்காமல், தகுதி
        பார்க்கும் ஆள்வானுக்குச் சுற்றம்மிகும்.

  1. தமர்ஆகித், தன்துறந்தார் சுற்றம், அமராமைக்
     காரணம் இன்றி, வரும்.

 பிரிந்ததன் காரணம் பிரிந்தபின்,
       சுற்றத்தார் வந்து சுற்றுவார்.

  1. உழைப்பிரிந்து, காரணத்தின் வந்தானை, வேந்தன்,
     இழைத்(து)இருந்(து) எண்ணிக் கொளல்.

 பிரிந்த சுற்றத்தார் திரும்பிவரின்,
       ஆட்சியான், ஆராய்ந்து ஏற்க.
-பேராசிரியர் வெ. அரங்கராசன்
(அதிகாரம் 054. பொச்சாவாமை)



Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue