Skip to main content

எம் தலைவர் தமிழ்ப் பெரியார் என்றும் வாழ்க! – கதி.சுந்தரம்

periyar04

பெரியார்

ஒருகுலத்துக் கொருநீதி உரைத்து நிற்கும்
உயர்வில்லார் தலைசாயப் புரட்சி செய்த
ஒரு தலைவர்; தென்னாட்டின் உயர்வைக் கூறும்
உயர்கதிரோன்; சாதியென்னும் கொடிய காட்டுள்
வருகின்ற இன்னலதை எதிர்த்துப் போக்கி
வாளேந்தி முதற்பயணம் செய்த வீரர்;
இருளகற்றும் பணிபுரிந்து நிற்கும் செம்மல்,
எம் தலைவர் தமிழ்ப் பெரியார் என்றும் வாழ்க!
– கவிஞர் கதி.சுந்தரம்


Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்