Posts

Showing posts from November, 2020

கடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்!-ஆற்காடு க.குமரன்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         24 November 2020         No Comment கடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்! புயல் எச்சரிக்கை! நடுவண் அரசு ஆலோசனை நிதியுதவிக்கு மக்களிடம் கையேந்தலாமா என்று!   மாநில அரசு ஆலோசனை மத்திய அரசிடம் கையேந்த லாமா என்று!   மக்கள் குழப்பத்தில் யாரிடம் கையேந்த லாம் என்று!   யாரிடமும் கையேந்தாமல் வாரி வழங்கிய வானம் பார்க்கிறது வேடிக்கை வெள்ளமும் வறட்சியும் வந்து போவது வாடிக்கை இதைக் கொண்டு வாழ்வது என்னவோ அரசும் அதிகாரிகளும் வாடுவது என்னவோ மக்களும் மண்ணும்   பிச்சை எடுக்க கூடாது என்றுதான் மழை பெய்கிறது அதை வைத்துப் பிச்சை எடுக்கும் மக்களும் அரசும் !   கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாததைப்போல  காலில் விழுந்து கதறிய மழையைக் கடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கும் நாம்! இவண் ஆற்காடு க குமரன்   9789814114

உவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         23 November 2020         No Comment ஐப்பசி 08, 2051 / 23.11.2020 இந்தியநேரம் 18:00 – 20:00 கூட்டஎண் : 524 945 7887 கடவு எண் : 364227 கரூர் தமிழ்ச்சங்கம் நடத்தும் உவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா கூட்டத்தில் பின் வரும் இணைப்பு வழி இணையலாம்: https://us02web.zoom.us/j/5249457887?pwd=TXpkRC93UVkzbjREcXhFK1lvbW1JZz09 நெறியாளர்:  தமிழ் இராசேந்திரன்

தமிழன் தமிழனாக வாழவேண்டும்! – ஆற்காடு க. குமரன்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         22 November 2020         No Comment தமிழன் தமிழனாக வாழவேண்டும்! எழுத்துகளோடு உறவாடவும் எண்ணங்களோடு உரையாடவும் எனக்கு நேரமில்லை!   பொழுது போகவில்லை என்பது பொய் பொழுது போதவில்லை என்பதே மெய்   எழுத்துகள்தான் என் நண்பர்கள் எண்ணங்கள் துணையோடு அவர்களைச் சேர்த்துக் கோத்து வரிசைப்படுத்தி வார்த்தையாக்கி வலம்வர விட்டு வாசித்து சீராக்கி நேராக்கி கவிதைத் தேராக்கி சுவைக்கவே நேரம் போதவில்லை எனக்கு!   காட்சிப் படுவதை எல்லாமே வார்த்தைகளைக் கொண்டு சான்றாய் வடிக்கிறேன் நான்!   புண்படுத்தும்  மனிதரிடையே பண்பட்டு போய்க்கொண்டிருக்கிறது என் ஆயுட் காலம்.   வாசகர்கள் எனக்கான வரங்கள் திறனுரைகள் எனக்கான உரங்கள் கைதட்டும் கரங்கள் இருப்பதால்தான் காற்றுகூட கத்துகிறது   எழுத்துகளோடு வாழ்ந்து கொண்டிருப்பதால் எவரைப் பற்றியும் கவலை இல்லை எனக்கு.   இரவும் பகலும் நான்கு திசைகளிலும் ஏழு நாட்களும் எழுத்துகளோடே  நான்.   உணவுக்கும் ஏங்குவதில்லை உறவுக்கும் ஏங்குவதில்லை உண்மைகள் தூங்குவதில்லை உணர்வுகள் வரிகளில் வலிகளாய்!   எழுத்து எனக்கு ஒரு வடிகால் உணர்வுகளைக் கொண்டு வடிப்பதால்!   என

தடவியல் வல்லுநர்களாகிவிட்டோம்!– ஆற்காடு க. குமரன்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         13 November 2020         No Comment தடவியல் வல்லுநர்களாகிவிட்டோம்!   தடவியல் வல்லுநர்களாகிவிட்டோம் தடவிக் கொண்டே இருக்கிறோம் தொடுதிரையை ஒருவரை ஒருவர் தொடாமலே!   கைவரி மாறவில்லை பதியும் இடங்கள்தான் மாறிப்போயின பாதத்‌ தடங்களும் மாறவில்லை பயணங்களும் மாறவில்லை பாதைகள் தான் மாறிப்போயின   இலக்கு என்னவோ வெற்றியை நோக்கித்தான் வழிகள்தான் குறுக்கும் நெடுக்குமாக   எங்குப் பயணித்தாலும் ஒரு துணையைத் தேடுகிறோம் என்னதான் தனிமைப்பட்டு இருந்தாலும் நம் மனம் மட்டும் எப்போதும் ஒரு துணையைத் தேடுகிறது   நமக்கு என்று துடிக்கும் ஓர் உயிரை நாடுகிறது எனக்கு என்று ஓர் உயிர் இருக்கிறது என்ற நம்பிக்கை வந்துவிட்டால் போதும் இந்த உலகமே என் காலடியில்   காதலிக்கும் எல்லோருக்குமே ஒரு கருவம் இருக்கும் – அவர்களுக்கு என்று ஓர் உயிர் துடிப்பதால்   நம் அழகை நாம் சுவைப்பதை விட நம் அழகைப் பிறர் சுவைப்பதைச் சுவைத்துப் பாருங்கள் கருவம் தானாய்ப் பிறக்கும்   எல்லாரையும் பார்த்து ஏளனமாகச் சிரித்த காலம் போய் எல்லாரும் என்னைப் பார்த்துச் சிரிக்கும் காலம் காதலின் தோல்விக்குப் பின்னே   காதலிக்க

சாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         04 November 2020         No Comment சாதிச் சதிக்குத் திதி!   இருக்கும்போது உன்னைத் தீண்டாதவனை இறந்தபின்னை நீ ஏன் தீண்டுகிறாய்?   உயிர் இருக்கையில் உயர்ந்த சாதி உயிர் பிரிந்ததும் அவனே தாழ்ந்த சாதி   உயிர் இருக்கையிலேயே நம்மைப் பிணமாகப் பார்த்தவனை அவன் உயிர் பிரிந்த பின்னும் நாம் பிணமாகப் பார்ப்பதில்லை தோழனாக நினைக்கிறோம் தோளிலே சுமக்கிறோம்   நன்றிகெட்ட சமுதாயம் ஒன்றிருக்க மறுக்குது   உயிரோடிருக்கையிலே ஊரை விட்டு ஒதுக்கியவர்கள் உயிர் போன பின்னே நம்மோடு ஒதுங்குவார்கள்   உயிர் இருக்கும் வரை நீ உயர்சாதி என்றால் எங்களுக்குள் இருக்கும் உயிர் என்ன மயிரா…..?   உயிர் தான் சாதி என்றால் அந்த மயிர் நமக்கெதற்கு?   பறையடித்துப் பறைசாற்றுகிறாய் சாதி சாய்ந்தது என்று பிணத்திற்கும் புரியவில்லை இனத்திற்கும் தெரியவில்லை   மண் சட்டி உடைகிறது மதச்சட்டியில் மனித இரத்தம் எரியும் சிதையில் எழும் புகையில் ஏது சாதி?   சடலம் சாம்பல் ஆனதால் சவம்  இந்து மதமா ? குறுக்கெலும்புகள் எரியாமல் இருப்பதால் சவம் கிருத்துவ மதமா எரியும் சிதையைப் பிறை பார்த்துக்கொண்டிருப்பதால் சவம் முகமதி