Posts

Showing posts from June, 2013

தமிழும் சைவமும்

Image
தமிழும் சைவமும் By dn First Published : 30 June 2013 02:43 AM IST புகைப்படங்கள் 1 2 எல்லாம்வல்ல இறைவனுக்குப் பழைய தமிழ் நூல்களிலும் வட நூல்களிலும் வழங்கிய முக்கண்ணான், உருத்திரன் முதலான பல பெயர்கள் இருக்க, அவற்றுள் ஒன்றான "சிவன்' என்னும் பெயர் மட்டும் ஏனைப்பெயர்கள் எல்லாவற்றினுஞ் சிறந்ததாக எடுக்கப்பட்டு முதல்வனுக்கு வழங்கலானதும், அப்பெயரின் வழியே முழுமுதற் கடவுளை வழிபடுந் தமிழரது கொள்கை அல்லது மதம் "சைவம்' எனப் பெயர் பெறலானதும் மிக்க பழமையுடைய தொன்றென்பதும் மற்றைப் பண்டை மக்களிற் பலர் அச்சொல்லையே இறைவனுக்குச் சிறந்த பெயராக வைத்து வழங்கியவாற்றால் அறியப்படுகின்றது. ÷ஏபிரேயர் தாம் வணங்கிப்போந்த கடவுளைச் "சிகோவா' என்றே அழைத்தனர். உரோமர் அதனைச் "சூபிதர்' என்றே அழைத்தனர்; இவ்வயலவர் வழங்கிய அச்சொற்களெல்லாஞ் "சிவ' என்னுஞ் சொல்லின் திரிபேயன்றி வேறல்ல. மேல்நாடுகளில் அஞ்ஞான்று வாணிகம் நடாத்திய பண்டைத் தமிழரின் வாயிலாக "சிவ' என்னுஞ்சொல் அயல்நாட்டு நாகரிக மக்களிடையே பரவினா

'திருப்புகழ்' தமிழ்!

Image
"திருப்புகழ்' தமிழ்! By முருகசரணன் First Published : 23 June 2013 01:35 AM IST புகைப்படங்கள் அருணகிரிநாதர் அருளிய அருமைத் திருப்புகழில் "தமிழ்' பற்றிய பெருமைக்குரிய கருத்துகள் சிறப்பிடம் பெறுகின்றன. இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய முத்தமிழில், ஒரு மலரின் வடிவம் போன்றது இயற்றமிழ்; வண்ணம் போன்றது இசைத்தமிழ்; வாசம் போன்றது நாடகத் தமிழ். மூன்று பண்புகளும் ஒன்றாய்க் கலந்து அதே சமயம் தனித்தனிச் சிறப்புடன் திகழ்கிறது திருப்புகழ். ""இரவு பகல் பலகாலும் இயலிசை முத்தமிழ் கூறி'' என்று திருவண்ணாமலை திருப்புகழில் வருகிறது. செம்மையான தமிழ்; அதாவது தூய்மையான தமிழ். "அம்புவி தனக்குள் வளர் செந்தமிழ் வழுத்தி உனை அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே'' என்று கொங்கணகிரி திருப்புகழ் கூறுகிறது. மன வெம்மையை மாற்றித் தணிக்கும் மழைத்துளிகள்போல் குளிர்ந்த சொல் முத்துக்கள் தமிழில் நிரம்ப உள்ளன. ""தன் தமிழின் மிகுநேய முருகேசா'' என்று சிறுவாபுரி திருப்புகழிலும் ""தண்தமிழ் சேர் ப

தள்ளியே நில்லுங்கள்... - முத்தொள்ளாயிரப் பாடல்

தள்ளியே நில்லுங்கள்... By இரா. நடராசன் First Published : 09 June 2013 01:13 AM IST இக்காலத்துப் பெண்கள் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வதை ஒரு கலையாகவே கற்றுள்ளனர். மேலும், "என் மகன் பத்து வேலைகளைப் பத்து விரல்களால் செய்வான்' என்று பாராட்டிப் பேசுவதைப் பல வீடுகளில் கேட்கலாம். சங்ககாலத் தாய், போருக்குச் சென்ற தன் மகனைப் பற்றிப் பெருமிதத்தடன் பேசும் பாடல்கள் புறநானூற்றில் உண்டு. இவை எல்லாம் ஆறறிவு படைத்த மனித குலத்தோரின் திறமைகள். ஆனால், நான்கு கால்களால் நான்கு செயல்களைச் செய்யும் ஒரு யானையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படி ஓர் அற்புதமான ஆற்றலைக் கொண்டது சோழ மன்னன் கிள்ளியின் பட்டத்து யானை. அந்த யானை அப்படி என்ன செய்ததாம்? சோழனுக்கு ஒரு குணமுண்டு. போர் செய்யத் தொடங்கிவிட்டால், வடக்கு, தெற்கு என்று அனைத்துத் திசைகளிலும் உள்ள இடங்களை எல்லாம் வென்ற பின்னரே ஊர் திரும்புவான். அவனது வெற்றியில் பட்டத்து யானையின் பங்கு என்ன தெரியுமா? போராற்றலும், பேராற்றலும் கொண்ட அந்த யானை, ஒரு காலால் கச்சியம்பதி என்னும் காஞ்சியை மிதிக்கிறது. பின்னர் அடுத்த கால

கலித்தொகை பாடியோர்

இந்த வாரக் கலா இரசிகன் By dn First Published : 09 June 2013 01:16 AM IST காலம் ஏன் சிலரை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. சில சம்பவங்களையும், நிகழ்வுகளையும், நடத்திக் காட்டுகிறது என்பது விளக்க முடியாத புதிர். ஒருவேளை நான் "தினமணி' நாளிதழுக்கு வராமலே இருந்திருந்தால், நான் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பல தமிழ் வளர்த்த சான்றோரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படாமலே போயிருக்கும். கம்பன் பெயர் பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும் கூட்டத்தில் ஒருவராக வாழ்ந்து மறைந்தவர் திருப்பத்தூர் மாரிமுத்துச் செட்டியார். திருப்பத்தூர் கம்பன் கழகத்தைக் கட்டிக் காத்தவர் மட்டுமல்ல, கம்பனில் தோய்ந்த எத்தனை எத்தனையோ அறிஞர்களை அன்றைய ஒன்றுபட்ட வட ஆற்காடு மாவட்டப் பகுதியினருக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். திருப்பத்தூர் மாரிமுத்துச் செட்டியார் என்றால் உடனே நினைவுக்கு வருவது இரண்டுதான். முதலாவது, அவர் நம்மிடம் எடுத்துக் கொள்ளும் உரிமை. ஏதோ உடன்பிறந்தவர்போல அவர் சகஜமாகப் பழகும் பாங்கு, யாராக இருந்தாலும் அவரை நேசிக்க வைத்துவிடும். இரண்டாவதாக, அவரது விருந்தோம்பல். என்னைப் போல, அவரது வ