Posts

Showing posts from July, 2023

ஊரும் பேரும் 42 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி

Image
  ஃஃஃ        இலக்குவனார் திருவள்ளுவன்         29 July 2023        அகரமுதல ( ஊரும் பேரும் 41 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி ) ஊரும் பேரும் 42 : இரா.பி.சேது(ப்பிள்ளை):  துறையும் நெறியும் தொடர்ச்சி கடம்பந்துறை சைவ உலகத்தில் ஆன்ற பெருமை யுடையது ஆவடுதுறை. தேவாரப் பாமாலை பெற்றதோடு திருமந்திரம் திருஆவடுதுறை அருளிய திருமூலர் வாழ்ந்ததும் அப்பதியே இன்னும், திருவிசைப்பா பாடிய திருமாளிகைத் தேவர் சிவகதியடைந்ததும் அப்பதியே. இத்தகைய ஆவடு துறை, பேராவூர் நாட்டைச் சேர்ந்தது என்று சாசனம் கூறுகின்றது. பசுவளம் பெற்ற நாட்டில் விளங்கிய அப்பதியினை “ஆவின் அருங் கன்றுறையும் ஆவடுதண்துறை” என்று போற்றினாா் சேக்கிழாா். அத் தலம், வட மொழியில் கோமுத்தீச்சுரம் என்று வழங்கும் பான்மையைக் கருதும் பொழுது ஆவடுதுறை யென்பது ஆலயப் பெயராக ஆதியில் அமைந்திருத்தல் கூடும் என்று தோன்றுகின்றது. அக் கோயிலிற் கண்ட சாசனம் ஒன்று ‘சாத்தனூரில் உள்ள திருவாவடு துறை’ என்று கூறுதல் இதற்கொரு சான்றாகும். 13  சாத்தனூர் என்பது இப்பொழுது திருவாவடுதுறைக் கருகே ஒரு சிற்றுாராக உள்ளது. அவ்வூரில் எழுந்த ஆவடுதுறை என்னும் சிவாலயம் பல

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 47 : பழந்தமிழும் தமிழரும் 7

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         27 July 2023        அகரமுதல ( இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 46 : பழந்தமிழும் தமிழரும் தொடர்ச் சி) பழந்தமிழும் தமிழரும் 7   ஆனால், இன்றைய நிலைமை என்ன?  பிசிராந்தையார்  கூற்றுக்கு மாறுபட்டன்றோ இருக்கின்றது. இளமையிலேயே நரைபெற்று முதுமையடைந்து விடுகின்றோம். ஏன்? யாண்டு பலவின்றியும் நரையுள வாகுதல் யாங்கா கியர் என வினவுதி ராயின்? ஆண்டநம் மக்கள் அடிமைக ளாயினர்; பூண்டநம் பண்பு போலிய தாகின்று நற்றமிழ் மறந்தனர்; நானில மதனில் பிறமொழிப் பற்றில் பெரியோ ராயினர்; தமிழகத் தெருவில் தமிழ்தான் இல்லை; ஊரும் பேரும் உயர்மொழி வழக்கும் அயல்மொழி தன்னில் அமைந்திடக் கண்டோம்; தமிழைக் கற்றோர் தாழ்நிலை உறுவதால் தமிழைப் பயிலத் தமிழரே வந்திலர்; ஆட்சி மொழியும் அன்னை மொழிஎனச் சொல்லள வாக்கினர்; தூத்தமிழ் வெறுக்கும் அயல்மொழிக் காதலர் ஆட்சி கொண்டுளர்; உயர்கல் விக்குறு ஊடக மொழியாய்த் தமிழ்மொழி அமையத் தடுப்பவர் தமிழரே! ஆங்கில மொழிக்கே அளிப்பதில் பாதியும் தமிழ்மொழிக் களித்திலர் தமிழைப்        போற்றுவோர்; அல்லவை பெருகவும் நல்லவை குறையவும் மக்கள் வாழ்வில் மகிழ்ச்சிதான் இன்றே என்றுதான்

பூங்கொடி 7 – கவிஞர் முடியரசன்: ஒற்றுமை பரப்புக

Image
  ஃஃஃ         இலக்குவனார் திருவள்ளுவன்         26 July 2023        அகரமுதல ( பூங்கொடி 6  – கவிஞர் முடியரசன்:  விழாவயர்காதை  தொடர்ச்சி) ஒற்றுமை பரப்புக  எத்திசை நோக்கினும் எழுப்புக மேடை தத்தங் கொள்கை தவிர்த்து நாடும் மொழியும் வளம்பெற முன்னுவ தொன்றே வழியெனக் கருதி வழங்குக பேருரை முத்தமிழ் ஒலியே முழங்குக யாண்டும் சிறுசிறு பகையைச் சிங்தைவிட் டகற்றுக ஓரினம் காமென உன்னுக பெரிகே. வாழிய வாழிய காரினம் மழையைக் கரவா தருள்க பசிப்பிணி வறுமை பகைமை நீங்கி வசைக்கிலக் கிலதாய் வளர்க அரசியல் செல்வங் கல்வி சிறந்துமிக் கோங்குக வாழிய பொங்கல் வாழிய திருநாள்’  என்னுமிவ் வறிக்கை எங்கனும் பரந்தது; பொங்கற் கொண்டாட்டம் பொழிபனி கழியப் பொங்கலும் வந்தது; எழில்பெறச் செய்தனர் இல்லங் தோறும் வெண்ணிறச் சுண்ணம் விளைத்தது தாய்மை; கண்கவர் முறையிற் கட்டினர் தோரணம்; வண்ணப் புத்துடை வகைவகை பூண்டு கன்னல் துண்டி னைக் கடித்திடும் சிறுமகார் தெருவினில் ஒடித் திரிந்தனர் யாண்டும்; கருவிழி மகளிர் கடும்புனல் ஆடித் தறிதரும் ஆடை தரித்தனர் ஆகி நெய்வழி பொங்கல் செய்ம்முறை செய்து கைவணம் காட்டிக் காதலர் மகிழப் படைத்தனர் பிறர்க்கும் பகிர்ந்து

ஊரும் பேரும் 41 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும்

Image
  ஃஃஃ        இலக்குவனார் திருவள்ளுவன்         22 July 2023        அகரமுதல (ஊரும் பேரும் 40 : இரா.பி.சேது(ப்பிள்ளை): ஆறும் குளமும் தொடர்ச்சி) ஊரும் பேரும் 41 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் இறைவன் உறையும் துறைகள் பலவும் ஒரு திருப்பாட்டிலே தொகுக்கப் பெற்றுள்ளன. “கயிலாய மலையெடுத்தான் கரங்களோடு சிரங்கள் உரம் நெரியக்கால் விரலாற் செற்றோன் பயில்வாய் பராய்த்துறைதென் பாலைத்துறை பண்டெழுவர் தவத்துறை வெண்துறை”. என்று பாடினார் திருநாவுக்கரசர். திருப்பராய்த்துறை காவிரியாற்றினால் அமைந்த அழகிய துறைகளுள் ஒன்று திருப்பராய்த்துறை. அது பராய்மரச் சோலையின் இடையிலே அமைந்திருந்தமையால் அப் பெயர் பெற்றது போலும்: காவிரிக்கரையில் கண்ணுக்கினிய காட்சியளித்த பராய்த் துறையிற் கோயில் கொண்ட பரமனை, “பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத் திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே” என ஆதரித்தழைத்தார் திருநாவுக்கரசர். இந் நாளில் இத்துறை திருப்பலாத்துறை என்று வழங்கும். காவிரி யாற்றங் கரையில் உள்ள மற்றொரு துறை பாலைத்துறையாகும். அத் துறையில் காட்சியளிக்கும் இறைவனை, “மருவு நாண்மலர் மல்லிகை செண்பகம் பரவு நீர்ப்பொன்னிப் பாலைத் துறை