Posts

Showing posts from May, 2017

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 2/8 – கருமலைத்தமிழாழன்

Image
அகரமுதல 18 8, வைகாசி 14, 2048 / மே 2 8, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      28 மே 2017       கருத்திற்காக.. (பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 1/8 தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 2/8 தலைமை வணக்கம் சித்தர்தம்   மறுபிறவி    ஆனை   வாரி சிந்தனையின்    தோற்றந்தான்    ஆனை   வாரி புத்தர்தம்    உள்ளந்தான்    ஆனை   வாரி புதுக்கருத்தை    விதைப்பவன்தான்   ஆனை   வாரி புத்தகங்கள்    தோழன்தான்    ஆனை   வாரி புதுமைகளைப்    படைப்பவன்தான்   ஆனை   வாரி முத்தமிழர்   கண்டதமிழ்    மருத்து   வத்தை முதன்மையென    உணர்த்துபவன்    ஆனை   வாரி ! திருக்குறளைத்   தேசியநூல்    ஆக்கு   தற்குத் தில்லியிலே   போராட்டம்   செய்த   வல்லோன் அருங்குறளை   ஆங்கிலத்தில்    மொழிபெ    யர்த்தே அதன்பெருமை   அகிலமெல்லாம்     அறிய   வைத்தோன் அருமையாக    இக்காலக்    கவிஞர்    பாடல் ஆங்கிலத்தில்   மொழிபெயர்த்து   நூலாய்த்    தந்தோன் திருவாக    இந்தியிலே    மொழிபெ   யர்த்துத் தீந்தமிழை    உயர்த்துதற்கே     முன்னே    நிற்போன் ! சான்றளித்து   

திருக்குறள் அறுசொல் உரை: 129. புணர்ச்சி விதும்பல் : வெ. அரங்கராசன்

Image
அகரமுதல 18 8, வைகாசி 14, 2048 / மே 2 8, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      28 மே 2017       கருத்திற்காக.. (திருக்குறள் அறுசொல் உரை: 128. குறிப்பு அறிதல்:  தொடர்ச்சி)    3. காமத்துப் பால் 15.  கற்பு இயல் 129.   புணர்ச்சி விதும்பல்   பிரிந்து கூடிய காதலர் , கலந்து இன்புறத் துடித்தல் . (01-08 தலைவி சொல்லியவை) உள்ளக் களித்தலும், காண மகிழ்தலும்,       கள்ளுக்(கு)இல், காமத்திற்(கு) உண்டு.       நினைத்த, பார்த்த உடனேயே,         மகிழ்விப்பது கள்இல்லை; காதலே. தினைத்துணையும் ஊடாமை வேண்டும், பனைத்துணையும்       காமம் நிறைய வரின்.       பனைஅளவுக் கூடல் ஆசைவரின்,         தினைஅளவும் ஊடல் வேண்டாம். பேணாது பெட்பவே செய்யினும், கொண்கனைக்       காணாது, அமையல கண்.      மதிக்காமல் நடந்தாலும் கணவரைக்         காணத்தான் கண்கள் துடிக்கும். ஊடல்கண் சென்றேன்மன், தோழி! அதுமறந்து,       கூடல்கண் சென்ற(து)என் நெஞ்சு.       ஊடுவதற்கே சென்றேன்; உள்ளமோ,         கூடுவதற்குச் சென்றது, தோழி! எழுதும்கால் கோல்காணாக் கண்ணேபோல

யாரைத் தேர்வு செய்வார்? – கெருசோம் செல்லையா

Image
அகரமுதல 18 8, வைகாசி 14, 2048 / மே 2 8, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      28 மே 2017       கருத்திற்காக.. யாரைத் தேர்வு செய்வார்? நல்லார் கெட்டார் என்றிருவர் நடக்கும் தேர்தலில் போட்டியிட்டால், எல்லா வாக்கும் பெற்றவராய், ஏய்க்கும் கெட்டவர் வென்றிடுவார்! இல்லா நேர்மை இவ்வுலகில், இறைமகன் இயேசுவே நின்றாலும், பொல்லார் வாக்கு தரமாட்டார்; புனிதரைத்தான் கொன்றிடுவார்! – கெருசோம் செல்லையா