Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை: 127. அவர்வயின் விதும்பல்: வெ. அரங்கராசன்




3. காமத்துப் பால்
      
15.  கற்பு இயல் 127.  அவர்வயின் விதும்பல்


பிரிவுக் காலத்தில் ஒருவரை
ஒருவரைக் காணத் துடித்தல்.

(01-08 தலைவி சொல்லியவை)
  1. வாள்அற்றுப், புற்(கு)என்ற கண்ணும்; அவர்சென்ற,
      நாள்ஒற்றித் தேய்ந்த விரல்.
எதிர்பார்த்துக், கண்கள் ஒளிஇழந்தன.
நாள்எண்ணி, விரல்கள் தேய்ந்தன.

  1. இலங்(கு)இழாய்! இன்று மறப்பின்,என் தோள்மேல்
      கலம்கழியும், காரிகை நீத்து.
தோழியே! காதலை மறந்தால்,
தோள்கள் மெலியும்; வளைகழலும்.

  1. உரன்நசைஇ, உள்ளம் துணையாகச் சென்றார்,
      வரன்நசைஇ, இன்னும் உளேன்.
அறிவுபெறச் சென்றார் வரவினை
விரும்பியே, இன்னும் உள்ளேன்,

  1. கூடிய காமம் பிரிந்தார் வர(வு)உள்ளிக்
      கோடுகொடு ஏறும்என் நெஞ்சு.
கூடிப் பிரிந்தாரது வரவை
நெஞ்சம் கிளைதோறும் ஏறிப்பார்க்கும்.

  1. காண்கமன், கொண்கனைக் கண்ஆரக்; கண்டபின்,
      நீங்கும்என் மென்தோள் பசப்பு.
காதலரைக் கண்ஆரக் கண்டபின்தான்,
தோள்களின் நிறமாற்றம் நீங்கும்.

  1. வருகமன் கொண்கன், ஒருநாள்; பருகுவன்,
      பைதல்நோய் எல்லாம் கெட.
காதலர் வரட்டும்; பிரிவுத்துயர்
எல்லாம் கெடும்படி இன்புறுவேன்.

  1. புலப்பேன்கொல்? புல்லுவேன் கொல்லோ? கலப்பேன்கொல்?
      கண்அன்ன கேளிர் வரின்.
கண்போன்ற தலைவர் வந்தால்,
ஊடுவேனா? தழுவுவேனா? கூடுவேனா?

(08 தலைவன் சொல்லியது)
 1268.வினைகலந்து, வென்(று)ஈக வேந்தன்; மனைகலந்து,
      மாலை அயர்கம் விருந்து.
மன்னன் வென்றபின் இல்சென்று,
மனைவியோடு கூடி விருந்திடுவேன்.

(09-10 தலைவி சொல்லியவை)
 1269. ஒருநாள் எழுநாள்போல் செல்லும், சேண்சென்றார்,
      வருநாள்வைத்(து) ஏங்கு பவர்க்கு.
தொலைவில் சென்றாரை எதிர்பார்த்து
ஏங்குவார்க்கு, ஒருநாள் ஏழ்நாள்போல்.

  1. பெறின்என்ஆம்? பெற்றக்கால் என்ஆம்? உறின்என்ஆம்?
      உள்ளம் உடைந்(து)உக்கக் கால
        உள்ளம் உடைந்தபின், பிரிந்தார்
வரினும்என்? பெறினும்என்? தழுவினும்என்?

பேரா.வெ.அரங்கராசன்
பேரா.வெ.அரங்கராசன்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue