Posts

Showing posts from August, 2017

முத்துக்குமாரசுவாமி எனும் நூலக நல்முத்து -இரெங்கையா முருகன்

Image
அகரமுதல 200, ஆவணி 04, 2048  / ஆகத்து20, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      20 ஆகத்து 2017       கருத்திற்காக.. முத்துக்குமாரசுவாமி எனும் நூலக நல்முத்து   தமிழ் ஆய்வுலகில் மிக  முதன்மையான இடத்தை வகிப்பது மறைமலையடிகள் நூலகம். அந்த நூலகத்தின் தோற்றத்துக்கு உறுதுணையாக இருந்தவர் தாமரைச் செல்வர் வ.சுப்பையா (பிள்ளை). அந்த நூலக வளர்ச்சிக்குத் தனது அளப்பரிய ஆற்றலைச் செலுத்தியவர் அவரது மருமகன் இரா. முத்துக்குமாரசுவாமி. ‘நூலக உலகில் நல் முத்து’ என்று போற்றப்படும் முத்துக்குமாரசுவாமி (வயது 80) கடந்த செவ்வாய் அன்று காலமானார்.   உலக அளவில் தமிழ் அறிஞர்கள் பலரின் ஆய்வுகளில் உதவியவர் முத்துக்குமாரசுவாமி. தமிழாய்வு தொடர்பான குறிப்புதவிகளைத் தனது நினைவுகளிலிருந்தே தந்து உதவுவார். கிடைக்காத குறிப்புகள் எங்கே கிடைக்கும் என்பதையும் கூறி, அவை கிடைக்கவும் ஆவன செய்யும் தன்மை இவருக்குண்டு என்று பச்சையப்பன் கல்லூரி முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் ம.இரா. அரசு குறிப்பிடுகிறார். இந்தியாவின் முதல் முயற்சி!   மறைமலையடிகள் நூலகத்தில் நூலகப் பொறுப்பாளராக முத்துக்குமாரசுவாம

உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 3/3 : சந்தர் சுப்பிரமணியன்

Image
அகரமுதல 199,   ஆடி 28 , 2048   / ஆகத்து 13, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      13 ஆகத்து 2017       கருத்திற்காக.. (உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 2/3 தொடர்ச்சி) உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 3/3 இதைத் தவிர உங்களின் சொந்தப் படைப்புகள் வேறேதும் உளதா ? சொந்தப் படைப்புகள் என்று நிறையச் சொல்ல முடியாது. ‘ சிந்தனைச் சுவடுகள் ’ என்கிற என் பட்டறிவு சார்ந்த படைப்பு உள்ளது. இது நான் வாழ்க்கையில் கண்ட – சந்தித்த – நிகழ்வுக் குறிப்புகளின் தொகுப்பு. ஆனாலும், என்னுடைய தமிழ்க் கட்டுரைகள் 8 தொகுதிகளாக உள்ளன. அதில் வரும் அத்தனை கட்டுரைகளும் மொழி, குமுகாயச் (சமுதாயச்) சிந்தனைகள் குறித்தவை. இவை யாவும் நான் பல பல்கலைக் கழகங்களிலும், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் சென்று உரையாற்றிய தலைப்புகள். ஆங்கிலத்தில் உங்கள் சொந்தப் படைப்பேதும் உள்ளதா ? இதுவரை இல்லை. ஆனாலும், பல்வேறு செய்தித்தாள்களில் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாகப் பதிப்பிட எண்ணியுள்ளேன். தேசிய வேளாண் நிறு

நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 3/3 – நாகலட்சுமி சண்முகம் : சந்தர் சுப்பிரமணியன்

Image
அகரமுதல 199,   ஆடி 28 , 2048   / ஆகத்து 13, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      13 ஆகத்து 2017       கருத்திற்காக.. (நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 2/3 – தொடர்ச்சி) நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 3/3 – நாகலட்சுமி சண்முகம்   வெறும் படியெடுத்தல் எனப் பொதுவாக அறியப்படும் மொழிபெயர்ப்பை எப்படி ஒரு கலையாக நீங்கள் உணர்கிறீர்கள் ? மொழிபெயர்ப்பு என்பது கண்டிப்பாக ஒரு கலை. படிப்பவர்கள் அதை மொழிபெயர்ப்பு என உணரா வண்ணம் எழுதுவதே அக்கலையின் உச்சம். சில நேரங்களில், நூல்களின் தலைப்பை மொழிபெயர்ப்பதே கடினமாக இருக்கும். எளிய மூலப்பொருளைக் கூட மெருகேற்றிக் கொடுப்பதே மொழிபெயர்ப்பின் அரும்பணி. தொழிலாக மட்டுமின்றி, அது நம் சிந்தனைத்திறனையும் வளர்க்கும் முறையெனவே நான் கருதுகிறேன். மொழியாக்கம் செய்யக்கூடிய நூல்களை நீங்களே தேர்ந்தெடுப்பீர்களா ? சில நேரங்களில் தேர்ந்தெடுப்போம்; சில நேரங்களில், பதிப்பகங்கள் அவர்களது தேர்வைச் சொல்வது வழக்கம். எப்படியானாலும், நான் மொழியாக்கம் செய்யும் நூல் தரமானதுதான் என்னும் எண்ணம் ஏற்பட்ட பின்னரே நான் அந்த நூலை மொழிபெய