க௬. தமிழர் செய்ய வேண்டுவன?-திருத்துறைக் கிழார்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 18 December 2025 அ கரமுதல (கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 3/3: தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் க௬. தமிழர் செய்ய வேண்டுவன? க. விலைகள் உயர்வை எதிர்த்து மறியல் செய்தல். உ. மதுக்கடைகளை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தல் ௩. உப்பு காய்ச்சுதல், உப்பு அள்ளுதல் போராட்டம் நடத்தல். ௪. வரிகொடாப் போராட்டம் நடத்தல். ரு. காவிரிநீர் கொடாமலும், திருவள்ளுவர் படிமம் நாட்ட இசைவு கொடாமலும், கருநாடகத் தமிழர் பலரைக் காவு கொடுத்த கருநாடக அரசுடன் தமிழக அரசு எவ்வகை உறவும் வைத்துக் கொள்ளக் கூடாதென்று தமிழக அரசை வற்புறுத்தல். ௬. தமிழ்நாட்டில் வாழும் அயலாரையெல்லாம் வெளியேற்றுமாறும், இனி எவரையும் தமிழ்நாட்டில் குடியமர விடக் கூடாதென்றும் தமிழக அரசை வலியுறுத்திப் போராடல். எ. தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களை மேல்குடியினர் வாழுமிடங்களிலும், கோவில்களின் சுற்றுச் சுவர்களிடையிலும் குடியமர்த்துமாறு புரட்சி செய்தல். அ. கோவில்களில் முடக்கப்பட்டுள்ள செல்வங்களை (பொன், ...