Skip to main content

நான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்

அகரமுதல

நான் என்பது  செருக்கல்ல; எனது நம்பிக்கை!


வானந் தொடுந் தூரம்
அது நாளும் வசமாகும்,
பாடல் அது போதும்
உடல் யாவும் உரமேறும்;

பாதம் அது நோகும்
பாதை மிக நீளும்,
காலம் ஒரு கீற்றாய்க்
காற்றில் நமைப் பேசும்;

கானல் எனும் நீராய்
உள் ளாசை வனப்பூறும்,
மூளும் நெருப் பாளும்
நிலமெல்லாம் நமதாகும்;

கனவே கொடை யாகும்
கடுகளவும் மலை யாகும்,
முயன்றால் உனதாகும்
உழைப்பால் அது பலவாகும்;

நேசம் முதலாகும்’நொடி
தேசம் உனதாகும்,
அன்பில் பிரிவில்லை’ உயி
ரெல்லாம் அமுதூறும்

வெற்றி நிலை யாகும்
மனம்போல அது மாறும்,
கடல் மூடும் அலைபோல
நினைப் பொன்றே  வரமாகும்;

நானென்று கொண்டாய்
இனி நாமென்று காணேன்
உடல் தீதொன்று மில்லை
உள் உள்ளே நான் நீயே!
*வித்தியாசாக

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue