நெஞ்சில் வாழ்க நிலைத்து akaramuthala bharathidasan spl. issue


நெஞ்சில் வாழ்க நிலைத்து – மு.வில்லவன்

bharathidasan06

தனிச்சொல் தமிழ்ச் சொல்லைச் சேர்த்தொன்றாய்ப் பாடி
கனிச்சுவை ஈந்த தலைவா – கனி சுவைத்த
நற்றமிழர் நெஞ்சினில் நீங்காது நீவாழ்ந்து
இற்றரையில் வாழ்க இனிது.

தட்டி எழுப்பி தமிழுர்வு ஊட்டி வந்(து)
எட்டி நீ சென்றாய் கவித்தலைவா! –  விட்டின்று
சென்றாலும் உன் கவிதைப் பார்க்கும் தமிழ் நெஞ்சில்
என்றென்றும் வாழ்க இனிது.

மொழி வாழ்ந்தால் வாழ்வுண்டு நற்றமிழர்க்கும்; பாரில்
மொழியழிந்தால் வாழ்வில்லை காண்பீர் –  விழிபோன்று
காப்பீர் எனவுரைத்த பாவேந்தர்! நின்வழியை
காப்பவர் நெஞ்சில் புகு.

வண்டமிழர் கொண்ட மடமையை நீ போக்க
கொண்டிட்ட இன்னல் பலவுண்டு; – வண்டமிழர்
ஏற்கும் முறையறிந்து ஈந்திட்ட பாவேந்தர்
போற்றுகின்ற நெஞ்சில் புகு.
- குறள்நெறி: சித்திரை 19. தி.பி.1995 / மே 1, கி.பி.1964
 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue