பொருள்: திருமண மன்றத்தில் முழங்கிய மணப்பறைகளே அன்றைக்கே மணமக்களில் ஒருவருக்குப் பிணப்பறையாய் ஒலிக்கவும் கூடும். இதனை உணர்ந்த பெரியோர்கள் மனம் தீமைகளில் இருந்து பிழைத்துப்போகும் வழியை எண்ணும்.
திரைப்படங்களில் நாட்டாண்மை செய்யும் இடமாக மரத்தடியைக் காட்டுகிறார்கள் அல்லவா? அத்தகைய கூடும் இடம்தான் மன்றம் எனப்பட்டது. இப்பொழுது மன்றம் என்பது அரங்கத்தையும் குறிக்கிறது.
சிலர் திருமணத்தின்பொழுது ஒலிக்கும் பறைஇசை, பின்னர், பிறிதொரு நாள் இறப்பையும் ஒலிக்கவும் பயன்படுத்தப்படுகிறது எனக் கூறுகின்றனர். இதுவும் சரிதான் என்றாலும் அன்றைக்கே இரு நிலையும் நிகழலாம் என்பதால் அவ்வாறு கூறுவது ஏற்புடைத்தாய் அமைகிறது.
பக்குடுக்கை நன்கணியார் என்னும் புலவர் ஒரே நேரத்தில் ஓர் ஊரிலேயே ஒரு வீட்டில் இரங்கல் பறை கொட்டப்படும், மற்றொரு வீட்டில் மங்கல இசை முழங்கப்படும் என நிலையாமை குறித்துக் கூறுகிறார்.
ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்பப் (புறநானூறு 194)
எனத் தொடங்கும் அப்பாடல்.
மணமாலை சூட்டப்படும் அன்றே பிணமாலை சூட்டப்படும் வாய்ப்பு உள்ள நிலையாமைய உணர்பவர்கள் ஆரவார இன்பத்தில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
காலனும் வரும் முன்னே கண்ணிரண்டும் மூடுமுன்னே
வாலிபம் வாழ்வில் தோன்றி வான வில்லாய் மறையு முன்னே (கவிஞர் மருதகாசி)
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மார்ச்சு 2019 கருத்திற்காக.. எனக்குப் பிடித்த திருக்குறள்! தமிழ்ச் சமுதாயம் நயத்தக்க நாகரிகம் வேண்டும் சமுதாயம்; “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று “ங” போல் வளைக்கும் சமுதாயம். அதன் ஒப்பற்ற பெருமையைப் பறைசாற்றும் நூற்களுள் மிகச்சிறந்தது தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் என்பது எனது கருத்து. மனித இனம் படிநிலை வளர்ச்சியில் உருவாகி, உடல் வலுவால் மட்டுமின்றி அறிவு ஆற்றலால் மேம்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாழக்கைப் போராட்டத்தின் விளைவாக மிருகங்களிடம் இருந்து மேம்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் நிலைக்கு மனிதன் உயர்கின்றான். காலப்போராட்டத்தில் கருத்துக்களால் மேம்பட்ட சமுதாயமாக, உலகைக் காக்கும் சக்தியாக விளங்கும் சொற்களால் உருவான இலக்கியங்கள் கொண்டதால் “தமிழ்மொழி” செம்மொழி என்று உரைக்கப்படுகிறது. எனக்குப் பிடித்த குறள், அனைவருக்கும் தெரிந்த ஒரு குறள். ஆயினும் அதில் மறைந்திருக்கும் நுட்...
Comments
Post a Comment