மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன்! ~ இ.பு.ஞானப்பிரகாசன்

ஈழம்+ஞானப்பிரகாசன் : eezham_gnanam
[‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்' எனும் இறையுணர்வுப் பாடலைத் தமிழுணர்வுப் பாடலாய் மாற்றி இந்த ‘மாவீரர் திருநா’ளில் என் தமிழஞ்சலியாய்ச் சாற்றுகிறேன்!]

பல்லவி
மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் – ஒரு
மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன் – நான்
   மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் – ஒரு
    மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன்
கல்லானாலும் துயிலும் இல்லக் கல்லாவேன் – கருங்
கல்லானாலும் துயிலும் இல்லக் கல்லாவேன் – பசும்
புல்லானாலும் கரிகாலன் கை வில்லாவேன் – நான்
மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் – ஒரு
மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன்

உருவடி – 1
பொருளானாலும் விடுதலைக்கே எரிபொருளாவேன் – வெறும்
கரியானாலும் தமிழை எழுதத் துணையாவேன்
பேச்சானாலும் தமிழர் உரிமைப் பேச்சாவேன் – தமிழ்ப்
பேச்சானாலும் தமிழர் உரிமைப் பேச்சாவேன் – விடும்
மூச்சானாலும் ஈழத்துக்காய் நான்விடுவேன் – நான்
மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் – ஒரு
மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன்

உருவடி – 2
சொல்லானாலும் மானம் என்னும் சொல்லாவேன் – உதிர்
சருகானாலும் தமிழ் மண்ணுக்கே உரமாவேன்
துகளானாலும் பகைவர் விழிக்கு வினையாவேன் – தூசித்
துகளானாலும் பகைவர் விழிக்கு வினையாவேன் – தனி
உயிரானாலும் மீண்டும் நற்றமிழ்ப் பயிராவேன் – நான்
மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் – ஒரு
மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன்!

~இ.பு.ஞானப்பிரகாசன்
maaveerarnaal_patam01

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue