| அண்ணா | ||
| தமிழ்த்தாய் பெற்றெடுத்த பிள்ளையே தமிழ் மக்களுக்காக வந்துதித்த கடவுளே வழிகாட்டி எமையிணைத்த அண்ணனே ஈழத்தை உயிராய் நினைத்த எம்தலைவனே ஈழம் மலருமுன் உன்னுயிர் போகுமா? சுதந்திரக்காற்றை சுவாசிக்காது போவாயா? மக்கள்துயர் துடைக்காது விட்டுப்பிரிவாயா? தீர்வு காணாமல் ஈழப்போர்தான் முடியுமா? கடவுளுக்கு வயதுண்டா? கடவுளுக்கு அழிவுண்டா? கடவுளுக்கு எமனுண்டா? எம்கடவுள் உனக்கு சாவுண்டா? மிருகவம்சப்பேய்கள் கத்துகின்றன! சாத்தானின் வாரிசுகள் ஆடகின்றன! உனையழித்து வென்றதென துள்ளுகின்றன! வரவிருக்கும் இழப்பைப்புரியாமல் கொண்டாடுகின்றன! நீ இருக்கிறாய் என்பதுதான் உண்மை உனையாறவிட்டு எழுவதே மக்களின் கடமை எதிர்காலத்தில் அழியும் எம்மவரின் வறுமை மறவோம் ஒன்றே எமது தலைமை "போராட்ட வடிவங்கள் மாறலாம் எனினும் இலட்சியம் மாறாது� என்ற உன் சிந்தனையை நாம் மறக்கவில்லை! எம்மிடம் தந்த இப்பணியை நாம் மறுக்கவில்லை! களத்தில் ஓய்வெடுக்க புலத்தில் நாம் எழுகிறோம்! உம்முடன் சேர்ந்து உம்பணியில் இணைகிறோம்! எதிரியின் வாயை அடக்க அயல் நாட்டின் வாயைப் பிழக்க தமிழரின் குரல் ஓங்கி ஒலிக்க உன்பேச்சை எதிர்பார்த்து நிற்கின்றோம்! ஆறதலைக்கேட்க உன்மக்கள் காத்திருப்போம்!!! வைசுணவி | ||
|
Popular posts from this blog
திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 02 மார்ச்சு 2020 கருத்திற்காக.. (திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 5/6 தொடர்ச்சி) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6 8.8.10.மக்கள்பண்[பு] இல்லா தவர் [குறள்.997] அறிபொருள்: மனித நேயம் சார்ந்த வாழ்க்கை 8.8.11.எற்றென்று இரங்குவ செய்யற்க [குறள்.655] அறிபொருள்: இரங்கத் தக்க செயல்களைச் செய்யாமை 8.8.12.உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவ[து]ஆம் நட்பு [குறள்.788] அறிபொருள்: நண்பர்களின் துன்பத்தை உடனே நீக்குதல் 8.8.13.சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூது [குறள்.934] அறிபொருள்: சிறுமைகள் பல செய்து சீர் அழிக்கும் சூதினை ஆடாமை 8.8.14.பிறர்க்[கு]இன்னா செய்யாமை [குறள்.311] அறிபொருள்: பிறர்க்குத் துன்பம் செய்யாமை 8.8.15.அறவினை யா[து]எனின் கொல்லாமை [குறள்.321] அறிபொருள்: எந்த உயிரையும் கொல்லாமை 8.8.16.பிறப்[பு]ஒக்கும் எல்லா உயிர்க்கும் [குறள்.972] அறிபொருள்: பிறப்பியல் சமன்மையை மதித்துச் செயல்படுதல் 8....
Comments
Post a Comment