பசிக் கொடுமையிலே பரிதவிக்கிறார் பால் முகம் மாறாத ஈழத்துப் பாலகர்கள்.



கால் வயிறு கஞ்சிக்கு

கடப்பாரையோடுகடும் வெயிலிலே

உணவு தேடுகின்றார்.

ஊட்டமில்லாத உணவை

நாள்தோறும் உண்பதினால்

வாட்டமான முகத்துடன்

சோட்டமாக வாழுகின்றார்

நம் பாலகர்;.

ஒட்டிய வயிறோடும்

வற்றிய கண்ணோடும்

வாழ்பவர் ஒரு பக்கம்

அறு சுவை மறந்து

ஒரு சுவையாவது

கிடைக்குமா என

ஏங்குபவர் ஒரு பக்கம்

பால் கேட்கும் பாலகனுக்கு

இதயத்தை இரும்பாக்கி

இருண்ட உலகத்தில்

உணவைத் தேடி

அலைபவர் ஒரு பக்கம்

பஞ்சம் தலை விரித்தாட

பட்டினியும் கை கோர்க்க

அடம்பன் கொடியும் உணவாகும் நிலை

தனி ஒருவனுக்க உணவு இல்லையெனில்

ஜெகத்தினை அழித்திடுவோம்என்றான் பாரதி.

கொடுமையில் பெரிய கொடுமைபசிக் கொடுமை

பட்டினியால் பாலகர்கள் நம் தாய் நாட்டில் பரி தவிக்க

பால் பழம் அருகிலிருந்தும்

பாபா படம் போட்டால் தான்சாப்பிடுவேன்

என்கிறதுபுலம் பெயர்ந்த குழந்தை.

சற்று சிந்திப்போம்சாவை விரட்டுவோம்

பட்டினிக்கொடுமையில்பரிதவிக்கும் எம்

உறவுகளைபலம் கொண்டு காத்திடுவோம்;

நன்றி வணக்கத்துடன்

ரத்னா.

www.tamilkathir.com

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue