ஐ.நா.முன்றலிலே உண்மைய்க்காய் உயிர்தந்தமுதலாம் தற்கொடைமுருகதாஸ்.

புலம் பெயர் மண்ணில் ஜெனிவாப் பெருநகரில் ஐ.நா.முன்றலிலே உண்மைய்க்காய் உயிர் தந்தமுதலாம் தற்கொடையே முருகதாசே!

உன் முகமறியேன் -ஆனால்உன் உணர்வைப்புரிந்து கொண்டேன்....சாவதென்று முடிவெடுத்த எத்தனைபேர் - மறுகணமே எதையெதையோ எண்ணிதம் முடிவை மாற்றிடுவார்.

ஆனால் நீ! தன்னந் தனியனாய் இலண்டனில் இருந்து வந்திறங்கியிருக்கிறாய்...

நீதிகெட்ட உலகுபுரிந்து கொள்ளும்படி தமிழன் வரலாற்றைத் தொட்டு தடம் மாறாமல் நியாயங்களை நிரைப்படுத்தி உறைப்பாய் உரைத்து எழுதியிருக்கிறாய்....

நீ பிறப்பெடுத்த தேதமிழிற்காய் என்பதாய் உனதுயிரை ஐ.நா.வின் முன்றலிலே தீயில் எரித்து வைத்தாய்....

நீ எரிந்து போகவில்லை தமிழர் உள்ள தேசமெங்கும் விரிந்து போனாய்....

உலகின் மனச் சாட்சியில் விழுந்து விட்ட பேரிடியானாய்.....

நீ நாதியற்றுப்போய் கையறு நிலையில் மரணித்தாய் என்று எதிரியும் சொல்லமாட்டான் உனது மரணத்தால் தமிழர் படும் வேதனையை உலகிற்குச் சொல்வதற்கு பெரிதாய் ஒரு கைகொடுத்தாய்....

உண்டகையின் ஈரம் உலருமுன் இரண்டகம் புரிவோர் வாழும் உலகிலே கண்டம் கடந்து நீ வாழ்ந்திட்ட போதிலும் -உன் எண்ணம் யாவுமே -தமிழ் ஈழத்தில் நிறுத்தினாய்....

ஐ.நா. முன்றலில் மரணவேதனையில் -நீ உருண்டு புரள்கையில் உன் உடலின் தசைத் துண்டுகள் வீதிகளில் கிளிந்து சிதறிக் கிடந்ததை பார்த்த தமிழ் மக்கள் கொதித்துப் போனார்கள்.

உன்னை வணங்குகிறேன் -உன் தியாகத்தைப் போற்றுகின்றேன் ஆனால்,இனிமேலும் இது போலயாரேனும் மடிவதனை ஏற்கவில்லை....

ஏற்கனவே 04.02.2009ல் எனது உணர்வுகளைப் பதிவுசெய்தேன்....

இப்படியான சாவுகளை நிறுத்தி சரித்திரத்தை மாற்றிவிடசாதனைகள் செய்வதென்றுமுடிவெடுங்ள் என்று....

ஆனால்,யார் கண்ணிலும் காட்டாமல் எனது மட்டிலேயே பத்திரப் படுத்திவிட்டேன்....

காலம் காலமாய் அதுவே என்பழக்கமாய்ப் போனது...

இன்று கவலையடைகிறேன் அன்றே வெளியிட்டிருந்தால் உன்போன்ற ஒருவனின் மரணத்தை நிறுத்தியிருக்கலாமா?என்று.

அதனால், நன்றோ.. தீதோ... என்கருத்தை உடனே வெளியிடுவதென்றோர் முடிவிற்கு ஆளானேன்.

இதுபோல் யாரும் உரிமைக்குரல் கொடுக்கும் எண்ணம் வந்த பின்னாலே நாள் பார்த்துத் தயங்காதீர் உடனேயே செயல் வடிவாக்குங்கள்.....

களம் வெல்லப்புலம் நின்று பலம் சேருங்கள் இந்தஉண்மை மகன் இறப்பை எண்ணிவிறைப்பாகுங்கள்...

இவன்,வசதிகளைத் துறந்துவிட்டு இறப்பெய்தினான் -ஆனால் தமிழரது வரலாற்றில் உயிர்ப் பெய்தினான்.

நாமும்,தமிழ்வாழ முடிந்தவரை உழைத்தாகுவோம் - என்றும் களைப் பென்ற வார்த்தையினைப்புறந்தள்ளுவோம்....

நாளும் சோர்வகன்று சுறுசுறுப்பாய் சுழன்றாடுவோம் தமிழீழவிடியலினைப் பாடும்வரைநடந்தாகுவோம்...

www.tamilkathir.com


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue