| மெய் | ||
| முள்ளி வாய்க்காலில் அள்ளி வைத்த கொள்ளியில் ஆங்காங்காய் அவிந்து போன தேசமக்கள் தீர்வொன்றும் அற்றும் தேடுவாரற்று செத்துப் போனீர்கள் சாவடைந்த நீங்கள் சரிந்து ஒரு நாளில் மீதியான நாம் சாவு வரும் வரை நோவுள்ளோம் நொந்துள்ளோம் விழிக்குள்ளிருக்கும் பூவல் தூர்ந்து தொலைந்ததாக மொழிக்குள் முனுகல் முழு நீள பொருளாச்சு ! எங்களுக்குள்ளிருந்து எல்லாமே வெளிப்போனதாக எப்போதும் சொல்கிறது இதுபோல சோகம் இன்னொன்றிருந்திடுமா ? இங்கே ஜடங்களாக இறப்பற்றுக் கிடக்கின்றோம் திறப்பதற்கு சாவிகள் தோதற்று போனாச்சு காரியங்கள் யாவுமே காணாத்து போயிற்று இந்த யுகத்தில்---என்ன ஒர் இருக்கையைத் தேடலில். இத்தனை விலையா ? இருக்குமா இம்மட்டும் வளமாக வாழ்ந்து வாரியிறைத்த வன்னியரே வாழ்ந்த தரை தேட காத்திருக்கும் காட்சி காணவா ? காலமெல்லாம் கணங் கணமாய் பார்த்திருந்தோம் ! மண்ணை நோக்கின்றோம், மறு விநாடி மெய்யுணர விண்ணைப் பார்க்கின்றோம் மனதை எங்கிலுமே -மாறி ஒட்டிவிடச் செய்கின்றோம் ஒட்டாது தள்ளுவன ஓடோடி வந்தொட்ட கரைகடந்து நெஞ்சழவே முகம் பார்த்து பேச்செழா வித்தைக்குள் வாழ்வானோம் ! - கோசல்யா - | ||
|
Popular posts from this blog
திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 02 மார்ச்சு 2020 கருத்திற்காக.. (திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 5/6 தொடர்ச்சி) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6 8.8.10.மக்கள்பண்[பு] இல்லா தவர் [குறள்.997] அறிபொருள்: மனித நேயம் சார்ந்த வாழ்க்கை 8.8.11.எற்றென்று இரங்குவ செய்யற்க [குறள்.655] அறிபொருள்: இரங்கத் தக்க செயல்களைச் செய்யாமை 8.8.12.உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவ[து]ஆம் நட்பு [குறள்.788] அறிபொருள்: நண்பர்களின் துன்பத்தை உடனே நீக்குதல் 8.8.13.சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூது [குறள்.934] அறிபொருள்: சிறுமைகள் பல செய்து சீர் அழிக்கும் சூதினை ஆடாமை 8.8.14.பிறர்க்[கு]இன்னா செய்யாமை [குறள்.311] அறிபொருள்: பிறர்க்குத் துன்பம் செய்யாமை 8.8.15.அறவினை யா[து]எனின் கொல்லாமை [குறள்.321] அறிபொருள்: எந்த உயிரையும் கொல்லாமை 8.8.16.பிறப்[பு]ஒக்கும் எல்லா உயிர்க்கும் [குறள்.972] அறிபொருள்: பிறப்பியல் சமன்மையை மதித்துச் செயல்படுதல் 8....
Comments
Post a Comment