மெய் | ||
முள்ளி வாய்க்காலில் அள்ளி வைத்த கொள்ளியில் ஆங்காங்காய் அவிந்து போன தேசமக்கள் தீர்வொன்றும் அற்றும் தேடுவாரற்று செத்துப் போனீர்கள் சாவடைந்த நீங்கள் சரிந்து ஒரு நாளில் மீதியான நாம் சாவு வரும் வரை நோவுள்ளோம் நொந்துள்ளோம் விழிக்குள்ளிருக்கும் பூவல் தூர்ந்து தொலைந்ததாக மொழிக்குள் முனுகல் முழு நீள பொருளாச்சு ! எங்களுக்குள்ளிருந்து எல்லாமே வெளிப்போனதாக எப்போதும் சொல்கிறது இதுபோல சோகம் இன்னொன்றிருந்திடுமா ? இங்கே ஜடங்களாக இறப்பற்றுக் கிடக்கின்றோம் திறப்பதற்கு சாவிகள் தோதற்று போனாச்சு காரியங்கள் யாவுமே காணாத்து போயிற்று இந்த யுகத்தில்---என்ன ஒர் இருக்கையைத் தேடலில். இத்தனை விலையா ? இருக்குமா இம்மட்டும் வளமாக வாழ்ந்து வாரியிறைத்த வன்னியரே வாழ்ந்த தரை தேட காத்திருக்கும் காட்சி காணவா ? காலமெல்லாம் கணங் கணமாய் பார்த்திருந்தோம் ! மண்ணை நோக்கின்றோம், மறு விநாடி மெய்யுணர விண்ணைப் பார்க்கின்றோம் மனதை எங்கிலுமே -மாறி ஒட்டிவிடச் செய்கின்றோம் ஒட்டாது தள்ளுவன ஓடோடி வந்தொட்ட கரைகடந்து நெஞ்சழவே முகம் பார்த்து பேச்செழா வித்தைக்குள் வாழ்வானோம் ! - கோசல்யா - | ||
|
பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்
அகரமுதல 18 9, வைகாசி 21, 2048 / சூன் 04 , 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 04 சூன் 2017 கருத்திற்காக.. (பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 2/8 – தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 கவியரங்கக்கவிதை மயில்பொறியை வானத்தில் பறக்க வைத்தோம் மணிபல்லத் தீவிற்குப் பறந்து சென்றோம் குயில்மொழியாள் கண்ணகியை அழைத்துச் செல்லக் குன்றுக்கு வானஊர்தி வந்த தென்றே ‘ உயில் ‘போன்று நம்முன்னோர் எழுதி வைத்த உண்மைகளை அறிவியலின் அற்பு தத்தை பயில்கின்ற காப்பியத்தில் படித்த தெல்லாம் பார்தன்னில் நனவாகக் காணு கின்றோம் ! அணுப்பிளந்த செய்திதனை ஔவை சொன்னால் அவிழ்த்துவிட்ட புளுகுமூட்டை என்று ரைத்தார் அணுக்குண்டைப் பொக்ரானில் வெடித்த போதோ அருந்தமிழன் அறிவுதனைப் போற்றி நின்றார் ! முணுமுணுத்தார் அம்புமுனை நெருப்பைக் கக்கி முன்னேறிச் சென்றதினைப் பொய்யே என்றார் முணுமுணுத்த வாய்பிளந்தே இசுகட் என்று முகிழ்த்தஏவு கணைகண்டு
Comments
Post a Comment