அன்புத் தமிழகமே! வணக்கம்,இந்தக் கவிதையினை அனைவரும் படியுங்கள். இதிலுள்ள இந்தியக் காங்கிரசார் பற்றியும் தமிழ் மக்களின் எதிர்கால நிலைப்பாடுகள் பற்றியும் நீங்கள் சிறப்பாகப் புரிந்துகொள்ளலாம்..

ஆப்பிழுத்த குரங்கர்கள் - எங்கள்

தமிழ்த்தேசம் தோர்க்குமென்று நினைப்பாரோ.!?

அதனாலும் உறுதியொன்று நாம்கொள்ள இதுவாச்சு தக்க நேரம்.

பொன்னான பூமியிலேதமிழ்க் கண்ணான ஈழதேசம் - இன்று

ஒப்பாரி ஓலமிட - ஆங்கே

கொத்தணிக் குண்டெறிந்து கொல்கிறானே கோத்தபாயாக் குண்டர்கள்.

முண்டங்களாய் பிண்டங்களாய் - எம்

தமிழன் அறுபட்ட மிருகம்போலஅங்கங்கள் சிதறிப்போய்க் கிடக்கிறானே

அவரொடு ஏதறியாப் பாலகரும் சாகிறதே கொத்துக் கொத்தாய்..!?

தட்டி அதைக் கேட்பதற்கோ நிறுத்த அதைச்சொல்வதற்கோ

நாதிகள் தாம் ஏதுமற்ற

நிலையாச்சே இவ்வுலகில்.

அன்றென்றால்... பாரதமே படுகுழியுள் போகுமென்று

பாக்கிஸ்த்தானாய்..! பங்களாதேசாய்..!!

இந்தியாவாய்..!!! பிய்த்தெடுத்த எங்கள்

பாரதமக்களினை... மதமென்றும் இனமென்றும்

பிய்த்துப் பிரித்தெடுத்து - எங்கள்

அமைதிவாழ்வைக் குலைத்தவர்கள்...குலைந்துபோச்சு

அமைதியென்று - தம்

இரும்புக் கரங்களினால் - எம்மீதுஅடிபோட்டும்

வதைபோட்டும் அடக்குவதே - எங்கள்

இந்தியப் பொதுமறைகளன்றோ..!ஆனாலும்... ஆனாலும்..

தென்னகக் குடிகள்தான் - இந்திய

மக்களின் ஒற்றுமைக் கண்களென - எங்கள்

உயிர்மூச்சாய் கோசங்களிட்டவாறே இந்தியக் கரைகளோரம் - போர்(க்)

களங்களிலே எங்களையே நாம் கரைத்தோம்... தமிழர்

எங்களைத்தான் தியாகித்தோம். எத்தனை தடவைகள்

தான்பணமெனவும் பொன் பொருளெனவும்அள்ளியள்ளி நாம் கொடுத்தோம்..!?

அதனிலும் மேலாக - தமிழ் உறவான

எங்களையே அறுத்தெறிந்துகார்க்கிலிலே தங்கள்

இன்னுயிரைதியாகங்கள் செய்தாரே தமிழர்கள்.

அன்றென்றால்...வெள்ளையன் பிடியினிலே

பல நூறு வருடங்களாய்அடிமையாய்க் கிடந்துளன்ற பாரதமண்

மீட்கத் தமிழன் கொடுத்திட்ட தியாகங்கள் கொஞ்சமா நஞ்சமா..!?

அதைப் பட்டியல் போடவும் முடியுமா..?

திருப்பூர்க் குமரன் முதல்...

திருநெல்வேலி வாஞ்சிநாதன் வரை...

பாரத சுதந்திரம் வேண்டியே - எம்மினம்

அன்று எமைத் தீயாக்கி வென்றவர்கள்.இன்றென்றால்...

சிங்களன் திமிர்புரியும் தென்னகக் கொடி மண்ணில் - எங்கள்

தொப்புள்க் கொடி உறவெல்லாம் விட்டில்ப் பூச்சிகள் போல்

எரிகுண்டின் தாக்குதலால் - தினம்

எரிந்து புகைந்து வெந்து மடிகிறதே...என்செய்வோம்..!

என்செய்வோம்..!?தடாவென்றும் பொடாவென்றும்

வடநாட்டான் சட்டத்தால்வதைபட்ட மண்ணெமதில்

அமைதிவழிப் போராட்டம்மதிப்பற்றுப் போனதுவோ..!?

இந்தியத் தென்னாட்டில்தெருத் தெருவாய்

ஊரூராய் தமிழ் ஈழ மண்மீதின்

அவலத்தைஅணைப்பதற்கு மனிதங்கள் - நாம்

மனிதப் பிணைச் சங்கிலியாய் அல்லோலப் படுகையிலும் - எங்கள்

பதாதைகளின் கோரிக்கை கோசங்கள் எல்லாமும்

அதன்மேலாய்முடியாமல் ஏம்பலித்துஎங்களையே நாமெரித்தோம் - அவைகூட

வடநாட்டான் ஆதிக்கக் காதுகளில்..!?

தென்னாட்டான் விசர்வேசம் என்றாகி - மீண்டும்

எம்மீது தடைமேலே தடைபோட்டும்

எங்களது ஈழத்து உறவுகளை அழித்தொழிக்கும் இராணுவக் குண்டர்முதல்

அத்தனை உசாத் துணைகள் வரை

சியோனிஸக் கோத்தபாயா குழுமத்திடம்

கொண்டுபோய்ச் சேர்த்து நின்றுஅழிக்கின்றார் காங்கிரசார்.

எங்கள்தொப்புள்க்கொடி உறவுகளோ...எரிந்து புகைந்து - அவர்

வெந்து மடிகிறதை... முண்டங்களாய்

பிண்டங்களாய் - எம் தமிழன்

அறுபட்ட மிருகம் போலஅங்கங்கள் சிதறிப்போய்க் கிடக்கிறதை

ஏதறியாப் பாலகரும் சாகிறதை - தம்

செய்மதியால் பார்க்கிறாரே - அதில்

ஏதறியாப் பாலகரும் துடிதுடித்து சாகிறதும் தெரியலையோ?

எங்களை மட்டுமல்ல - இந்தஉலகினையும் ஏமாற்றி வைத்திருக்கும்

சியோனிஸ சிறிலங்காவும் இந்தியக்காங்கிரசும்.

மண்ணெமதில் வேண்டுமன்றோ?

தமிழ் மானமுள்ள மறத் தமிழனாய் நாமிருந்தால்

காங்கிரசுக் கட்சியென்ற சொல்லினையே

துலைத்திடுவோம்நாடெங்கள் தென்னகத்தில்.

அத்துடனே... கலர் ரீவி தரும் கருணாநிதியானாலும்

எந்தவொரு கட்சியுடன் - காங்கிரசார்கூட்டுகளை வைத்தாலும்..!?

அக் கூட்டுகளின் கட்சிகளை - நாம்முழுமையாக நீக்கிடுவோம்.! நீக்கிடுவோம்..!!

அப்படி நாம் நீக்கிடும்கால் எமைத் தமிழராகப் பெற்றெடுத்த

எதுயிர்த் தமிழ்த் தாயினுக்கு - நாம்செய்யும் பெருமையெனும் உபகாரம்.

என் வீடே வாழ்க்கையென சுவர் நான்குள் சுருளாமல்விழித்தெழுந்து வாருங்கள்.

காங்கிரசார் மூஞ்சிகளில் கரிபூசிப் புறமுதுகு காட்டிடவே!

அன்று வெள்ளையனை விரட்டினோமே

அது போல இன்று தென்னகத்தால் காங்கிரசை விரட்டிடுவோம்

அது போல இன்று எனதன்புச் சகோதர சகோதரிகளே!

உங்களது ஒப்பற்ற உயிர்களினை எரித்தாரென்ற

சேதிகளைக் கேளாமல் காங்கிரசின் பிடியிருந்து மீண்டதுவே தென்னாடு - என்ற

பார்முழுதும் சேதிகொண்டு தாருங்கள்.

அத்துடனே... மனித வாழ்வியலின் பலமான - எங்கள்

வாக்குகளைச் சரியான முறைகளிலேபயன்படுத்தித் தென்னாட்டைக் காத்திடுவோம்.

நாம் இதனை ஏற்றிங்கு எடுக்கின்றோம் திடசங்கற்பம்.

- மா.செ.-

www.tamilkathir.com


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue